Thursday, July 14

இராமநாதபுரமும் அகமுடையார்களும்

 

ராமநாதபுரம் மாவட்டம்  வாலாந்தரவையில் இருக்கும் மருதிருவர் சிலை

தமிழகம் முழுவதும் அகமுடையார் இனத்தினர் வசித்து வருகின்றனர் பெரும்பாண்மையாக வசித்து வரும் இடங்களில் ராமநாதபுரமும் ஒன்று.ராமநாதபுரம்பாண்டியர்கள்,பல்லவர்கள்,சோழர்கள்,வாணதிராயர்கள்,நாயக்கர்கள்,சேதுபதிகள்,நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் என பலரது ஆளுகைக்குட்பட்டிருந்தது.அகமுடையார்கள் இப்பகுதியில் பூர்விகமாக பன்நெடுங்காலமாக வாழந்து வருகின்றனர்.கி.பி. 1628இல் கூத்தன் சேதுபதி கோயில் யானை மீதுஅமர்ந்து நகர்வலம் வந்தபோது தமது வலிமையை நிருபித்துக் காட்ட மன்னர் அமர்ந்து இருந்த யானையின் வாலைப் பிடித்து யானை மேலும் நகரவிடாமல் நிறுத்திவிட்டார் முத்து விஜயன் சேர்வை அன்பளிப்புகள் வழங்கி அவரைப் பாராட்டிய சேது மன்னர் அவருக்கு நாள்தோறும் கோயிலில் இருந்து உணவு வழங்க உத்திரவிட்டார்.இந்த வீரச்செயல் சிற்பமாக ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ளது.சேதுபதிகளின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாகவும் அமைச்சர்களாகவும் அகமுடையார்கள் விளங்கினர்.சேதுபதிகளுக்கும் அகமுடையர்களுக்கும் மோதல்களும் நிகழ்ந்துள்ளன இதனால் அகமுடையார்கள் வேறு இடங்களுக்குகுடிபெயர்ந்துள்ளனர்.படைவீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக குடிபெயரும் போது ராமநாதபுரம் என தங்கள் ஊரின் பெயரை புதிதாக வந்த இடத்திற்கு சூட்டி உள்ளனர்.தமிழகத்தில் கோவை,தஞ்சை போன்ற பகுதிகளில் ராமநாதபுரம் உள்ளது மேலும் மலையாவிலும் உள்ளது.சொக்கப்பன் சேர்வைக்காரர்,கங்கையாடி பிள்ளை,பாண்டியூர் பெருமாள் சேர்வைக்காரர்,வைரவன் சேர்வைக்காரர்,ரெகுநாத காங்கேய சேர்வைக்காரர்,வெள்ளையன் சேர்வைக்காரர்,வணங்காமுடி பழனியப்பன் சேர்வை,மருது பாண்டியர்கள் மற்றும் முத்துஇருளப்ப பிள்ளை என அகமுடையார் குலத்திலே ராமநாதபுரத்தில் உதித்த சிறப்புவாய்ந்தவர்கள் பலர்.பாம்பன் ஸ்வாமிகளும் இம்மண்ணிலே அவதரித்தவரே.வைரவன் சேர்வை ரணபலி முருகன் கோயில் பெருவயலில் எழுப்பியுள்ளார்.வெள்ளையன் சேர்வை மிகுந்த போர் திறன் பெற்றிருந்தார் நாயக்கர்களும் மறவர்களும் அஞ்சும் அளவிற்கு வலிமையானவராக இருந்தார்.மதுரை கோட்டையை கைப்பற்ற மைசூர் அரசரின் பிரதிநிதியாக வந்த தளபதி கோப்புடன் சண்டையிட்டு வெற்றி பெற்று நாயக்க மன்னருக்கு சேதுபதியின் வேண்டுதலுக்கு இணங்க முடிசூட்டி வைத்தார்.வாணதிராயர்,பல்லவராயர்களுக்கு பிறகு அகமுடையார் இனத்தில் தோன்றிய ராஜதந்திரி என கூறலாம்.திருநெல்வேலி பாளையக்காரர்கள் மீது படையெடுத்து பலரை கைது செய்தார் இதனை விரும்பாத சேதுபதி சேர்வையை ராமநாதபுரத்திற்கு திரும்புமாறு கட்டளையிட்டார்.இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி சேதுபதியை மாற்றிவிட்டு வேறொரு சேதுபதிக்கு முடி சூட்டி வைத்தார்.தென் தமிழ்நாட்டு மக்களின் பஞ்சத்தைப் போக்க முல்லைப் பெரியார் அணைத் திட்டத்தை முதலில் வடிவமைத்தவர் பிரதானி முத்துஇருளப்ப பிள்ளையே.இவர் காலத்தில் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டது சொக்கத்தான் மண்டபம் இவர் கட்டியதே.இவருடைய திருஉருவ சிலையும் கோயிலில் உள்ளது.இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.இவர்மீது புலவர்கள் பலர் செய்யுட்கள் இயற்றியுள்ளனர்.பெரிய சரவணக் கவிராயர் என்பவர் இவர்மீது ‘காதல்’ பிரபந்தம் இயற்றியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள மருதராசர் சிலை


ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை(2காங்கிரஸ் 1சுயேட்சை) சண்முக ராஜேஸ்வர சேதுபதி வெற்றி பெற்றுள்ளார்.இதற்கு பின் தங்கப்பன்(திமுக),சத்தியேந்திரன்(திமுக),T.இராமசாமி(தொடர்ச்சியாக 3 முறை அதிமுக),M.S.K.இராஜேந்திரன்(திமுக) என 6 முறை அகமுடையர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.பின்னர் தென்னவன்(அதிமுக, இசை வேளாளர்)நான்கு முறை இஸ்லாமியர்களும் தற்போது மணிகண்டன்(அதிமுக, மறவர்) வெற்றிபெற்றுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியை பொறுத்த வரை ஒரு முறை தவிர அனைத்து முறையும் அகமுடையர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் மருது பாண்டியர்களும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பெரிய மருது சிலை


மதுரை மீனாட்சி அம்மனின் மீது அளவில்லா பக்தி கொண்டவர்களாக மருது பாண்டியர்கள் திகழ்ந்தனர்.மதுரை மீனாட்சி திருக்கோயிலில் சேர்வைக்காரர் மண்டபம் கட்டினார்கள்.திருகல்யாண மண்டபத்தையும் பழுது நீக்கி கட்டினார்.மருது குடும்பத்தினரின் சிலைகள் இம்மண்டபத்தில் உள்ளது.அன்னை மீனாட்சியின் சன்னதியில் 1008 திருவிளக்குகளை கொண்ட இரு திருவாட்சி விளக்குகளை அமைத்து என்றென்றும் ஒளியூட்டி நிற்குமாறு செய்தனர்.இந்த தீபங்களுக்கு நெய் வார்க்க ஆவியூர் என்ற கிராமத்தை மானியமாக விட்டனர்.அன்னையின் பூசைக்காக உப்பிலிக்குண்டு,கடம்பங்குளம்,சீகனேந்தல்,மாங்குளம்,மங்கையேந்தல்,புவனேந்தல் முதலிய கிராமங்களை மானியமாக விட்டனர்.

Wednesday, December 16

பாண்டிய நாட்டு ராஜகுல அகமுடையார்

பாண்டிய நாட்டின் தலை நகரம் மதுரை , மதுரை மாவட்டத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.அவர்கள்,
• கீழமண்டு அகமுடையார் 
• மேலமண்டு அகமுடையார்

மேல மண்டு 33 கிராமங்கள் அடங்கியதாகும்

1. வெயிலாம்பட்டி
2. மங்கல்ரேவ்
3. வீரப்பட்டி
4. வீராளம்பட்டி
5. சின்ன பூலாம்பட்டி
6. கோட்டைப்பட்டி
7. சேடப்பட்டி
8. சல்லுப்பபட்டி
9. தொட்டணம் பட்டி
10. அப்பக்கரை
11. தொட்டிய பட்டி
12. அலப்பலச்சேரி
13. கரிகாலம் பட்டி
14. கண்டுகுளம்
15. திருமாணிக்கம்
16. செம்பட்டி
17. பாப்பு நாயக்கன் பட்டி
18. சங்கரலிபுரம்
19. பழையூர்
20. அல்லிகுண்டம்
21. சின்ன கட்டளை
22. பூலாங்குளம்
23. பெரிய மீனாட்சி புரம்
24. துள்ளுக்குட்டி நாயக்கனூர்
25. வாக்குளம்
26. வண்ணாங்குளம்
27. வண்டாடுபட்டி
28. வண்ணம்பட்டி
29. குருவப்பன் நாயகன்பட்டி
30. நல்லமரம்
31. நாட்டணி பட்டி
32. கன்பம்
33. சாத்தங்குடி
ஆகிய 33 கிராமங்கள் மேலமண்டு அகமுடையார் கிராமங்கள் ஆகும்

கீழமண்டு  :

மதுரை-லிருந்து விருதுநகர் செல்லும் இருப்பு பாதைகளுக்கு இடையே உள்ளது திருமங்கலம் இதன் கிழக்கே உள்ள 48 கிராமங்களும் கீழமண்டு என்று அழைக்கபடுகின்றது.

1. மருதங்குடி
2. மாந்தோப்பு
3. அழகிய நல்லூர்
4. ஆவல் சூரம்பட்டி
5. அரசம்பட்டி
6. சென்னம் பட்டி
7. குராயூர்
8. கொக்குளம்
9. திருமால்
10. கூடக்கோவில்
11. கொம்பாடி
12. உப்பிலிக்குண்டு
13. உலகாணி
14. மொச்சிக்குளம்
15. மைக்குடி
16. எட்நாளி
17. விருசங்குளம்
18. ஆலங்குளம்
19. கல்லுபட்டி
20. வெப்பன்ங்குளம்
21. கல்லணை
22. பாறைக்குளம்
23. வலையங்குளம்
24. வீரப்பெருமாள் கோவில்
25. கிருஷ்ணாபுரம்
26. புதூர்
27. தும்பக்குளம்
28. கடமாங்குளம்
29. சீகனேந்தல்
30. மாங்களம்
31. மங்கை ஏந்தல்
32. பூவனேந்தல்
33. இலுப்பகுளம்
34. ஆவீயூர்
சில கிராமங்கள் விடுபட்டுள்ளது உட்பட மொத்தம் 48 கிராமங்களும் கீழமன்டாகும்.

நன்றி ஜெ.பாலசந்தர் 

Tuesday, December 15

கோவில் திருப்பணித் தென்றல் கம்பரன்பர் வே.இராஜீ சேர்வை


கம்பரன்பர்  வே.இராஜீ சேர்வை அவர்கள் தன் வாழ்நாளை இறைத் தொண்டிலேயே கழித்தவர்.இதனால் இவர் திருமங்கலத்தின் கோவில் திருப்பணித் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.
இன்று திருமங்கலத்தில்  வைணவத்தின் சிறப்பு மிக்க அடையாளமாக இராஜாஜி தெருவில் கம்பீரமாக அமைந்திருக்கும் பெருமாள் கோவில் இவரின் பெரு முயற்சியால் உருவானதே ஆகும். இன்று கோவில் இருக்கும் இடமும் ,கோவிலின் முன்பு(கோவிலின் எதிரே) பேருந்து நிலையம் செல்லும் பாதையில் இருக்கும் பரந்த இடமும் இவர் காலத்தில் கோவிலுக்காகப் பெறப்பட்டதே.
இதே போல் சைவ நெறி தழைக்க திருமங்கலம் அரசு மருத்துமனை எதிரில் ஈசனின் வடிவமான “மூனீஸ்வரர்” ஆலயத்தை எழுப்பினார்.இன்று சிறிய இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் அந்நாட்களில் விரிவான இடத்தில் 20க்கும் மேற்பட்ட சிலைகளுடன் வெகு பிரசித்தமாக அமைந்திருந்தது.
அதுமட்டுமல்ல திருமங்கலம் புளியங்குளம் கிராமத்தில் (பி.கே.என் கல்லூரி செல்லும் பாதையில்) “செந்திலாண்டவர் ஆசிரமம்” ஒன்றை நிறுவி அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.மேலும் ஆறுபடை முருகனுக்கு தனி சன்னதி அமைக்க முயன்றார்(  இவர் இறந்ததால் கோவில் கட்டிடங்கள் பாதியில் இருப்பதும்,ஆறுபடை முருகன் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெறாது இருப்பதும் இன்றைய நிலை)
ஓவ்வொரு திருப்பணிக்குப் பின்பும் கடுமையான உழைப்பு அடங்கியிருந்தது. திருப்பணிக்காக  ஒருவரை ஒருமுறை அல்ல ,பலமுறை சந்தித்து ,இந்து தர்மங்களை எடுத்துக்கூறி  சம்மதிக்க வைத்து  பின்னர் தொடர்ந்த முயற்சியினால் இந்தக் கோவில்கள் உருப்பெற்றன.
இறைப்பணி மட்டுமின்றி,இலக்கிய பணியிலும் ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.இலக்கியப் பேரவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் இறைவணக்கத்தோடு ஆரம்பிப்பார்.இவர் இலக்கியப்பணியை பாராட்டி 1981ம் வருடம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்ட கம்பன் கழகத்தார் இவருக்கு “கம்பரன்பர்” என்ற பட்டத்தை வழங்கினர்
மேலும் பல ஆலயங்கள் திருமங்கலத்தில் பின்னாளில்  இவரைப் பின்பற்றி உருவாக எடுத்துக்காட்டாகவும், பல தர்மப் பணிகளுக்கு  ஊக்கமூட்டுபவராகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு இறைவனின் திருப்பணிகளில் திலைத்த இவர்  2006ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

நன்றி திருமங்கலம் இணையதளம்

Friday, December 11

மதுரை சித்திரை திருவிழாவும் அகமுடையார்கள் அறிந்து கொள்ளவேண்டிய செய்தியும்!

கங்கையிலும்  புனிதமானது நூபுர கங்கை என ஆழ்வார்களால் பாடப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகருக்கு நடத்தப்படும்  விழாக்களில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது; மதுரையின் பாரம்பரியத் திருவிழாவாகவும் போற்றப்படுகிறது. முன்னொரு காலத்தில் சுதபஸ் மகரிஷி நூபுர கங்கையில் தீர்த்தமாடி, அழகர் சுந்தரராஜ பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தார். அந்த சம யம் அங்கு வந்த துர்வாச முனிவரை அவர் கவனிக்க வில்லை. அதனால் துர்வாசர் கோபம் கொண்டு, ‘மண்டூக பவ’ என்று சாபமிட்டு விடுகிறார்.
ஒரு  தவளையாகப் போகும்படி தன்னை சபித்த துர்வாசரிடம், சுதபஸ் மகரிஷி சாப விமோசனம் கோரினார். துர்வாசர் அறிவுறுத்தியபடி மதுரை வைகை  நதிக் கரையில் சுதபஸ் தவம் இயற்றினார். சித்திரை மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து, சுதபஸ் மகரி ஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இவ்விழா துவக்கப்பட்டது.
சித்திரைத் திருவிழாவின் ஆறாம்  நாளான ஏப்ரல் 26 அன்று பெருமாள் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வருகிறார். அன்று பகல் 1  மணி அளவில் தங்கக் கருட வாகனத்தில் அலங்கார பூஷிதராக, சுதபஸ் மகரிஷிக்கு (மண்டூக முனிவர்) சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். இந்நிகழ்ச்சியில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். அதன் பின்னர், கருட வாகனத்தில் வண்டியூர் அனுமார் கோயிலுக்குச் சென்று பக்தர் களின் காணிக்கைகளை ஏற்பார், பெருமாள். இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால்வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.இத் தேனூர் கிராமமானது அகமுடையார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக ,பாரம்பரியமாக வசித்து வரும் கிராமம் ஆகும்.
திருமலை நாயக்கர் ம துரையை ஆண்டபோது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை  மாதத்திற்கு மாற்றினார். இவ்வாறு காலம் காலமாக தேனூர் கிராமத்தில் நடந்து வந்த இந்த  வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை மதுரைக்கு மாற்றிய போது,அதற்க்கு பிரதிபலனாக மதுரையில் தேனூர் மண்டபத்தை எழுப்பி,தேனூர் கிராம மக்களுக்கு மரியாதையும் செய்யும் உரிமையை செப்புப் பட்டயமாக எழுதித் தந்தார்.
மேலும் சிறப்பாக மற்ற மண்டபங்களில் அழகர் பெருமாள் எழுந்தருளும் போது,மண்டபத்தின் உரிமை உடையவர்களால் கோவிலுக்கு குறிப்பிட்ட பணம் செழுத்த வேண்டும்,ஆனால் தேனூர் மண்டபத்தில் ஸ்வாமி இறங்குவதற்க்கு இறைவனே பணத்தை தேனூர் கிராம மக்களுக்கு அளித்து வருவது நடைமுறையாகி அது இன்று வரை தொடர்கிறது.

Thenur Mandapam
Thenur Mandapam
கூடுதல் செய்தி: 
மாவலி வானதிராயர் இவரே மதுரைப் பாண்டியர்களை வென்றவர். இன்றைய அழகர்கோவிலை நவினப்படுத்திக் கட்டியவர்,கோட்டையை எழுப்பியவர். இவர் தம் கல்வெட்டுகளில் தம்மை மாவலி அகம்படிய வானாதிராயன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.

இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.
முருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை போன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் 
ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.




பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.சித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.
சித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்?”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த?”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.
இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.
முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.




முத்து இருளப்ப பிள்ளை

இன்று தென் தமிழ்நாட்டு மக்களின் பசிபோக்கும் உயிர் காக்கும் தண்ணீராக விளங்குவது முல்லைப் பெரியார் அணையாகும்.இந்த அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் தீட்டியவர்  இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரி ,நமது அகமுடையார் இனத் தோன்றல் முத்து இருளப்ப பிள்ளை ஆவார்கள்.
ராமநாதபுர சமஸ்தானத்தில் திவானாக பணியாற்றிய முத்து இருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தில் பிள்ளைப் பட்டம் உடையவர்.இவருடைய சிந்தனையில் 1789-ம் ஆண்டு இங்கு அணை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
தென் தமிழகத்தில், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் வீடு முழுக்க நிறைந்திருந்தது பட்டினியும் வறுமையும்தான். ‘ஆடைக்கும் கோடைக்கும் வாடாத பனை மரங்களே’ அசந்துவிட்டன. அப்பகுதி மக்களின் ஒரே நீராதாரமாய் இருந்த வைகையிலும் வருடத்துக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். அதுவும் நிலையில்லாதது. தண்ணீரைப் பகிர்வதில் சிவகங்கைக்கும், ராமநாதபுர சமஸ்தானத்துக்கும் தகராறுகள் நடந்து மக்களை மேலும் சோதித்தது.
அதேவேளையில் பெரிய அளவில் விவசாயம் இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு, மேற்கு மலையில் உருவான ஆறுகள் மூலம் கடல் வணிகம் கைகொடுத்தது.
இதை நன்கு அறிந்திருந்த முத்து இருளப்ப பிள்ளையின் மனதில் மேற்கே உருவாகி வீணாக கடலில் கலக்கும் ஆற்றினை கிழக்கே திருப்பி வைகையோடு இணைத்தால் வேளாண்மை பெருகும் அதோடு மக்களின் பசிப்பிணியும் நீங்கும் என்ற யோசனை உதித்தது.
உடன் இந்த யோசனையை சேதுபதியிடம் தெரிவித்தார் மந்திரி முத்து இருளப்ப பிள்ளை.இதைக் கேட்டவுடன் தன் சமஸ்தானத்தின் நீண்ட நாளைய பிரச்சனைக்கு தீர்வு கண்டுப்பிடிக்கப்பட்டதை உணர்ந்த மன்னர் தனது அமைச்சரான முத்து இருளப்ப பிள்ளையோடு ஒரு குழுவினை அனுப்பி  முழு விவரம் அறிந்துவரச் சொன்னான்.
அதுவரை மனித காலடிகளே படாத, சூரிய கதிர்களே உட்புக முடியாத, மிகப்பெரிய ராணுவம்போல அணிவகுத்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் உதவியாளர்களோடு சென்ற முத்து இருளப்ப பிள்ளை, சொல்லெண்ணாத் துயரத்துக்கும் விஷக்கடிகளுக்கும் இடையே, அங்கிருந்த ஆறுகளின் ஊற்றுகளைத் தேடினார். அவற்றை தன் கற்பனை திறனுக்குள் கொண்டுவந்து  முல்லை ஆறு,பெரியாறு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு அணைகட்டிட திட்டம் வகுக்க கட்டுமானத்துக்கான சாத்தியங்களை வழிவகுத்தார்.
அந்த மகிழ்ச்சியோடு மன்னனிடம் வந்தார். அங்கேதான் விதி விளையாடியது. ஏற்கெனவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்துக்குப் புதிதாக அணைகட்ட போதுமான நிதி இல்லை என்பதால், இருளப்ப பிள்ளையின் திட்டம் கைவிடப்பட்டது. அவருடைய உழைப்பும் வீணானது. அதற்கடுத்த வருடங்களில் மீண்டெழுந்த தாது வருடப் பஞ்சமும் மக்களை மேலும் இம்சித்தது. இன்றைய எத்தியோப்பியாவானது அன்றைய தமிழகம்.
மீண்டும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆங்கில ராணுவ பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில் முயற்சி செய்து 1896 ஆம் ஆண்டு கட்டி முடித்தார் என்பது வரலாறு.
இவ்வாறு முல்லைப் பெரியார் அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் வகுத்த முத்து இருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தைச் சார்ந்தவர் என்பது அகமுடையார்கள் பெருமைப்பட வேண்டிய விடயம் ஆகும்.
இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.

முத்திருளப்ப பிள்ளை அவர்களின் சமாதி 

 

இவரின் சமாதி தற்போது பாராமரிப்பின்றி உள்ளதாகவும், இவரின் வாரிசுகள் இச்சமாதி ஆலயத்தை புதுப்பிக்க விரும்புகிறார்கள் என்பது நமக்கு தெரியவரும் செய்தி!

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...