Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, March 7

அகமுடையார் தொகுதிகள்

அகமுடையார் 25000 வாக்குகள் மேல் உள்ள தொகுதிகள் சென்னை மாவட்டம் தவிர.

1.திருமங்கலம்
2.திருப்பரங்குன்றம்
3.சாேழவந்தான்
4.மதுரை கிழக்கு
5.மதுரை வடக்கு
6.மதுரை தெற்கு
7.மதுரை மேற்கு
8.நிலக்காேட்டை
9.ஆத்தூர்
10.பழநி
11.அருப்புக்காேட்டை
12.திருச்சூழி
13.இராமநாதபுரம்
14.திருவாடானை
15.மானாமதுரை
16.சிவகங்கை
17.அறந்தாங்கி
18.ஆலங்குடி
19.பேராவூரணி
20.பட்டுக்காேட்டை
21.கும்பகாேணம்
22.நன்னிலம்
23.திருவாருர்
24.மன்னார்குடி
25.திருத்துறைப்பூண்டி
26.வேதராண்யம்
27.மயிலாடுதுறை
28.தாெண்டமுத்தூர்
29.சூலூர்
30.கிணத்துக்கடவு
31.சிங்காநல்லூர்
32.பாெள்ளாச்சி
33.உடுமலை
34.காங்கேயம்
35.ஆத்தூர்
36.கங்கவல்லி
37.சேலம் வடக்கு
38.ஒமலூர்
39.பெண்ணகரம்
40.தருமபுரி
41.பாப்பிரெட்டிபட்டி
42.அரூர்
43.பாலக்காேடு
44.திருப்பத்தூர்
45.ஜாேலார்பேட்டை
46.வேலூர்
47.ஆற்காடு
48.அரக்காேணம்
49.காட்பாடி
50.இராணிப்பேட்டை
51.திருவண்ணாமலை
52.கலசபாக்கம்
53.ஆரணி
54.பாேளூர்
55.செய்யாறு
56.வந்தவாசி
57.செஞ்சி
58.திண்டிவனம்
59.விழுப்புரம்
60.கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ஸ்ரீ பெரும்புதூர்
பல்லாவரம்
அம்பத்தூர்
திருவள்ளூர்
திருத்தணி
கும்மிடிப்பூண்டிமலூர்
பெண்ணகரம்
தருமபுரி
பாப்பிரெட்டிபட்டி
அரூர்
பாலக்காேடு
திருப்பத்தூர்
ஜாேலார்பேட்டை
வேலூர்
ஆற்காடு
அரக்காேணம்
காட்பாடி
இராணிப்பேட்டை
திருவண்ணாமலை
கலசபாக்கம்
ஆரணி
பாேளூர்
செய்யாறு
வந்தவாசி
செஞ்சி
திண்டிவனம்
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ஸ்ரீ பெரும்புதூர்
பல்லாவரம்
அம்பத்தூர்
திருவள்ளூர்
திருத்தணி
கும்மிடிப்பூண்டி

Friday, February 2

மதுரை சிதம்பர பாரதி சேர்வை


1905-ம் ஆண்டு ரங்கசாமி சேர்வை, பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பதினாறாவது குழந்தையாக மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ என்னும் இல்லத்தில் பிறந்தார் சிதம்பர பாரதி. ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து போக படிப்பு பாதியிலேயே நின்றது. ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் தலைமையில் போராடிய தீவிரவாதிகளான வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணியம் சிவா ஆகியோரின் வன்முறைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அவர்களின் வழியில் இயங்கினார். வீர் சாவர்க்கர் எழுதிய ‘1857 – முதல் சுதந்தரப் போர்’ என்ற நூல் வெள்ளையரால் தடை செய்யப்பட்டிருந்தது. அதைப் படிப்பவர்களும் விநியோகிப்பவர்களும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அதை மொழிபெயர்க்கச் செய்து காங்கிரஸ் மாநாடுகளில் விநியோகித்தார் சிதம்பர பாரதி. அந்த ஆண்டு 1927. (மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சௌந்தரம்.) 1928-ல் சென்னையில் ‘தேசோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்தினார். 1922-லிருந்து 1942 வரையிலான காலகட்டத்தில் ஏழு முறை - மொத்தம் 14 ஆண்டுகள் - வடநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்.மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆண் போராளிகள் பெரும்பாலானோர் சிறையில் இருந்த நிலையில் பெண் தொண்டர்கள் ஓர் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்து பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டுத் திரும்பி விட்டனர் போலீசார். அருகிலிருந்த கிராமத்து மக்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்தக் காரியத்தைச் செய்த போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவர் மீது திராவகம் வீசினார்கள். அது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிதம்பர பாரதி. சிறையிலிருந்து வெளிவந்த பின் தன் உறவுக்காரப் பெண்ணான பிச்சை அம்மாளை மணந்தார். பதினைந்து சகோதர சகோதரிகளோடு பிறந்த சிதம்பர பாரதிக்கு ஒரே மகள். பெயர் சண்முகவல்லி.சுதந்தரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957-ல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் அவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

Thursday, November 30

டி.ராஜரத்தினம்


அகமுடையார் இனத்தில் பிறந் திமுக சார்பில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் 1967 மற்றும் 1971 பூந்தமல்லி தொகுதியில் 1977 மற்றும் 1980ல் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தவர்.

Saturday, March 11

மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர்


ரெத்தினசாமி தேவர் அவர்கள் 1971ஆம் ஆண்டு பார்வர்டு ப்ளாக் சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏவாக  வெற்றி பெற்றார். இவருடைய மகள் இராமநாதபுரம் முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன் ஆவார்.

படங்கள்: www.agamudayarotrumai.com

Thursday, March 9

டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார்


சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியவாதியும் தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள் அன்றைய கோவை மாவட்டத்தின் திருப்பூரில் வளமான குடும்பத்தில் பிறந்தார் (1903). தந்தை பிரபல வணிகர். திருப்பூர் உயர்நிலைப் பள்ளியிலும் கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் 1925-ல் பட்டம் பெற்றார்.ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், திருமணம் செய்துகொள்ளாமல் இறுதிவரை, ஏறக்குறைய துறவி போலவே எளிமையாக வாழ்ந்து வந்தார். தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கை, குடும்பம், வெற்றிகரமான தொழில் அனைத்தையும் தியாகம் செய்தவர்.1930-ல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் தொடங்கினார். பின்னர் பெரியநாயக்கன் பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்துக்கு அந்தப் பள்ளியை மாற்றினார். கோவையில் ஒரு ஹோம் சயின்ஸ் கல்லூரியையும் தொடங்கினார்.இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்து ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்டப் போராட்டங்களில் பங்கேற்றார். 1930 முதல் 1942 வரையிலான காலகட்டங்களில் நான்கு முறை சிறை சென்றார். காங்கிரசில் இணைந்து பணியாற்றினார்.கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டத்தகாதவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்வுக்காகப் பாடுபட்டார். 1934-ம் ஆண்டு ஹரிஜன நலவாழ்வு நிதிக்காக நன்கொடை திரட்டத் தமிழகம் வந்த காந்தியடிகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். விதவைகள் மறுமணத்துக்காகவும் போராடி வந்தார்.



கல்வி நிலையங்களிலும் ஜாதிப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், தனது பள்ளியில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர் களையும் சேர்த்துக்கொண்டார். 1957-ல் பெண் கல்விக்காக கல்லூரி ஒன்றைத் தொடங்கினார். அது தற்போது அவிநாசிலிங்கம் மனை யியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது. இவர் எழுதிய திருக்கேதாரம் என்ற பயண நூல் மிகவும் பிரசித்தம். மேலும் பொருளா தாரம், காந்தியின் கல்விக் கொள்கை குறித்தும் எழுதியுள்ளார்.1946-ல் சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். டி. பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் சென்னை மாகாண அமைச்சரவையில் கல்வியமைச்சராகப் பணியாற்றினார். பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு வந்தார். 1946-ல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவினார். இந்த அமைப்பு, தமிழில் முதன் முறையாக பத்து அதிகாரங்கள் கொண்ட என்சைக்ளோபீடியாவை வெளியிட்டது.நூலகங்களை சீரமைத்தார். பாரதியார் பாடல்களை தேசிய மயமாக்கினார். ஆறாம் வகுப்பிலிருந்து திருக்குறளைப் பாடத்திட்டத் தின் ஓர் அங்கமாக அறிமுகம் செய்தார். 1952-ல் திருப்பூர் நாடாளு மன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1958 முதல் 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1975-ல் இவரது தலைமையிலான ஒரு குழு சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்டது. சிறந்த விவசாயக் கொள்கை மட்டுமே வெற்றிகரமான தொழில்மயமாக்கலுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று நம்பினார்.1970-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது, ஜி.டி. பிர்லா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த கல்வியாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், 1991-ம் ஆண்டு, நவம்பர் மாதம், 88-வது வயதில் காலமானார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

Monday, March 6

M.D.தியாகராஜ பிள்ளை


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற  தொகுதியில் 1952,1957,1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.1958ல் அகமுடையார் மாநில சங்கத்தை சென்னையில் நிறுவி சமூக தொண்டாற்றினார்.

கோ.ஐய்யப்பன்

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக 2006-2011 வரை திமுக சார்பில் இருந்தவர்.

Monday, January 16

ஏ.ஆர்.பெருமாள்

அருப்புக்கோட்டை ராமுத்தேவர் - பாக்கியம் அம்மாள் ஆகியோரின் புதல்வராக 17.5.1921ல் ஏ.ஆர்.பெருமாள் பிறந்தார்.



அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்கின் தலைவராக இருந்தவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை முழுமையாக எழுதியவர். 12 வயதில் இருந்து தேவரோடு பயனித்தவர் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் காரியாபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை வென்றவர்.



1937 சட்டபேரவை தேர்தல் சமயம் முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மஹாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர் பின்னர் தேவர் வெளியே வந்து மக்களை வணங்கி விட்டு காரில் ஏறி சென்றார் அக்காலத்தில் தலைவர்களின் பெயரை கூறி விட்டு ஜே என்று கூறுவது வழக்கு.கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் இவ்வாறு கூறிக்கொண்டு தேவரின் காரை பின்தொடர்ந்து வர.சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு அச்சிறுவனை காரில் ஏற்றி யாரப்பா நீ என கேட்க நான் அருப்புக்கோட்டை ராமு தேவரின் புதல்வர் பெருமாள் என தேவரிடம் கூறினான் சிறுவன்.அந்த சிறுவனே பின்னாளில் (அருப்புக்கோட்டை ராமுத்தேவர் பெருமாள்)  எ.ஆர்.பெருமாள் என  அழைக்கப்பட்டார்.



பசும்பொன் தேவர் தனது சொத்தில் ஒரு பகுதியை வழங்கும் அளவுக்கு தேவரின் நம்பிக்கைக்குரியவராய் விழங்கினார்.அச்சொத்தை அவர் தேவர் பெயரில் இயங்கும் தரும ஸ்தாபனம் ஒன்று நிறுவி இனைத்து விட்டார்.தேவர் தனது சொத்தை 16 பேருக்கு பிரித்தளித்தார் இதில் 12 பேர் ஸ்தாபனத்தில் இனைத்து விட்டனர்.முத்துராமலிங்க தேவரின் மறைவிற்கு பின் கட்சியை வலுப்படுத்த பாண்டி மண்டலத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தேவர் புகழ் பரப்பினார்.



முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் அமைத்திடவும்,கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் முதுகளத்தூர் கலவரத்தினால் பாதிக்க பட்டவர்களை விடுதலை செய்யவும் மூக்கையா தேவரோடு இனைந்து பணியாற்றினார்.அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இனக்கமாக இருந்த காரணத்தினால் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக  அறிவிக்கவும் மாவட்டத்திற்கு தேவர் பெயரை சூட்டவும் காரணமாக இருந்தவர்.



அருப்புக்கோட்டை பெரிய தெரு பதினெட்டு தலைக்கட்டு அகம்படியர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அகம்படியர் மஹாலில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியவர் மேலும் தேவரின் வெண்கலச்சிலையை மஹாலில் திறந்து வைத்தார்.பசும்பொன் தேவர் திருமண மண்டபம் கட்டியவர்.



ஏ.ஆர் அவர்களுக்கு முன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.உடல்நலக்குறைவின் காரணமாக 21.4.1998இல்  இயற்கை எய்தினார்.

Sunday, January 8

R.V.ஜானகி ராமன்

புதுச்சேரியின் முதல்வராக 1996-2000 வரை இருந்தவர்.தொடர்ந்து ஐந்து முறை (1985,1990,1991,1996,2001) நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர் அகமுடையார் இனத்தை சேர்ந்த ஜானகி ராமன் அவர்கள்.

ஓம் சக்தி சேகர்

அகமுடையார் இனத்தை சேர்ந்த ஓம் சக்தி சேகர் அவர்கள்
புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளார் 2006 மற்றும் 2011.

Wednesday, January 4

நகைமுகன்

தனித்தமிழர் சேனை நிறுவனர்.



1972ல் பொறியியல் பட்டதாரி..
திராவிட மாணவர் கழகப்பொறுப்பாளர்..
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களுடன் இடதுசாரி தத்துவத்தில் நம்பிக்கைகொண்டு தொடர்பு..
மேற்குவங்க இடதுசாரி இயக்கம்போல்
தமிழக அரசியலைப்படைக்க ஒத்த்க கருத்துள்ள நட்பு மற்றும் உறவுகளுடன் முயற்சி..
அகில இந்திய பார்வர்ட்பிளாக் கட்சித்தலைமையுடன் நெருக்கம்..
மத்திய அரசின் உயர்பதவியில் இருந்தபோதும் சமூகநீதியில் நம்பிக்கை கொண்டிருந்ததால் அகில இந்திய அளவில் "BAMSCEF" என்ற அமைப்பை திருவாளர்கள்:கன்சிராம்,சிம்ரத்சிங் மான்,லால்டெங்கா ,சந்திரசேகர் போன்றோருடன் சேர்ந்து உருவாக்கம்..
தமிழகத்தில்
திருவாளர்கள்:பி கே மூக்கையாத்தேவர்,
நல்லகண்ணு,ஆறுமுகசாமி,கா பா பழனி,அனந்தநாயகி,மணலி கந்தசாமி,தா பாண்டியன்,கூத்தகுடி சண்முகம்,அன்பில் தர்மலிங்கம்,கோவைச்செழியன்,மருத்துவர் இராமதாசு,பழ.நெடுமாறன்,கி.வீரமண
ி,அய்யணன் அம்பலம்,திருமாவ
ளவன்,தனியரசு..என அவரின் தொடர்புப்பட்டியல் தொடரும்..
திராவிடன் வீரம்,நகைமுகன் என்ற இதழ் நடத்தியவர்..
மண்ணின் மைந்தர் கொள்கையில் ஈர்க்கப்பட்டு மராட்டிய மாநில அரசியலில் இக்கொள்கையை நடைமுறைப்படுத்திட போராடிய சிவசேனாவின் பால்தாக்கரேயுடன் சந்தித்து,இலங்கையில் மண்ணைக்காக்கப்போராடும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைவிடச்செய்தவர்...
தந்தை பெரியாரின் சிந்தனையை ஏற்று
பின்னர் கர்நாடகத்தமிழர்,இந்தியத்தமிழர்
,உலகத்தமிழர்..பிரச்சனைகளுக்காக குரல்கொடுத்து,ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்தவர்...
1990ல் திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைதாகி 169 நாட்கள் சிறை சென்றவர்.
1991ல் திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கக் காரணமாயிருந்தவர்..
திராவிட இயக்கம் நடத்தும் தலைமைகளுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தபோதி
லும்
சமூகநீதி, இன உணர்வு,மண்ணின் மைந்தர் போன்ற கொள்கைகளில் சமரசம் காட்டாதவர்..
அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில்
தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படையாக பேசியும் எழுதியும் வந்தவர்..அதனால் அவருக்கு உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு நெருக்கமாக இருந்தது..
நான்காம் தூண் என்ற நூலை எழுதியவர்..
அரசியலில் எதிர்கருத்துக்க
ொண்டவர்களிடமும் நட்பு பாராட்டியவர்..
பகுத்தறிவும்
காங்கிரஸ் எதிர்ப்பும் கொண்டிருந்தாலும்
அவரது நூலை வெளியிட்டவர்
காஞ்சி சங்கராச்சாரியார்..
பெற்றுக்கொண்டவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..
2009ல் ஈழப்பிரச்சனையில்
திமுக நிலைப்பாட்டில் வெறுத்து
அதிமுக தலைமைக்கு ஆதரவாக செயல்பட்டவர்..
விடுதலைப்புலிகளுக்கு மத உணர்வு இல்லை என்றாலும் இந்துமத அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசியலை இந்திய பாஜக தலைமைகளுக்கு ஆதாரங்களைத்திரட்டி அத்வானி மூலம் தமிழீழத்துக்கு விடிவு கிடைக்க முயற்சித்தவர்..
திமுக எதிர்ப்பு உணர்வும்
தமிழரல்லாத அதிகாரிகளின் கோபமும்
இணைந்து இவர்மீது போலியாக 18 வழக்குகள் திட்டமிட்டு போடப்பட்டன..
பிணைபெற்று வரவர கைது நடவடிக்கை..
இதய நோயாளி
சக்கரை வியாதி
இரத்தக்கொதிப்பு
விபத்த்தில் கை முறிவு...
இத்தனையும் இருந்தும் அவரது துணிச்சல் மிக்க செயல்பாடுகள் 65 வயதுவரை மட்டும் இவ்வுலகில் அவரால் வாழமுடிந்தது..
சென்னை உயர்நீதிமன்ற சுவரொட்டி வழக்கு..
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக வழக்கறிஞர் ஆச்சாரியா வழக்கிலிருந்து விலக சட்டநெருக்கடி...
அவரது வாழ்க்கை சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் எனும் கிராமத்தில் தொடங்கி..
தமிழக அரசியலில் தலைப்புச்செய்தி
யாகி..
தமிழக அதிகாரிகளுடனான தொடர்பின் வழியாக பாதிக்கப்பட்டோருக்கு உதவும்கரமாகி..
எதிர்பாராத வகையில்
14.3.2016ல் மதுரையில் இயற்கை எய்தினார்.

நன்றி:அரப்பா தியாகராஜன்

Monday, January 2

பாலசுப்பிரமணிய முதலியார்

அண்ணாவின் அரசியல் குரு:

அண்ணாவின் அரசியல் குரு பி.பா என்கிற
பாலசுப்பிரமணியன் முதலியார்



13 வருடம் சண்டே அப்சர்வர் என்ற ஆங்கில பத்திரிகை நடந்தியவர் பெரியாருக்கு முன்பாகவே அண்ணா பொதுவாழ்க்கைக்கு அரசியல் குரு ஆவார் .


இன்று அண்ணாவை அனைவருக்கும் தெரியும் அவரை உருவாக்கிய இவரை?


இந்த அகமுடையாரின் புகழ் பரவ செய்வோம் போற்றுவோம்.



Thursday, July 14

முக்குலத்தோர் மற்றும் முதலியார் அரசியல் செய்யும் அகமுடையார்கள்

முக்குலத்தோர் அரசியல் செய்யும் அகமுடையார்கள்:

சேதுராமன் - அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர்
 


கருணாஸ் - முக்குலத்தோர் புலி படை தலைவர் 



முதலியார் அரசியல் செய்யும் அகமுடையார்:

 ஏ.சி.சண்முகம் - புதிய நீதி கட்சி நிறுவனர்

 

 

Wednesday, September 30

ஏ. செயமோகன்

ஏ. செயமோகன் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியில்  1984,1989,1991 என மூன்று முறை காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்,

Tuesday, September 29

க. இராசாராம்

க. இராசாராம் (K. Rajaram, 26.08.1926 - 8.2.2008), தமிழகத்தின் முன்னாள் அமைச்சராவார்.இவர் சேலம் மாவட்டத்தின் ஆத்தூரில் பிறந்தவர். இவரது தந்தை பெ. கஸ்தூரி வருவாய்த்துறை அலுவலரும்,நீதிக்கட்சி அனுதாபியுமாவார்.இராசாராம் தருமபுரியில் பள்ளிப் படிப்பை முடித்து, பின்னர் சேலத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அரசியலில்

கல்லூரிக் கல்விக்கு பின், திராவிடர் கழகத்தில் இணைந்து ஈ. வெ. இராமசாமியின் செயலராகப் பணியாற்றினார்.
அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கருணாநிதி, எம். ஜி. ஆர் , ஜெயலலிதா அமைத்த அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
1977 இல் இராசாராம், இரா. நெடுஞ்செழியன், இரா. செழியன் ஆகியோர் சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினர். மக்கள் திமுகவின் தலைவராக நெடுஞ்செழியனும், பொதுச் செயலாளராக இராசாராமும் இருந்தனர். கட்சி தொடங்கிய 30 நாள்களில் மக்கள் தி.மு.கவை அ.தி.மு.கவுடன் இணைத்தனர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்றபோது வி. என். ஜானகி அணியில் 1989 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபின் 1991 தேர்தலில் சேலம் பனைமரத்துப் பட்டித் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சரானார். சிலகாலத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

மறைவு

2008 பிப்ரவரி 8 ஆம் நாள் சிறுநீரகக் கோளாற்றால் சென்னையில் காலமானார்.

சுயசரிதை

இவர் "ஒரு சாமானியனின் நினைவுகள்" என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

வகித்த பதவிகள்

  • 1962இல் கிருட்டிணகிரி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.
  • 1967இல் சேல நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.
  • 1971இல் திமுக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சர்.
  • 1980இல் தமிழகச் சட்ட மன்றப் பேரவைத் தலைவர்.
  • 1984இல் அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை, வேளாண்மைத் துறை அமைச்சர்.
  • 1996இல் அதிமுக அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சர்

Tuesday, September 22

டி.ராமசாமி

டி.ராமசாமி


டி.ராமசாமி முன்னாள் அமைச்சரும் 1977,1980,1984 என மூன்று முறை தொடர்ச்சியாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.ராமநாதபுரம் அரசரை வென்ற டி.தங்கப்பன் இவருடைய அண்ணன் ஆவார்.


ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள ராமசாமி அவர்களின் பதாகை

பி.வி.தேவர்


பி.வி.தேவர் 1967 நடந்த சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில்  காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.இவருடைய மகன் பி.வி.ராஜேந்திரன் ஆவார் இவரும் பிரபல அரசியல்வாதி ஆவார்.

Monday, September 21

பவானி ராஜேந்திரன்


பவானி ராஜேந்திரன் அவர்கள் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று மதுரை திருமங்கலத்தின் முன்னாள் எம்.எல்.ஏவான ரெத்தினசாமி தேவரின் மகளாக பிறந்தார்.இவருடைய கணவர் M.S.K.ராஜேந்திரன் அவர்கள் இராமநாதபுரம் எம்.எல்.ஏவாக இருந்தவர்.நாடாளுமன்ற எம்.பியாக இராமநாதபுரம் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு திமுக சார்பில் வெற்றி பெற்றார்.

எம்.எஸ்.கே.ராஜேந்திரன்

எம்.எஸ்.கே.ராஜேந்திரன் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார் மேலும்  தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.1989 ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தேடுகபட்டார்.இவருடைய மனைவி பவானி ராஜேந்திரன் ஆவார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...