Sunday, February 24

நாகப்ப தேவர்


கோவை இராமநாதபுரமும் ஒலம்பஸ் பேருந்து நிறுத்தமும்:





  • ஒலிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்பதே உண்மையான பெயர். பெயர்க் காரணத்துக்கு உரியவர், ஒரு விளையாட்டு வீரர். சுமார் 70 ஆண்டு களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டவர் நாகப்ப தேவர் (அகமுடையார்)
  • ஆனால், இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் அப்போது ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவில்லை. அதற்கு அடுத்த முறையும் போரின் பாதிப்புகளால் ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போனது இவரது துரதிருஷ்டம்.
  • அப்போது கோவையின் கலெக்டராக இருந்த மோரிஸ் என்கிற ஆங்கிலேயர் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி, இவரது வீடு அருகே அமைந்திருந்த பேருந்து நிறுத்தத்துக்கு ‘ஒலிம்பிக்ஸ்’ என்று பெயரிட்டார். அதன் பின் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும், நாகப்பத் தேவர் தனது வீட்டின் முன் ஒலிம்பிக் கொடி ஏற்றி, ஒலிம்பிக் தீபத்தைத் தனது தெருவில் ஏந்தி வருவதை வழக்கமாக்கிக்கொண்டார். நிறைவேறாத ஒலிம்பிக் ஆசையுடனேயே கடந்த 2007-ம் ஆண்டு இறந்துவிட்டார் நாகப்பத் தேவர்.
  • இவரின் நினைவாகவே கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு ஒலிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்ற பெயர் வைக்கப்பட்டது.நாளடைவில் இப்பெயர் ஒலிம்பஸ் என்று மக்களால் உச்சரிப்பு மாற்றி ஒலிக்கப்பட்டு இன்று ஒலிம்பஸ் பேருந்து நிலையம் என்றே வழங்கிவருகிறது.
  • கோவை இராமநாதபுரத்தில்  ஒரு தெருவிற்க்கு நாகப்ப தேவர் பெயரிடப்பட்டுள்ளது.
  • நாகப்பத்தேவர்  2007ம் வருடம் இறந்து போனாலும் ஒலிம்பஸ் பேருந்து நிறுத்தம் அவரது நினைவைத் தாங்கி இப்போதும் நின்று கொண்டிருக்கிறது.


ஐந்து இரண்டு உறவின் முறை அகமுடையார்

ஐந்து இரண்டு உறவின் முறை அகமுடையார் தேவர் பட்டம் கொண்டவர்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சில பகுதிகளில் பரவிவாழ்கின்றனர்.
ஐந்து இரண்டு என பெயர் காரணங்களாக சொல்லபடுபவை ஐந்து + இரண்டு = ஏழு ஊர்களில் கொண்டான் கொடுப்பான் உறவுமுறை கொண்டவர்கள் இந்த ஏழு ஊர்களும் சிவன் கோவில்களை மையமாக கொண்டு திருமண உறவை கொண்டிருந்தனர் வேறு ஊர்களில் இருந்து திருமண உறவு கொள்ளமாட்டார்கள் எனவே ஐந்து இரண்டு உறவின் முறை பெயர் வருவதற்கு காரணமாய் இருந்தது என சொல்லபடுகிறது.
ஏழு ஊர் சிவன் கோவில்கள்
1.காரக்கோட்டை
2.பெருமகளுர்
3.ஊமத்தநாடு
4.விளங்குளம்
5.கொரட்டூர்
6.அம்மையான்டி
7.ஒல்லனூர்
இந்த ஏழு ஊர் அகமுடையார்களுக்கு காரக்கோட்டை தலைமை கிராமம் ஆகும் இவர்கள் பொருளாதர அடிபடையில் மேன்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றனர் இன்றைய சூழலில் சமூகம் பரந்து விரிந்து காணப்படுகிறது இங்கு விவசாயம் என்பதே முக்கிய தொழிலாகும்.

நன்றி; அகமுடையார் தொகுதி

Saturday, February 23

சேலம் மாவட்டமும் அகமுடையார் பேரினமும்

"அகமுடையார் பேரினம்"
தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பல்வேறு பட்டப்பெயர்களுடன் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.



தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில்

"நாயக்கர், பிள்ளை, செட்டியார், சேர்வை, உடையார், அதிகாரி என்ற ஆறு பட்டப்பெயர்களுடனும், பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் வாழும் அகமுடையார் பேரினம் பலவேறு வரலாற்று அடையாளங்களையும். பல சான்றோர்களையும் ஈன்றுள்ளது.

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவர் பேரரசுகளின் பாதுகாப்பு அரணாக விளங்கிய, மகாபலி சக்ரவர்த்தியின் வழிவந்த, தமிழக வீரவரலாற்று தொன்மைகளில் சரித்திரம் படைத்த, சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகளூரை தலைநகராக வைத்து ஆட்சி செய்த "வாணக்கோவரையர்"களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,

  •  சேலம், பாகல்பட்டி எனும் சிவபுரி ஜமீன்தாரும்,மேட்டூர் அணை உருவாவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக, 1896ம் ஆண்டு, மேட்டூர் அணை கட்டுவதற்கு, ஆங்கிலேய அரசாங்கம் முடிவு செய்த போது, நீர்வளம், அணையின் ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்தவரும், மிகச்சிறந்த பொறியாளரும், முதுபெரும் தமிழறிஞருமான "பா.வே.மாணிக்க நாயக்கர்" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,

  •  சேலம் மாவட்டத்தில் நீதிக்கட்சியை வளர்த்தவரும், நீதிக்கட்சியின் முதன்மையான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகர்-அமைச்சருமான க.இராசாராம் EX.MP, EX.MLA, அவர்களின் தந்தையுமான "கஸ்தூரி பிள்ளை" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,

  • பழைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், நாமக்கலில் பிறந்தவரும், பாகல்பட்டி ஜமீன்தார் பா.வே.மாணிக்க நாயக்கர் உறவினரும், தமிழக அரசவை கவிஞரும், மிகச்சிறந்த கவிஞரும், கதை ஆசிரியரும், சட்ட மேலவை (MLC) உறுப்பினருமான "நாமக்கல் கவிஞர்" இராமலிங்கம் பிள்ளை அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,

  •  சேலம், செவ்வாய்பேட்டையின் மிகப்பெரிய வணிகர்களும், சேலம்-2, நெத்திமேடு, கரியப்பெருமாள் கோயில், ஞான தண்டாயுதபானி கோயில் ஆகியவற்றின் ஸ்தாபகர்களுமான "ஆ.நாகப்ப செட்டியார்- ஆ.பேரான் செட்டியார்" ஆகியோர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,

  •  சேலம், செவ்வாய்பேட்டை, தலையாரி ஆறுமுகம் நாயக்கர் அவர்களின் மகளும், சேலம், அயோத்தியாப்பட்டிணம் இராமர் கோயில் கோபுரத்தை கட்டியவரான தாண்டராய நாயக்கர் அவர்களின் மனைவியும், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயிலின் ஸ்தாபகருமான "தா.மீனாட்சி அம்மாள்" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,

  • சேலம் மாவட்டத்தில் நீதிக்கட்சியை வளர்த்தவரும், நீதிக்கட்சியின் முதன்மைத் தலைவர்களில் ஒருவருமான "கஸ்தூரி பிள்ளை" அவர்களின் அருமை மகனும்,திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் மாணவனும்,
  1. 1962 ஆம் ஆண்டு நடந்த "கிருஷ்ணகிரி" நாடாளுமன்றத் தேர்தலில் அத்தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
  2. 1967 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "சேலம்" நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
  3. 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "சேலம்-2" சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
  4. 1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "சேலம்" நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு தவறியவரும்,
  5. 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "பனைமரத்துப்பட்டி" சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
  6. 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "பனைமரத்துப்பட்டி" சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
  7. 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "சேலம்-2" சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக (ஜானகி அணி) சார்பாக இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு தவறியவரும்,
  8. 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "பனைமரத்துப்பட்டி" சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
  9. 1962, 1967 ஆம் ஆண்டுகளில் 2 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான
  10. 1971, 1980, 1984, 1991 ஆம் ஆண்டுகளில் 4 முறை சட்டமன்ற உறுப்பினருமான,
  11. 1971 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் (01-07-1973 முதல்) பிற்படுத்தப்பட்டோர் நலன், (02-07-1973 முதல் 23-09-1975 வரை) தொழிலாளர் நலன், (24-09-1975 முதல்) போக்குவரத்து அமைச்சருமான,
  12. 1985 ஆம் ஆண்டு அஇஅதிமுக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் (03-03-1985 முதல் 21-10-1986 வரை) தொழில் துறை, (22-10-1986 முதல் 24-12-1987 வரை) தொழில் (ம) வேளாண்மை அமைச்சருமான,1991 ஆம் ஆண்டு அஇஅதிமுக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் (24-06-1991 முதல் 31-10-1991) உணவு (ம) கூட்டுறவு அமைச்சருமான(21-06-1980 முதல் 24-02-1985 வரை) 
  13. தமிழக சட்டப்பேரவை தலைவராக (சபாநாயகராக) சட்டமன்றத்தை வழி நடத்தியவருமான, க.இராசாராம் EX.MP, EX.MLA, அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்.
  • சேலம் மாநகரின் முதல் மேயர் "டாக்டர் சூடாமணி" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினத்தின் உட்பிரிவான துளுவவேளாளர் குலம்.

  • சேலம் ஆத்தூர் வட்டாரத்தின் அகமுடையார் சாதி பெரியதனமான "தியாகி சடையப்ப நாயக்கர்" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் ஆத்தூர் அகமுடையார் பேரினம்.

  • சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத்தில் இருந்து 1962 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஆத்தூர் தொகுதியில் அகமுடையார் பேரினத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு சென்ற முதல் அகமுடையார் என்ற தகுதியை பெற்றவரும், தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் அவர்களின் நெருங்கிய நண்பருமான "அங்கமுத்து நாயக்கர்" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் ஆத்தூர் அகமுடையார் பேரினம்.

  • 1977 ஆம் ஆண்டு ஆத்தூர் சட்டமன்றத்தில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்து தோல்வி அடைந்தவரும், சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியின் முதல் சேர்மனுமான ஏ.எஸ்.சின்னச்சாமி அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம், ஆத்தூர் அகமுடையார் பேரினம்.

  •  சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியின் முன்னாள் சேர்மனுமான டாக்டர் மாணிக்கம் அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம், ஆத்தூர் அகமுடையார் பேரினத்தின் உட்பிரிவான துளுவவேளாளர் குலம்.

  •  சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், பேளூர் ஊரை பூர்வீகமாக கொண்டவரும், மெகா டிவியின் உரிமையாளரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும்,

  1. 1991 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "தர்மபுரி" நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு வெற்றி பெற்றவரும்,
  2. 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "சேலம்" நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
  3. 17-01-1993 முதல் 16-05-1996 வரை காங்கிரசு கட்சி தலைமையிலான மத்திய அரசின் "நலத்துறை இணை அமைச்சருமான,
  4. கே.வி.தங்கபாலு EX.MP, அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினத்தின் உட்பிரிவான துளுவவேளாளர் குலம்.

இவர்களை போல் ஏராளமான முன்னோடிகளை பட்டியலிட முடியும். ஆனால் பக்கம்தான் பத்தாது.
  • சேலம் மாவட்டத்தில் அகமுடையார் பேரினம் பரவலாக வாழ்ந்து வந்தாலும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தனிப் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
  • சேலம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி 1957 ஆம் ஆண்டு இரட்டைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது.
  • 1957,1962, 1967, 1971, 1977,1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 என 
  • 14 சட்டமன்ற பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது.
  • 14 சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றது அகமுடையார் பேரினத்தில் ஒருவர் மட்டுமே,
  • 1962 ஆண்டு நடந்த ஆத்தூர் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பாக திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட வெற்றி பெற்றவர் "அங்கமுத்து நாயக்கர்"

1962 ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில்
போட்டியிட்ட வேட்பாளர்கள்- 5,
மொத்த வாக்காளர்கள் - 88,586.
பதிவான வாக்குகள்- 61,766.
செல்லாதவை - 1,830.
1) அங்கமுத்து நாயக்கர் (காங்) - 23,542,
2) ‎சிவபெருமாள் (திமுக) - 19,811,
3) ‎சுப்ரமணியம் (த.தே.க) - 13,686,
4) ‎சரவணபடையாட்சி(சுதந்தி) - 1,888,
5) ‎இரங்கசாமி (சுயே) - 1,009,
1977 ஆம் ஆண்டு நடந்த ஆத்தூர் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜனதா கட்சி சார்பாக காங்கிரசு, அஇஅதிமுக கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்து வெற்றி வாய்ப்பை இழந்தவர் அகமுடையாரான ஏ.எஸ். சின்னசாமி அவர்கள்,
1977 ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில்
போட்டியிட்ட வேட்பாளர்கள்- 4
மொத்த வாக்காளர்கள் - 1,10,029,
1) சி.பழனிமுத்து (காங்) - 19,040,
2) ‎பி.கந்தசாமி (அஇஅதிமுக) - 18,693,
3) ‎ஏ.எஸ்.சின்னசாமி (ஜனதா) - 16,860,
4) ‎டி.பெருமாள் (திமுக) - 9,306,
14 சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டது இருவர் மட்டுமே, இருவரில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்.
அந்த இருவர்களுக்கு பிறகு ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எந்த அரசியல் கட்சிகளும் அகமுடையார் பேரினத்திற்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.
சேலம் மாவட்டத்தில் பரவலாக வாழும் அகமுடையார் உறவுகள், பாண்டிய, சோழ மண்டலங்களில் வாழும் அகமுடையார் உறவுகளுடன் திருமண உறவோ, சங்கங்களுடனான பிணைப்போ, அரசியல் கூட்டோ இல்லாமல் தனிமைப்பட்டு நிற்கின்றனர்.
இந்த தனிமையை பயன்படுத்தி "முக்குலத்தோர்-தேவரினம்" என்ற இல்லாத முகமுடியை காட்டி, சேலம் மாவட்ட அகமுடையார்களிடம் பல ஆண்டுகாலம் ஏமாற்றி வருகின்றனர் கள்ளர் மறவர் சமுகத்தினர்.
அகமுடையார் பேரினத்தின் ஒற்றை அடையாளமான மாமன்னர் மருதுபாண்டியர்களை திட்டமிட்டு மறைத்து, அகமுடையார் பேரினத்தின் அடையாளமாக "மறவரான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்" அவர்களை முன்னிறுத்தி, அகமுடையார் பேரினத்தின் தனித்தன்மையை தொடர்ந்து அழித்து வருகின்றனர். இதற்கு சில அகமுடையார் உறவுகளும் விலை போயுள்ளனர்.
இனிவரும் காலங்களிலாவது சேலம் மாவட்ட அகமுடையார் உறவுகள், முக்குலத்தோர்-தேவரினம் என்ற மாய அரசியலில் மயங்காமல் அகமுடையார் பேரினத்திற்கான தனி அகமுடையார் அரசியலை முன்னெடுங்கள்,
நமது வழிபாட்டு தெய்வங்கள் மறவர் சமூகத்தினரான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் இல்லை,
நமது வழிபாட்டு நாள் அக்-30 இல்லை, நமது புண்ணியபூமி பசும்பொன் இல்லை.
நமது வழிபாட்டு தெய்வங்கள் அகமுடையார் பேரினத்தில் தோன்றிய "மாமன்னர் மருதுபாண்டியர்கள்" மட்டுமே,
நமது வழிபாட்டு நாள் அக்-24, 27 மட்டுமே,
நமது புண்ணியபூமி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், காளையார்கோவில் மட்டுமே,
இனிவரும் காலங்களில் சேலம் மாவட்ட அகமுடையார் உறவுகள்,
வரலாற்றில் எங்கும் இல்லாத முக்குலத்தோர்- தேவரினம் என்ற மாய அரசியலில் சிக்காமல்,
அகமுடையார் பேரினத்திற்கான தனி அரசியலை முன்னேடுத்து பயணிக்கவும்.
அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்.
இனி இறுதி பக்கத்திற்கு வருவோம். சேலம் மாவட்ட அகமுடையார் வரலாற்றை விவரிக்க வேண்டுமென்றால் விரிவாக எழுத வேண்டும். ஆனால் இந்த குறுங்கட்டுரையில் அனைத்தையும் பதிவிட இடம் கொள்ளாது. தனி நூலாகத்தான் வெளியிட வேண்டும்.
இனி இந்த கட்டுரையின் இறுதி பகுதிக்கு வருவோம்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பட்டப்பெயர்களில் பரந்து வாழும் அகமுடையார் உறவுகளை ஒன்றிணைக்க,
1996 ஆம் ஆண்டு "சேலம் மாவட்ட அகமுடையார் சமூக நல இளைஞர் சங்கம்" என்ற பெயரில் அரசு பதிவு செய்யப்பட்டு அமைப்பு தொடங்கப்பட்டது.
# 1996 இல் முதல் தொடக்க விழா, 27-10-1996 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், மேட்டுத் தெரு, இராமர் பஜனை மடத்தில் நடைபெற்றது.
# 1997 இல் 2 ஆம் ஆண்டு விழா 05-10-1997 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில் விஜயராகவாச்சாரியார் மகாலில் நடைபெற்றது.
"சேலம் மாவட்ட அகமுடையார் சமூக நல இளைஞர் சங்கம்" என்ற பெயர் மாற்றப்பட்டு,
1998 முதல் சேலம் மாவட்ட அகமுடையார் கல்வி அறக்கட்டளையாக மாற்றப்பெற்றது.
# 1998 இல் 3 ஆம் ஆண்டு விழா, 04-10-1998 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், அரிசிப்பாளையம், தேவாங்கர் திருமண மண்பத்தில் நடைபெற்றது.
# 1999 இல் 4 ஆம் ஆண்டு விழா, 24-10-1999 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் வீரகனூர், சரஸ்வதி பள்ளி, நாயுடுகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2000 இல் 5 ஆம் ஆண்டு விழா, 01-10-2000 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2001 இல் 6 ஆம் ஆண்டு விழாவும், மாமன்னர் மருதுபாண்டியர் 200 வது ஆண்டு நினைவு விழாவும், 07-10-2001 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், பொன்னம்மாப்பேட்டை தெய்வநாயகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2002 இல் 7 ஆம் ஆண்டு விழா, 19-10-2002 சனிக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2003 இல் 8 ஆம் ஆண்டு விழா, 12-10-2003 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், பெரமனூர் JVR கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2004 இல் 9 ஆம் ஆண்டு விழா, 17-10-2004 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், பெரமனூர் JVR கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
2005 இல், ஆண்டு விழா தவிர்க்க முடியாத் காரணத்தால் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
# 2006 இல் 10 ஆம் ஆண்டு விழா, 22-01-2006 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2007 இல் 11 ஆம் ஆண்டு விழா, 21-01-2007 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2008 இல் 12 ஆம் ஆண்டு விழா, 24-02-2008 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2009 இல் 13 ஆம் ஆண்டு விழா, 04-01-2009 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில் விஜயராகச்சாரியார் மகால்-ஆர்டி பார்த்தசாரதி அரங்கில் நடைபெற்றது.
# 2010 இல் 14 ஆம் ஆண்டு விழா, 24-01-2010 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், நான்கு ரோடு, சாமுண்டி வளாகம்- இலக்குமி அரங்கில் நடைபெற்றது.
# 2011 இல் 15 ஆம் ஆண்டு விழா, 13-02-2011 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2012 இல் 16 ஆம் ஆண்டு விழா, 11-03-2012 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2013 இல் 17 ஆம் ஆண்டு விழா, 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2014 இல் 18 ஆம் ஆண்டு விழா, 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2015 இல் 19 ஆம் ஆண்டு விழா, 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2016 இல் 20 ஆம் ஆண்டு விழா, 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், விநாயகபுரம், பாக்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2017 இல் 21 ஆம் ஆண்டு விழா, 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், விநாயகபுரம், பாக்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2018 இல் 22 ஆம் ஆண்டு விழா, 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், விநாயகபுரம், பாக்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2019 இல் 23 ஆம் ஆண்டு விழா, 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், விநாயகபுரம், பாக்யா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.
மேற்கண்ட சேலம் அகமுடையார் கல்வி அறக்கட்டளையை நடத்தும் நாயக்கர், பிள்ளை, செட்டியார், சேர்வை, அதிகாரி, உடையார் உள்ளிட்ட பட்டப்பெயர் கொண்ட வடமாவட்ட அகமுடையார் விழாவில் தொடக்கம் முதல் பல ஆண்டுகளாக சேர்வை, தேவர் பட்டப்பெயர் உடைய அகமுடையார் சமுதாய தலைவர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளனர்.
அகமுடையார் பேரினம் பட்டப்பெயரால் பிரிந்திருந்தாலும், இனத்தால் அகமுடையார் பேரினமாக ஒன்றிணைந்து வந்துள்ளனர்.
பட்டப்பெயர்களை மறந்து,
அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்!
அந்நிகழ்விற்கான அழைப்பில் கீழே பதிவிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் வாழும் அகமுடையார் உறவுகள் இதனையே அழைப்பாக ஏற்று இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்.
அகமுடையார் வரலாற்று மீட்பு பணியில்,
மருதரசர்களின் போர்ப்படை வீரர்களில் ஒருவனாக,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 63822 66931.
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.

வைரவ தேவர்




  • தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர்

  • அதிராமபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் (எதிர்ப்பின்றி தேர்வு)

  • தஞ்சை பேராவூரணி பகுதிகளில் நமது இனத்தவர்கள் பதினோருநாடுஅகமுடையார் என்ற கட்டமைப்போடு வாழ்ந்து வருகின்றனர்.

 

அன்பழகன் சேர்வை

  • ஒருங்கினைந்த இராமநாதபுரம் (இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர்) மாவட்ட அதிமுகவின் முதல் மாவட்ட செயலாளர்.

  •  இராமநாதபுரத்தின் பாராளுமன்ற உறுப்பினர்.

  •  இளையான்குடியின் சட்டமன்ற உறுப்பினர்.

சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாடு

  • சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாடு தலைமை தாங்கியவர் அகமுடையார் குலத்தோன்றல் உமாமகேஷ்வரன் பிள்ளை



  • இரண்டாவது மாநாடு தலைமை தாங்கியவர்அகமுடையார் குலத்தோன்றல் நாடிமுத்து பிள்ளை

பொன்முடி தேவர்



  • பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூன்று முறை சூலூர் சேர்மேனாக பணியாற்றியவர்

  • சூலூர் பல்லடம் திருப்பூர் பகுதிகளில் திமுகவை வளர்த்தவர்

மீனாட்சி அம்மனை குலதெய்வமாக வணங்கும் அகமுடையார் கூட்டங்கள்

கோவையில் மீனாட்சி அம்மனை குலதெய்வமாக வணங்கும் அகமுடையார் கூட்டங்கள்:

பெருமாள் தேவன் கூட்டம் 
புதூராங் கூட்டம் 
அட்டாளஞ் செட்டி கூட்டம் 
கோட்டான் கூட்டம்
குயிலாங் கூட்டம் 




இத்தெய்வத்திற்கு திருக்கல்யாணம் செய்வதை மரபாக கொண்டுள்ளனர் கோவில் சூலூரில் உள்ளது.

மருது பாண்டியர் பற்றி பாண்டித்துரை தேவரின் கவிதை

மருது பாண்டியர் காலத்தில் சாந்து புலவரால் இயற்றபட்ட மயூரகிரி புராணம் பின்னர் 1908ஆம் வருடம் பதிப்பித்து வெளியிட்டனர் இதற்கு நான்காம் தமிழ்சங்கம் அமைத்த பாண்டித்துரை தேவர் அவர்களின் சாற்றுக்கவி 


தமிழ்கூத்தன்

சிலம்பு வாத்தியார் ஓடாத்தூர் முருகேசன் - தன்டம்மாள் தம்பதியினருக்கு மகனாக ஓர் குக்கிராமத்தில் பிறந்து, மதுரை கோர்ட்ஸ் பஞ்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்தார். தமிழ் மீதுள்ள பற்றால் தொலைநிலைக்கல்வியாக பி.லிட் புலவர் பட்டம்பெற்று முனைவர் படிப்பை முடித்தார். இவர் கூடப்பிறந்த 4சகோதரர்களுக்கும் பொறுப்புள் அண்ணனாக நடந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். தமிழ்நாடு முற்போக்கு கவிஞர் பேரவை தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு பாராட்டு விழாநடத்தினார். தமிழகத்தில் இவரைத் தெரியாத கவிஞர்களே இல்லையென்னும் அளவிற்கு பிரபலமானவர்.



தேசிய விருதுபெற்ற கவிஞர்.வைரமுத்துவை அழைத்து திருப்பரங்குன்றத்தில்  பாராட்டு விழா நடத்தியவர்.1983 ஜுலை இனக்கலவரத்தின்போது ஈழத்தமிழர் மீதான இனக்கொலையை கண்டித்து திபகுவில் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். தீப்பந்த ஊர்வலம் நடத்தியவர்.திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பூட்டு போட்டு போராட்டம் நடத்தியவர். கவிஞர்.காசிஆனந்தன்,ஈழவேந்தன், மாவீரன்.மதுரை S.முத்து அவர்களை எங்கள் ஊருக்கு அழைத்து 83 காலகட்டத்தில் பட்டினிப்போராட்டம் நடத்தியவர்.



தமிழீழத்தேசியதலைவரின் ஆரம்பகால நண்பர். நம்பிக்கைக்குரிய தகவலாளியாக செயல்பட்டவர்.புலிகளின் திருநகர் முகாமுக்கு பொறுப்பாளாராக செயப்பிரகாஷ் அவர்களோடு செயல்பட்டவர். எங்கள் ஊரில் சாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களோடும் பழகிய பண்பாளர். தீவீர புலிகளின் ரசிகர்." சாகுறதுக்குள்ள ஈழத்த பார்க்கனும்"ன்னு என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.வாழ்க்கையில் பலருக்கு ஏணியாகவும்,முன்னத்தி ஏர் போல செயல்பட்டவர். கவிஞர்.மீரா அவர்களின் நெருங்கிய நண்பர். "காவல்கோட்டம்" நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற முன்னனி படைப்பாளி அண்ணன் சு.வெங்கடேசன் அவர்களை உருவாக்கிய,செதுக்கிய சிற்பியும் இவரே!

நன்றி: திலீபன் செந்தில் 

Thursday, February 21

பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்


இன்றைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள மேலைப்பெருமழை ஊரில் வசித்த வேலுத்தேவர் மற்றும் சிவகாமியம்மாள் ஆகியோருக்கு பிறந்த சோமசுந்தரனார் தமிழ் மொழியில் பெரும் புலமை உள்ளவராய் விளங்கினார். 




முதன் முதலில் உரை எழுதிய நூல் திருவாசகம் பின்னர் சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் சார்பில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பெருங்கதை உள்ளிட்ட ஏராளமான நூல்களுக்கு உரை எழுதினார். அவர் ஊரின் பெயரால் பெருமழைப்புலவர் என்றே அழைக்கப்பட்டார்.  சென்ற நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராய் விளங்கினார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...