Friday, December 11

முத்து இருளப்ப பிள்ளை

இன்று தென் தமிழ்நாட்டு மக்களின் பசிபோக்கும் உயிர் காக்கும் தண்ணீராக விளங்குவது முல்லைப் பெரியார் அணையாகும்.இந்த அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் தீட்டியவர்  இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரி ,நமது அகமுடையார் இனத் தோன்றல் முத்து இருளப்ப பிள்ளை ஆவார்கள்.
ராமநாதபுர சமஸ்தானத்தில் திவானாக பணியாற்றிய முத்து இருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தில் பிள்ளைப் பட்டம் உடையவர்.இவருடைய சிந்தனையில் 1789-ம் ஆண்டு இங்கு அணை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
தென் தமிழகத்தில், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் வீடு முழுக்க நிறைந்திருந்தது பட்டினியும் வறுமையும்தான். ‘ஆடைக்கும் கோடைக்கும் வாடாத பனை மரங்களே’ அசந்துவிட்டன. அப்பகுதி மக்களின் ஒரே நீராதாரமாய் இருந்த வைகையிலும் வருடத்துக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். அதுவும் நிலையில்லாதது. தண்ணீரைப் பகிர்வதில் சிவகங்கைக்கும், ராமநாதபுர சமஸ்தானத்துக்கும் தகராறுகள் நடந்து மக்களை மேலும் சோதித்தது.
அதேவேளையில் பெரிய அளவில் விவசாயம் இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு, மேற்கு மலையில் உருவான ஆறுகள் மூலம் கடல் வணிகம் கைகொடுத்தது.
இதை நன்கு அறிந்திருந்த முத்து இருளப்ப பிள்ளையின் மனதில் மேற்கே உருவாகி வீணாக கடலில் கலக்கும் ஆற்றினை கிழக்கே திருப்பி வைகையோடு இணைத்தால் வேளாண்மை பெருகும் அதோடு மக்களின் பசிப்பிணியும் நீங்கும் என்ற யோசனை உதித்தது.
உடன் இந்த யோசனையை சேதுபதியிடம் தெரிவித்தார் மந்திரி முத்து இருளப்ப பிள்ளை.இதைக் கேட்டவுடன் தன் சமஸ்தானத்தின் நீண்ட நாளைய பிரச்சனைக்கு தீர்வு கண்டுப்பிடிக்கப்பட்டதை உணர்ந்த மன்னர் தனது அமைச்சரான முத்து இருளப்ப பிள்ளையோடு ஒரு குழுவினை அனுப்பி  முழு விவரம் அறிந்துவரச் சொன்னான்.
அதுவரை மனித காலடிகளே படாத, சூரிய கதிர்களே உட்புக முடியாத, மிகப்பெரிய ராணுவம்போல அணிவகுத்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் உதவியாளர்களோடு சென்ற முத்து இருளப்ப பிள்ளை, சொல்லெண்ணாத் துயரத்துக்கும் விஷக்கடிகளுக்கும் இடையே, அங்கிருந்த ஆறுகளின் ஊற்றுகளைத் தேடினார். அவற்றை தன் கற்பனை திறனுக்குள் கொண்டுவந்து  முல்லை ஆறு,பெரியாறு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு அணைகட்டிட திட்டம் வகுக்க கட்டுமானத்துக்கான சாத்தியங்களை வழிவகுத்தார்.
அந்த மகிழ்ச்சியோடு மன்னனிடம் வந்தார். அங்கேதான் விதி விளையாடியது. ஏற்கெனவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்துக்குப் புதிதாக அணைகட்ட போதுமான நிதி இல்லை என்பதால், இருளப்ப பிள்ளையின் திட்டம் கைவிடப்பட்டது. அவருடைய உழைப்பும் வீணானது. அதற்கடுத்த வருடங்களில் மீண்டெழுந்த தாது வருடப் பஞ்சமும் மக்களை மேலும் இம்சித்தது. இன்றைய எத்தியோப்பியாவானது அன்றைய தமிழகம்.
மீண்டும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆங்கில ராணுவ பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில் முயற்சி செய்து 1896 ஆம் ஆண்டு கட்டி முடித்தார் என்பது வரலாறு.
இவ்வாறு முல்லைப் பெரியார் அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் வகுத்த முத்து இருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தைச் சார்ந்தவர் என்பது அகமுடையார்கள் பெருமைப்பட வேண்டிய விடயம் ஆகும்.
இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.

முத்திருளப்ப பிள்ளை அவர்களின் சமாதி 

 

இவரின் சமாதி தற்போது பாராமரிப்பின்றி உள்ளதாகவும், இவரின் வாரிசுகள் இச்சமாதி ஆலயத்தை புதுப்பிக்க விரும்புகிறார்கள் என்பது நமக்கு தெரியவரும் செய்தி!

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...