Saturday, December 23

ராமசாமி சேர்வை


தென்னாட்டு வீர மருது பாண்டிய மன்னன் வரலாற்று கும்மியின் ஆசிரியர் ராமசாமி சேர்வை அகமுடையார் இனத்தவர்கள் பற்றிய சிறு குறிப்பை கூறுகிறார் (பெரும்பாலும் அகம்படியர்கள் தங்கள் வரலாற்றை எழுதவில்லை மிகச்சிலரே எழுதியுள்ளனர்) அதில் சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒரே ஷத்திரிய குலத்தில் உதித்தவர்கள் இவர்களின் வழித்தோன்றல்களான பல்லவர்களும் சித்தர்பிரான் சுந்தரானந்தர்,வங்கி மன்னன் கந்தவர்மன்,கலிங்கத்து கொற்றவன் கருணாகரன்,திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்,தொண்டைமண்டலச் சீமான் பச்சையப்ப முதலியார்,திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமிகளும்,சிவகங்கை மருது சகோதரர்களும் இந்த வழித்தோன்றல் என்பது சரித்திரம் கண்ட உண்மையாகும்.சிதம்பரம் நடராஜ கோயிலில் சிவபக்தியில் சிறந்த ஏழாயிரம் அகம்படியார் அணுக்கத் தொண்டர்கள் சேவை செய்தனர்.

Saturday, December 2

சேர்வைகாரன்

1844ல் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட தமிழ் ஆங்கில அகராதியில் சேர்வைகாரன் என்றால் சேனாதிபதி படைதலைவன் என்றே பொருள் குறித்துள்ளனர்.முதன்மை அதிகாரம் பெற்றவர்களாகவே அகமுடையார்கள் காலம் காலமாக வாழ்ந்துள்ளனர்.சோழர் பாண்டியர் கால கல்வெட்டுகளில் ஆரம்பித்து சேதுபதிகள் காலம் வரை அகமுடையார்கள் முதன்மையானவர்களாகவே திகழ்ந்துள்ளனர். அகமுடையாரின் ஒரு பிரிவாக சேர்வைகாரன் என்பதை குறித்து வைத்துள்ளனர் ஆனால் இப்போது அவ்வாறு எந்த பிரிவும் இருப்பதாக தெரியவில்லை.தென் தமிழகத்தை பொறுத்த வரை அகமுடையார்கள் சேர்வை பட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.வயிரவன் சேர்வைகாரர்,வெள்ளையன் சேர்வைகாரர், மருது சேர்வைகாரர் போன்ற பெரும் புகழ்பெற்ற அகமுடையார்கள் சேர்வைகாரர் பட்டம் சூடியவர்களே.



இராஜ குல அகமுடையார்கள் சேர்வை, சேர்வார் மற்றும் சேர்வாரன் என்று அழைக்கபடுகின்றனர்.

Friday, December 1

முதல் சமபந்தி விருந்து

அகமுடையார்கள் ஹிந்து சமயத்தவர்களாக பெரும்பாண்மையாக இருந்தாலும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை தழுவிய அகமுடையார்கள் உண்டு. 



கணகராய முதலியார் என்னும் அகமுடையார் புதுச்சேரி பகுதியில் பிரஞ்சுகாரர்களுடன் வணிகம் செய்தார் அவருக்கு உதவியாக அவர் மகன் வேலவேந்திர முதலியும் ஈடுபட்டுவந்தார் திடிரென்று அவர் இறந்துவிட்டார் இதனால் பெரிதும் துயருற்ற கணகராயர் தன் மகன் நினைவாக 1745 நவம்பர் 30ல் செய்ன்ட ஆண்டருஸ் சர்ச் அமைத்தார்.இந்நாளே முதல் முறையாக சாதி மதம் கடந்து சமபந்தி விருந்து தமிழகத்தில் நடைபெற்றது கணகராயரால். ஆணந்தரங்க பிள்ளை தனது நாட்குறிப்பில் சமபந்தி விருந்து குறித்து பதிவு செய்துள்ளார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...