Thursday, July 14

இராமநாதபுரமும் அகமுடையார்களும்

 

ராமநாதபுரம் மாவட்டம்  வாலாந்தரவையில் இருக்கும் மருதிருவர் சிலை

தமிழகம் முழுவதும் அகமுடையார் இனத்தினர் வசித்து வருகின்றனர் பெரும்பாண்மையாக வசித்து வரும் இடங்களில் ராமநாதபுரமும் ஒன்று.ராமநாதபுரம்பாண்டியர்கள்,பல்லவர்கள்,சோழர்கள்,வாணதிராயர்கள்,நாயக்கர்கள்,சேதுபதிகள்,நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் என பலரது ஆளுகைக்குட்பட்டிருந்தது.அகமுடையார்கள் இப்பகுதியில் பூர்விகமாக பன்நெடுங்காலமாக வாழந்து வருகின்றனர்.கி.பி. 1628இல் கூத்தன் சேதுபதி கோயில் யானை மீதுஅமர்ந்து நகர்வலம் வந்தபோது தமது வலிமையை நிருபித்துக் காட்ட மன்னர் அமர்ந்து இருந்த யானையின் வாலைப் பிடித்து யானை மேலும் நகரவிடாமல் நிறுத்திவிட்டார் முத்து விஜயன் சேர்வை அன்பளிப்புகள் வழங்கி அவரைப் பாராட்டிய சேது மன்னர் அவருக்கு நாள்தோறும் கோயிலில் இருந்து உணவு வழங்க உத்திரவிட்டார்.இந்த வீரச்செயல் சிற்பமாக ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ளது.சேதுபதிகளின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாகவும் அமைச்சர்களாகவும் அகமுடையார்கள் விளங்கினர்.சேதுபதிகளுக்கும் அகமுடையர்களுக்கும் மோதல்களும் நிகழ்ந்துள்ளன இதனால் அகமுடையார்கள் வேறு இடங்களுக்குகுடிபெயர்ந்துள்ளனர்.படைவீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக குடிபெயரும் போது ராமநாதபுரம் என தங்கள் ஊரின் பெயரை புதிதாக வந்த இடத்திற்கு சூட்டி உள்ளனர்.தமிழகத்தில் கோவை,தஞ்சை போன்ற பகுதிகளில் ராமநாதபுரம் உள்ளது மேலும் மலையாவிலும் உள்ளது.சொக்கப்பன் சேர்வைக்காரர்,கங்கையாடி பிள்ளை,பாண்டியூர் பெருமாள் சேர்வைக்காரர்,வைரவன் சேர்வைக்காரர்,ரெகுநாத காங்கேய சேர்வைக்காரர்,வெள்ளையன் சேர்வைக்காரர்,வணங்காமுடி பழனியப்பன் சேர்வை,மருது பாண்டியர்கள் மற்றும் முத்துஇருளப்ப பிள்ளை என அகமுடையார் குலத்திலே ராமநாதபுரத்தில் உதித்த சிறப்புவாய்ந்தவர்கள் பலர்.பாம்பன் ஸ்வாமிகளும் இம்மண்ணிலே அவதரித்தவரே.வைரவன் சேர்வை ரணபலி முருகன் கோயில் பெருவயலில் எழுப்பியுள்ளார்.வெள்ளையன் சேர்வை மிகுந்த போர் திறன் பெற்றிருந்தார் நாயக்கர்களும் மறவர்களும் அஞ்சும் அளவிற்கு வலிமையானவராக இருந்தார்.மதுரை கோட்டையை கைப்பற்ற மைசூர் அரசரின் பிரதிநிதியாக வந்த தளபதி கோப்புடன் சண்டையிட்டு வெற்றி பெற்று நாயக்க மன்னருக்கு சேதுபதியின் வேண்டுதலுக்கு இணங்க முடிசூட்டி வைத்தார்.வாணதிராயர்,பல்லவராயர்களுக்கு பிறகு அகமுடையார் இனத்தில் தோன்றிய ராஜதந்திரி என கூறலாம்.திருநெல்வேலி பாளையக்காரர்கள் மீது படையெடுத்து பலரை கைது செய்தார் இதனை விரும்பாத சேதுபதி சேர்வையை ராமநாதபுரத்திற்கு திரும்புமாறு கட்டளையிட்டார்.இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி சேதுபதியை மாற்றிவிட்டு வேறொரு சேதுபதிக்கு முடி சூட்டி வைத்தார்.தென் தமிழ்நாட்டு மக்களின் பஞ்சத்தைப் போக்க முல்லைப் பெரியார் அணைத் திட்டத்தை முதலில் வடிவமைத்தவர் பிரதானி முத்துஇருளப்ப பிள்ளையே.இவர் காலத்தில் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டது சொக்கத்தான் மண்டபம் இவர் கட்டியதே.இவருடைய திருஉருவ சிலையும் கோயிலில் உள்ளது.இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.இவர்மீது புலவர்கள் பலர் செய்யுட்கள் இயற்றியுள்ளனர்.பெரிய சரவணக் கவிராயர் என்பவர் இவர்மீது ‘காதல்’ பிரபந்தம் இயற்றியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள மருதராசர் சிலை


ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை(2காங்கிரஸ் 1சுயேட்சை) சண்முக ராஜேஸ்வர சேதுபதி வெற்றி பெற்றுள்ளார்.இதற்கு பின் தங்கப்பன்(திமுக),சத்தியேந்திரன்(திமுக),T.இராமசாமி(தொடர்ச்சியாக 3 முறை அதிமுக),M.S.K.இராஜேந்திரன்(திமுக) என 6 முறை அகமுடையர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.பின்னர் தென்னவன்(அதிமுக, இசை வேளாளர்)நான்கு முறை இஸ்லாமியர்களும் தற்போது மணிகண்டன்(அதிமுக, மறவர்) வெற்றிபெற்றுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியை பொறுத்த வரை ஒரு முறை தவிர அனைத்து முறையும் அகமுடையர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...