Friday, February 23

பதினோர் நாடுகள் மற்றும் வழிபாட்டு தெய்வங்கள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் வாழும் அகமுடையார்கள் பதினொன்று நட்டார்கள்.பதினோர் நாட்டு உறவின் முறையினர் பிற சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தனர் என்பதற்கு, அவர்களால் நமக்கு விட்டு செல்லப்பட்டிருக்கின்ற சமுதாய அமைப்பிலே உள்ள கரைகளும், வாழ்வியல் சடங்குகளும், நடைமுறை பழக்க வழக்கங்களும், திருக்கோயில் சக்தி வழிபாட்டு நடைமுறைகளுமே இன்றளவும் சான்றாக விளங்கி வருகின்றன.அவ்வகையில் ஆவணத்தில் அருள்மிகு முத்துமாரியம்மனும் நெடுவாசலில் அருள்மிகு நாடியம்மனும், வேம்பங்குடி - பைங்காலில் அருள்மிகு வீரமாகாளி அம்மனும், களத்தூரில் அருள்மிகு முத்துமாரியம்மனும், தென்னங்குடியில் அருள்மிகு வீரமாகாளி அம்மனும், வீரியங்கோட்டையிலும், குருவிக்கரம்பையிலும், நாடியத்திலும், துறையூரிலும், அருள்மிகு முத்துமாரியம்மனும், முடப்புளிக்காட்டிலும், ஆண்டாகோட்டையிலும், அருள்மிகு வீரமாகாளியம்மனும் சக்தி வழிபாட்டு திருத்தலங்களாகும்.




1.ஆவணம்:

ஆவணம் பதினோர் நாட்டின் தலைமை நாடு. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டான நாடாகும்.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் வருடாந்திரத் திருவிழா (பிறமோற்சவம்) சித்திரைத் திருவிழா ஆகும். பத்து நாட்கள் கரைதாரர்களால் கொண்டாடப்படுகின்றது. வைரவத்தேரோட்டம் - மது எடுப்பு அதி விமர்சையாகும்.

அருள்மிகு பெரியநாயகி அம்மை உடைமர் அருள்மிகு சுயம் பிரகாசசுவாமி திருக்கோயிலினை 101 லட்சங்கள் ரூபாய் செலவில் புதுபித்தும், புதிதாக நிர்மாணித்தும் (திருமதிற்சுவர்கள் கருங்கள் வேலைப்பாடுகள்,ஐந்து நிலை இராஜ கோபுரம் - மகா மண்டபம்) சென்ற சர்வஜித்து ஆண்டு தைத் திங்கள் 13ஆம் நாள் (27.01.2008) ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.45க்கு மேல் 10.30க்குள் மீனம் லெக்னத்தில் கோலாகலச் சிறப்போடு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா இனிதே நடத்தப்பெற்றது.

இக்கிராமத்தில் எழுந்தருளியுள்ள சிதலமடைந்த அருள்மிகு பிடாரி அம்மன் திருக்கோயில், நூதனமாக நிர்மாணிக்கப் பெற்று கடந்த சுபானு ஆண்டு பங்குனித் திங்கள் 23ஆம் நாள் (05-04-2004) திங்கட்கிழமை காலை மணி 10:12க்கு குடமுழுக்கு விழா இனிதே நடந்தேறியது.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலினை முற்றிலுமாக அப்புறப்படுத்தி, மேற்படி இடத்தில் நூதனமாக அருள்மிகு விநாயகர், அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்கள் மற்றும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் துவிதள விமானம், (கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், கருங்கற்கள் பஞ்சாங்க வேலைகள் கபோதகம் வரையிலும்), ஐந்து நிலை இராஜகோபுரம், மகா மண்டபம் அமைப்புகளுடன் சுமார் இரண்டு கோடிகள் செலவில் திருப்பணி வேலைகள் செய்யப்பெற்று, ஐய ஆண்டு தை மாதம் 12ஆம் தேதி (26.01.2015) திங்கட்கிழமை காலை மணி 9.40க்கு மேல் 10.30க்கு மீனம் லெக்கனத்தில் கடவுள் மங்கலம் (கும்பாபிஷேகம்) 
 நடந்தேறியது.


2. நெடுவாசல்:


"நெடுவாயில் நிறைவயல் சூழ் நெய்தல் வாயில்:" என்று திரு நாவுக்கரசு சுவாமிகளினது, திருத்தாண்டகம் என்னும் நூலில் பாடப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நாடாகும். மன்னர் ஆட்சி காலத்தில் நெடுவாசல் கிராமத்தை மையமாக வைத்து வரிவசூல் மற்றும் நிர்வாகம் நடைபெற்று வந்திருக்கின்றது. அக்கிராமத்தில் 'அம்பலப்புளியடி" என்ற புளிய மரத்தின் நிழலில்தான் ஊர்க்கூட்டம், கிராம பஞ்சாயத்துகள் பண்டைக்காலத்தில் நடந்து வந்திருக்கின்றது. சித்திரை முதல் நாளில் கிராமம் கூடி பஞ்சாங்கம் படித்தல், நாள் குறித்தல், திருவிழா சம்பந்தமாகப் பேசி முடிவெடுத்தல், வரவு-செலவுக் கணக்குகளை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, மையப்பகுதியில் அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அருகில் சிவாலயம் உள்ளது.

அருள்மிகு நாடியம்மன், அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவில் வருடாந்திரப் பெருந்திருவிழா ஆனித் திருமஞ்சனம், ஏழு கரைக்காரர்களால் நடந்தப்பெறுகின்றது. மது-வைரத்தேரோட்டம் அதி விமரிசையாகும்.

அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் துவிதள விமானத்துடன் நூதனமாக நிர்மாணித்தும், அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலினை செப்பனிட்டு சீர்செய்தும், புதுப்பித்தும் சென்ற பார்த்திப - ஆவணி 29ஆம் நாள் (14.09.2005) புதன் கிழமை காலை கிராமத்தார்களால் திருக்குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கானோர்கள் முன்னிலையில் நடந்தேறியது.

இக்கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அய்யனார் திருக்கோயில் மற்றும் கரைதாரர்களுக்கான, கரைக்கோயில்களும் திருப்பணிகள் செய்யப்பெற்று பஞ்வர்ணப் பொலிவோடு புதுபிக்கப்பட்டு சென்ற சர்வதாரி ஆண்டு பங்குனித்திங்கள் 31ஆம் நாள் (13.04.2009) திங்கள்கிழமை காலை மணி 9:45க்கு கடவுள் மங்கலம் (குடமுழுக்கு விழா) இனிதே நடந்தேறியது.

ஆனந்த ஆண்டு ஆனி மாதம் 23ஆம் நாள் (07.07.1974) ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீ முக ஆண்டு வைகாசித்திங்கள் 20ஆம் நாள் (02.06.1933) புதன் கிழமை, அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றது.

3.வேம்பங்குடி- பைங்கால்:

 வேம்பங்குடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்திலும், பைங்கால் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்திலும் அமைந்துள்ளது. இங்கு ஆதியில் செங்கடயான் கரைத் தேவர், சின்னையன் கரைத் தேவர் என இரண்டு பிரிவாக வாழ்ந்தனர்.

இக்கரைப் பெயருடைய தேவர்கள் செங்கட்டான் கரைச்சாமி, என்றும் சின்னையன் கரைச்சாமி என்றும் வணங்கப்படுகின்றார்கள். காலப் போக்கில், கருத்து வேறுபாடுகளின் காரணமாக, கருப்பையன் கரைத் தேவர்கள் உருவாகி அவர்கள் வசித்த இடம் பசுமையாகவும், கால்வாய்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்ததன் காரணமாக, அப்பகுதி பண்புத் தொகையில், பைங்கால் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றது. இப்பகுதியின் காவல் தெய்வமாக அருள்மிகு அய்யனார், அருள்மிகு கருப்பர் எழுந்தருளிலி அருள்பாலிக்கின்றனர். காலப்போக்கில், மேற்கண்டவர்களது வழித்தோன்றல்களாக தேவலாப் பிரியன், தூண்டாப்பிரியன், சின்ன கோபாலன், பெரிய கோபாலன் கரைகளாகப் பரிணமித்துள்ளனர். குடி மிராசுகளும் உள்ளனர். குல தெய்வக் கோயில்களும் உள்ளன. இப்பகுதியில் நெய்வத்தலி, பாளையப்பட்டு, நகரம் ஜமீன் ஆகிய குறு நிலப் பிரபுக்களின் கட்டளையினை ஏற்காமல் தனித்தே இவர்களது வாழ்க்கை முறை தொடர்ந்திருக்கின்றது.

மூன்று கரை தாரர்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணமும், ஒருவரை விட்டு ஒருவர் தனியே செயற்பட முடியாத வகையிலும், திருவிழாக்கள் போன்ற எதனையும் கூட்டுப் பொறுப்பில்தான் சேர்ந்து செய்தாக வேண்டும் என்ற கட்டாய நிலைப்பாட்டை மனதில் கொண்டுதான், கோயில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

கர்ப்பக்கிரகம் வேம்பங்குடி வருவாய்க் கிராம எல்லையிலும் அதைச் சேர்ந்தார்ப் போல அமைந்துள்ள அர்தத மகா மண்டபங்கள் பைங்கால் வருவாய்க் கிராம எல்லையிலும் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டுருப்பது, ஒன்றை விட்டு ஒன்று பிரியாது, சேர்ந்தே இருக்கும் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. இது வேம்பங்குடி - பைங்கால் கிராமத்திற்கும் பொருந்தும்.

அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் தேவாலப்பிரியன், தூண்டாப்பிரியன், சின்னகோபாலன், பெரியகோபாலன் கரைக்காரர்களால் மிகவும் சிறப்பாக. சிறப்பான நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்படுகின்றது. மது - ரதவோட்டம் அதி விமரிசையாகும்.

விஜய ஆண்டு ஆனி மாதம் 31 ஆம் நாள் (15.07.2013) திங்கட்கிழமை காலை 9:45க்கு பெருஞ்சாந்தி - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கரைதாரர்களால் நடத்தப் பெற்றது. இக்கிராமத்தில் எழுந்தளியுள்ள பூர்ண-புஷ்கலா சமோத அருள்மிகு அய்யனார் திருக்கோயில் குடமுழுக்கு விழா சித்திரபானு ஆண்டு பங்குனி மாதம் 23ஆம் நாள் (06.04.2003) ஞயிற்றுக்கிழமை காலை மணி 9க்கு மேல் 10.00க்கள் ரிஷப லெக்னத்தில் செய்விக்கப்பெற்றது பைங்கால் அருள்மிகு சுந்தரவிநாயகர் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, குடமுழுக்குவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

4.களத்தூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தின் தென்புலத்தில் மிகப் புராதன காலந்தொட்டு விளங்கி வருகிறது களத்தூர் கிராமம். பேராவூரணி வட்டாரத்தில் பதினோர் நாட்டு அகமுடையார்கள் தேவர் இன மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் நான்காவது நாடு உடையவர்கள் களாத்தூர் கிராமத்து அகமுடையார்கள். இவர்களின் கிராம தேவதை ஸ்ரீமுத்து மாரியம்மன்

ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் ஸ்ரீ அய்யனார் சுவாமி காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறது. இவற்றை அல்லாமல் கிராம மக்களின் குல தெய்வங்கள் மிகச் சிறப்பாக வழிபடப்படுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜமீன்தார் முறை வழக்கத்தில் இருந்தது. களத்தூர் ஒரு ஜமீன் கிராமம். இக்கிராமத்தின் பிடாகைகள் சித்துக்காடு, நாடங்காடு, பொக்கன்விடுதி, சூரியநாராயணபுரம். இதில் சூரியநாராயணபுரம், களத்தூர் கிராமத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது சுரோர்த்திரியம் என வழங்கப்பட்டு, பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட மைனர் இனாம் பிரிவு. களத்தூர் கிராமம் சூரிய நாராயணபுரம் இரண்டுக்கும் பொதுவான இடத்தில் அக்காலத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை நிர்மாணித்துள்ளனர். ஆலயத்தின் நித்ய பூசைக்காக நன்செய் நிலங்களை மானியமாக வழங்கியுள்ளனர். சித்துக்காட்டில் பிராமணர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் வழிபாடே பிரதானம். பண்டாரங்களாகிய ஒதுவார்கள் களத்தூரில் வசிக்கிறார்கள். அம்மன் வழிபாட்டிற்கு தேவைப்படும் மலர்களுக்காக இவர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் நந்தவனம் இருந்தது.

களத்தூர் கிராமத்தில் அகமுடையார்கள் அதிகம் இருந்ததால் தங்களுக்குள் மூன்று கரைப் பிரிவுகள் ஏற்படுத்தினர். கரைத் தலைவர்கள் அம்பலகாரர் எனப்பட்டனர். கரையின் உட்பிரிவில் குடிமிராசுகளும் நியமிக்கப்பட்டனர். கரைப் பிரிவில் உள்ள குடியினர் வகையறாவாகப் பிரிந்து வாழ்ந்தனர். இந்த மூன்று கரைக்கும் தனித்தனியாக ஆலயத்தில் மண்டகப்படிகள் உண்டு.

ஜமீன்தாரிடம் கணக்கர்களாக இருந்த சேனைத்தலைவர் எனும் செட்டியார்களுக்கும், வணிகர் குல வல்ல நாட்டுச் செட்டியார்களுக்கும், நாயுடுகளான கவுரச் செட்டியார்களுக்கும் ராவுத்தக்-கள்ளர் மகா ஜனங்களுக்கு மண்டகப்படிகள் உண்டு. பத்து நாள் வைகாசி விசாகத் திருவிழாவில் ஏழு மண்டப்படிதாரர்களுக்கு வழங்கிய நாட்கள் தவிர்த்த மீதமுள்ள மூன்று நாட்கள் கோவில் திட்டமாக நடத்தப்படுகின்றது.

களத்தூர் கிராமத்தில் அமைந்து விளங்கும் அன்னைக்கு தேர்த்திருவிழா நடைபெறும் காலத்தில் பக்கத்து கிராம மக்கள் பெருமளவில் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். கல்லூரணிக்காடு, பழையநகரம் கிராமத்து மக்கள் மிகுந்த ஈடுபாடுடையவர்களாக உள்ளனர். தேரோட்டம் நிறைவுற்று திருவீதியுலா நடைபெறுகின்ற காலத்தில் கல்லூரணிக்காடு கிராமம் வரை அம்மன் சென்று வருவது சிறப்பாக இருக்கும்.

களத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ளது. காவல்துறையினர் மேற்படி அம்மன் சிலைத் திருட்டு புகார் செய்யப்பட்டது. களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அமரர் S.V. ஆறுமுகத் தேவரும், ஊர் மக்களும் காவல்துறையினருடன் சிலையத் தேடி அலைந்தார்கள். அரும்பாடுபட்டார்கள். இறுதியாக அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சிலையை அறநிலையத்துறை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தான் அம்மனுக்கு ஆலயம் எழுப்பியே தீருவது என முடிவெடுத்து அமரர் ஆ.சி. பன்னீர்தேவர், S.V. வேலாயுததேவர், கி. வேலாயுததேவர், R.K. நடேச தேவர் போன்ற பெரியவர்கள் கோயில் திருப்பணி வேலையத் தொடங்கினார்கள். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே" எனும் கூற்றை உணர்ந்து வெகு விரைவாகத் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. திருப்பணி வேலைக்கு களத்தூர் கிராம மக்கள் நிதியைத் தாராளமாக வழங்கினார்கள். வெளியூர்களுக்கும் சென்று நிதி திரட்டப்பட்டது. பெருமளவு நிதி கிடைத்தது. ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு ஆண்டு ஆவணி மாதம் 16-ஆம் நாள் 01.09.1996 ஞாயிற்றுக் கிழமை சதுர்த்தி திதி, ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய துலா லக்கனத்தில் முற்பகல் 11.10-க்கு நூதன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அந்த நிகழ்வைத் தொடர்ந்து ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகப் பெருந்திருவிழா நடைபெற்றது.

அடுத்த கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு கிராம மக்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். முக்கியமாக கிராமத்தின் பெரு நிலக்கிழார் திரு. R.K. போத்தியப்ப தேவர் அவர்களும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. K. முருகன் அவர்களும் திருப்பணி வேலையில் முழுமையாக ஈடுபட்டார்கள். கிராமத்தின் காவல் தெய்வம் ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோயில் இடிந்து கிடந்தது பெரும் குறையாக இருந்தது.

ஸ்ரீ அம்மன் ஆலயத் திருப்பணியோடு ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோயில் திருப்பணியையும் தொடங்கினார்கள். ஸ்ரீ அய்யனார் ஆலயத்தின் அமைப்புச் சிறப்பாக அமைந்தது. வெகு அழகாகக் காட்சியளிக்கிறது.

மேற்படி ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் ஆண்டு ஆவணி மாதம் 06-ஆம் நாள் 22.08.2010 திரியோதசி திதி, உத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய துலா லக்கனத்தில் காலை 8.00 மணிக்கு மேல் 9.30-க்குள் பக்தகோடிகள் புடைசூழ இனிதே நடந்தேறியது.

ஸ்ரீ அம்மனுக்கு அதைத் தொடர்ந்து நித்ய பூஜைகள், லெட்சார்ச்சணைகள், வைகாசி விசாக பெருந்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ அம்மனின் அருள் வீச்சை மக்கள் உணர்கிறார்கள்.

5.தென்னங்குடி:

 அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோயில் (ஆத்தாளுர்) இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள ஒரு பட்டியலில் சேர்ந்த திருக்கோயிலாகும் 286 ஏக்கர்கள் நன்செய் புன்செய் நிலங்கள் உள்ளன. களத்தூர் - தென்னங்குடி - முடப்புளிக்காடு - கழனிவாசல் பாத்தியப்பட்ட கிராமங்களாகும்.

ஆனி மாதத்தில் வருடாந்திரப் பெருந்திருவிழா மேற்கண்ட கிராமத்தார்களாலும், மண்டகப்படிதாரர்களாலும் நடத்தப்படுவது வழக்கம். தேர் திருவிழாவின் போது நாங்கு கிராமத்தார்களாளும் மது எடுத்து வருவது கண் கொள்ளாக்காட்சியாகும். தற்போது அரசு மான்யம் ரூ 26.5 லட்சமும், உபயத்திருப்பணி ரூ 29.5 லட்சம் செலவிலும் திருப்பணிவேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதுடன் விரைவில் குடமுழுக்கு விழாவும் காணவிருக்கின்றது.

இக்கிராமத்தில் ஏகாட்சித்தேவன், வேலாயுதத்தேவன், உடையாத்தேவன், கிருஷ்ணத்தேவன் கரைகள் உள்ளதுடன் கரைக்காரர்களுக்கென தனித்தனியே குல தெய்வக் கோயில்களும் உள்ளன.

6.வீரியங்கோட்டை:

பேராவூரணி வட்டத்தில் அமைந்துள்ள இயற்கை சூழ் எழில் கிராமமாகும். இவ்வூரின் ஊராட்சிப் பகுதியாக மாசாகாடு-கீழக்காடு-சாமியன் தோப்பு ஆகிய குடியிருப்புகள் உள்ளன. ஊர்க்காவல் தெய்வமாக கிழக்கி அருள்மிகு அய்யனார் திருக்கோவிலும் அருள்மிகு காத்தயி அம்மன், அருள்மிகு பிள்ளையார், அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்களும் உள்ளன. முடச்சிக்காடு ஊராட்சிப் பகுதி முழுவதும், வீரியங்க்கோட்டை வருவாய்க் கிராமத்தில் அடங்கும்.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வருடாந்திரப் பெருந்திருவிழா ஆனி திருமஞ்சனம் ஆகும். சர்வஜித்து ஆண்டு ஆவணி மாதம் 14ம் நாள் (31.08.2007) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா செய்விக்கப்பட்டது.

7.குருவிக்கரம்பை:

 

இன்றைக்கு சற்றொப்ப 250 ஆண்டுகளுக்கு முன்னர் குருவிக்கரம்பையில் வாழ்ந்த அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு குடும்பத்தினர்கள் தெய்வ வழிபாட்டிற்கும், இதன் மூலமாக ஒற்றுமையாகவும், பரஸ்பரமாகவும், கட்டுக்கோப்பாகவும் வாழ்ந்திடலுக்குமாகவும் நிர்மாணிக்கப்பட்டது தான் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்.

இந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத்தலைவர்கள், தலைவர்கள் என்ற முறைமையில், வேலையின்பாற்பட்டு சுழற்சி முறையில் மேற்படி திருக்கோயிலின் அறங்காவலர்களாக இருந்து வந்து, திருக்கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிர்வகித்து வந்துள்ளனர். இந்நிலை இன்றளவும் தொடர்கிறது.

மேற்சொல்லப்பட்ட ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களினது வழித்தோன்றல்களும் முறையே தோண்டித்தேவர், தானத்தேவர், பள்ளித்தேவர், நயினாங்குட்டித்தேவர், சேர்வைக்காரர், பெரமதேவர் ஆகிய ஆறு கரைகளுக்குள் அடங்குவர்.

இந்நிலையில் சேர்வைக்காரர் கரையுனுள் இருந்து வந்த ஆவிச்சித்தேவர் வகையறாவினர்களுக்கும், மேற்படி சேர்வைகாரர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதினைத் தொடர்ந்து கிராம ஏகோபித்த முடிவிற்கேற்ப 2004ஆம் ஆண்டில் ஆவிச்சித்தேவர் என்ற புதிய தொரு ஏழாவது கரை உருவாக்கப்பட்டு அது முதற்கொண்டு குருவிக்கரம்பைக் கிராம ஏழு கரைதாரர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் குருவிக்கரம்பைத் தாய்க் கிராமமும் அதன் பிடாகைக் கிராமங்களான வாத்தலைக்காடு, மருங்கப்பள்ளம், நாடாகாடு, கள்ளங்காடு, குண்டாமரைக்காடு, பாலச்சேரிக்காடு, கோட்டைக்காடு, முனுமாக்காடு, விளக்கு வெட்டிக்காடு, கொல்லங்கரம்பை, ஓமக்காடு, கரம்பக்காடு, தேனங்காடு, பூங்குடிக்காடு, சாந்தாம்பேட்டை, கஞ்சங்காடு, வாவிளான்வயல் ஆகிய பதினெட்டிலும் உள்ள அகமுடையார் சமுதாயத்தின் வழிபாட்டுக்காக (சற்றொப்ப 250 ஆண்டுகளுக்கு முன்னர்) அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்மாணிக்கப் பெற்று நித்திய நைவேத்தியப் படித்தர பூஜை செலவினங்களுக்காக குருவிக்கரம்பை - 1,குருவிக்கரம்பை - 2, கங்காதரபுரம், கோட்டைக்காடு, பாலச்சேரிக்காடு, கரம்பக்காடு ஆகிய கிராமங்களில் 25.21.5 எக்டேர்கள் (62.28 ஏக்கர்கள்) நன்செய், புன்செய் நிலங்கள் அகமுடையார் சமுதாயத்தினரால் இனாமாகவும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டு முறைகள் இன்றளவும் தொடர்கின்றது.

இவர்களால் ஆண்டுதோறும் சித்திரைப் புத்தாண்டு பாலாபிஷேக பூச்சொரிதல் மற்றும் நித்திய, வார, மாத, வருட ஏறுபடி விழாக்கள் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடத்தப்பட்டு வரப்படுகிறது. ஓவ்வொரு தமிழாண்டு பங்குனி மாதம் மூன்றாவது வார திங்கட்கிழமையில் அருள்மிகு அரசடி செல்வ விநாயகர் கோயிலில் நண்பகல் வழிபாட்டுடன், அன்று மாலை அருள்மிகு அய்யனார் - அருள்மிகு மெய்யப்ப சுவாமி - அருள்மிகு செல்லப்ப சுவாமி ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு, கரைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபாடுகள் செய்வதும், மேற்படி பொங்கல் நாளில் பிறந்த வீட்டிலிருந்து, புகுந்த வீட்டு உறவின்முறைக் கிராமங்களில் வாழ்க்கைப்பட்டுள்ள பெண்களும் பொங்கல் நாளில் திருக்கோயிலுக்கு வருகை தந்து பொங்கலிட்டு படையல் வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவதென்பது வழிபாட்டோடு நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்துக் கொள்வதன் மூலம் இது ஒரு காணும் பொங்கலாகவும் அமைகின்றது.

பொங்கல் வழிபாடுகள் நிறைவு பெறுகின்ற நேரத்தில் ( இரவு 9.30 மணி அளவில் ) கரம்பக்குடியில் இருந்து 25க்கும் மேற்பட்ட முகம்மதிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மலர் மாலைகளுடன் திருக்கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்வதும், கோயில் மரியாதைகளைப் பெற்றுச் செல்வதும் தொடர்ந்து வருகின்ற நடைமுறையாகும். அருள்மிகு மெய்யப்பசுவாமி திருக்கோயிலில் சுதை வடிவில் ராவுத்தர் சுவாமி எழுந்தருளியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது என்பதுடன் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இது அமைகிறது.

மேற்படி பொங்கல் வழிபாட்டினைத் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் ஆண்டும் பங்குனி மாதம் 24 அல்லது 25ஆம் நாளில் அன்னை அருள்மிகு முத்துமாரி அம்பிகைக்கு காப்புக்கட்டி 1 முதல் 7 கரைதாரர்களும் பாலாபிஷேகம், பூச்சொரிதல் வைபவ வழிபாட்டிற்குப் பின்னர், தமிழ் வருடப் பிறப்பன்று ஏழுகரைத் தலைவர்களும் மற்றும் ஏழுகரைதாரர்களும் சேர்ந்து விழா எடுத்தல், பஞ்சாங்கம் படிக்கப்பெற்று அட்சதை பெற்றுக்கொள்ளல் போன்ற நிகழ்ச்சிகளும், தொன்று தொட்டு இருந்து வருகின்ற நடைமுறை வழக்கங்களாகும். பொதுமக்களும் வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள். தொடர்ந்து இரவு அருள்மிகு அன்னை முத்துமாரி அம்பிகை சிம்மம் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வர சித்திரைப் புத்தாண்டுத் தரிசன விழாவும், விடையாற்றித் திருவிழாவில் உற்சவர் அருள்மிகு அன்னை முத்துமாரி அம்பிகை கேடகத்தில் எழுந்தருளி குருவிக்கரம்பை திருவீதிகளில் உலா வந்து கோலாகலச் சிறப்போடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் நீராடி, திருக்கோயிலை வந்தடைந்தவுடன் கங்கணம் களையப்பட்டு காளாஞ்சி மரியாதைகள் வழங்கப்படுவதுடன் சித்திரைப் புத்தாண்டு பாலாபிஷேகப் பூச்சொரிதல் விழா நிறைவு பெறுவது வழக்கமாகும்.

குருவிக்கரம்பையும், அதன் பிடாகைக் கிராமங்கள் பதினேழும் இன்று குருவிக்கரம்பை - கரம்பக்காடு - வாத்தலைக்காடு - மருங்கப்பள்ளம் - கெங்காதரபுரம் ஆகிய ஊராட்சிகளில் அடங்கும்.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் குருவிக்கரம்பையும் அதனை சேர்ந்த பிடாகைக் கிராமங்கள் பதினேழிலும் வாழ்ந்து வருகின்ற அகமுடையார் சமுதாயத்திற்கு மட்டுமே நிர்வாக பரிபாலனத் திட்டம் நிச்சயம் கொள்வதற்கு உரிமையுடையது என தஞ்சாவூர் இந்து சமைய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் நீதிமன்றம் மூலமாக 24.03.2009 இல் தீர்ப்புரை பெறப்பட்டுள்ளது. ( திருவள்ளுவராண்டு பங்குனித் திங்கள் 11ஆம் நாள்) இவ்விவரம் தஞ்சாவூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டுள்ளது. (01.07.2009 ஆனி 17 திருவள்ளுவராண்டு 2040).

1876, 1950, 31.08.1987, 24.10.1994 இல் பெருஞ்சாந்தி-திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இனிதே செய்யப்பெற்றது. தற்பொழுது சுமார் ரூபாய் 75 இலட்சங்கள் செலவில் திருப்பணி வேலைகள் நிறைவுபெற்று, விஜய ஆண்டு ஆவணித்திங்கள் 26ஆம் நாள் 11.09.2013 புதங்கிழமை சுக்கிலபட்ச சஷ்டி திதி அனுசம் நட்சத்திரம், சித்தயோகம், குருவோரை கூடிய சுப வேளையில், காலை மணி 9.50க்கு மேல் 10.10க்குள் துலாம் லெக்கனத்தில் சன்னிதானங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர்கள் முன்னிலையில் திருக்குட முழுக்கு நன்னிராட்டுப் பெருவிழா. ( அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ) இனிதே செய்விக்கப்பெற்றது.

குருவிக்கரம்பை - மருங்கப்பள்ளம்

அருள்மிகு பெரிய நாயகி அம்மன் உடனுறையும் அருள்மிகு ஓளஷதபுரீஸ்வரர் திருக்கோயில், இன்றைக்கு சற்றொப்ப 250 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சைய ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதொரு புரதான சிவாலயமாகும். மன்னர் கண்ட குடமுழுக்கு விழாவிற்குப் பின்னர், குடமுழுக்கு விழாக்கள் நடந்ததாகத் தெரியப்பெறவில்லை. மிகவும் பாழடைந்த நிலையில் இருந்து வந்த திருக்கோயிலை, மருங்கப்பள்ளம் கிராமம், அரசுமான்யம், நன் கொடையாளர்கள் மூலமாக பழுதுபார்த்து செப்பனிட்டும், நூதனமாக திருக்கோயில்களை நிர்மாணித்தும், சென்ற ஈஸ்வர ஆண்டு ஆவணித் திங்கள் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (14.09.1997) முற்பகல் 11.15க்கு விருச்சிகம் லெக்கனத்தில் தருமபுரம், திருப்பனந்தாள் சன்னிதானங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர்கள் முன்னிலையில் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில், பிள்ளையார்பட்டி விகாஸ்ரத்னா டாக்டர் பிச்சைகுருக்கள் அவர்களால் பெருஞ்சாந்தி திருக்குடமுழுக்கு விழா இனிதே செய்விக்கப்பட்டது.
தனி சிறப்பு
இத்திருத்தலத்தில் அருள்மிகு சனீஸ்வர பகவானை மட்டும் பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு அம்சமாகும். இச்சிறப்பிற்கேற்ப சிவம்-மீனாட்சி-வசிஷ்டர்-அகஸ்தியர் காண்டங்கள் என்று சொல்லக்கூடிய பழமையான ஓலைச்சுவடிகளில் இத்திருத்தலம் சனிபகவான்  பரிகாரத் தலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ள்து.

மன்னருக்கு இருந்து வந்த நோய் இத்திருக்குளத்தில் நீராடி சித்த வைத்திய மாமுனிவர் மச்சமுனி கொடுத்த பச்சிலை மூலிகைகளை உண்டு இறைவன்-இறைவியை வழிபட்டதன் பயனாக நோய் நீங்கியதாக வரலாறு. நன்றி கடனாக முன்னர் சிறிய கருங்கற்கோயிலாக இருந்து வந்ததினை இன்றுள்ள அளவிற்கு வடிவமைத்து நிர்மாணித்து குடமுழுக்கு விழா கண்டு, நித்திய நிவேத்திய படித்தர பூஜை செலவினங்களுக்காக மருங்கபள்ளம் கிராமத்தையும் சுவாமிக்கு இனாமாக மன்னர் வழங்கி மகிழ்ந்தார் என்பதும் வரலாறு.


8.நாடியம்:


கிழக்குக் கடற்கரைச் சாலையில், மனோரா எனும் உப்பரிகைக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நாடியம் கிராமத்தில் அப்போதைய காலக்கட்டத்தில் எழுந்தருளியிருந்த அருள்மிகு நாடியம்மன் பெயராலேயே, " நாடியம் " எனப்பெயர் வரக்காரணமாக இருந்திருக்கலாம் எனத் தெரிய வருகின்றது.

இங்கு எழுந்தருளியிருந்த அம்மன் சிலையை சிலர் திருடி எடுத்துச் சென்ற போது, தற்போது பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் அமைந்துள்ள இடத்திற்குமேல், மேற்படி சிலையைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அதே இடத்தில் சிலையை வைத்து, பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் மனு ஈசர் சுவாமிகளால் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக முதல் மரியாதையும் தரப்பட்டிருந்திருக்கின்றது.

ஒரு காலக் கட்டத்தில் இப்பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருந்திருக்கின்றது. இந்நிலையில் வட நாட்டுத் துறவி மனு ஈசர் / மனிஷா கிரினாத் இராமேஸ்வரம் புனித யாத்திரை சென்ற போது, தற்போது மடம் அமைந்துள்ள இடத்தில் தங்கி, இளைப்பாறி, தவம் புரிந்த நிலையில், கடும் மழை பெய்து ஊரெல்லாம் வெள்ளப்பெருக்கானது. ஏரி, குளங்களெல்லாம் நிறம்பி வழிந்தனவாம். தண்ணீர் பஞ்சம் நீங்கியது. கிராமத்தார்களினது வேண்டுகோளினை ஏற்று, சுவாமிகளும் தங்கி சேவை செய்ய இறையருள் கூட்டியது. மன்னர், சுவாமிகளுக்கு 22 கிராமங்களை இனாமாக வழங்கினார். திருமடம் நிர்மாணிக்கப்பட்டது. இராமேஸ்வரம், இலங்கையிலும் சொத்துக்கள் உள்ளன. உயர் நிலைப்பள்ளி, 110 கே.வி மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வருடாந்திரப் பெருந்திருவிழா ஆடிப்பூரமாகும். நாடியம் கோசுவாமி மடம் நிறுவப்பட்ட கால வரையறைகள் தெரியப்பெறவில்லை. கிழக்குக் கடற்கரைச்சாலை மனோரா என்னும் உப்பரிகைக்கு மேற்கே வெகு அருகாமையில் அமைந்துள்ளது.

இராமேஸ்வரம் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு புனித, யாத்திரை செல்லுகின்ற யாத்ரீகர்கள் வசதிகளைக் கருத்திற் கொண்டு இங்கு தங்கி இளைப்பாறி, உணவு உண்டு செல்வதற்கான வசதிகள் செய்து தரப்பட்டிருந்திருக்கின்றன. மதியம் அன்னதானமும்  மடத்தில் வழங்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் நின்றுபட்டுவிட்டன. தற்பொழுது மடம் புதுபிக்கப்பட்டு புதுபொலிவுடன் காட்சியளிக்கின்றது. பசு மடம் பராமரிப்பில் உள்ளது. விஸ்வஹிந்து பரிஷத் ஆளுகையில் உள்ளது. இம்மடத்திற்கு நாடியம் மற்றும் சுற்றுக்கிராமங்களோடு கண்டி (இலங்கை), இராமேஸ்வரத்திலும் நிலங்கள் உள்ளன. இராமேஸ்வரம் மேலக் கோபுர வாசலில் மடம் அமைந்துள்ள வளாகப் பகுதியில், நவீன வசதிகளுடன் சாதாரண, குளிரூட்டப்பட்டுள்ள அறைகள் குறைந்த வாடகைக்கு யாத்ரீகர்களுக்கு கிடைக்கின்றது. விசேஷ நாட்களில் முன்பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.

நுழைவு வாயில் காப்புச்சுவரில் கோசுவாமி மடம் நாடியம் " என்ற கல்வெட்டு பொறித்து பதிக்கப்பட்டுள்ளது. 


9.துறையூர்:

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு பூர்ண - புஷ்கலா சமேத அருள்மிகு அய்யனார் திருக்கோயில் கிழக்குக் கடற்கரைச்சாலையில், சேதுபாவாசத்திரத்திற்கு மேற்கே 2கி.மீ தொலைவில் உள்ளது. சித்ரா பௌர்ணமி விழா அதிவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அருள்மிகு அய்யனார் இங்கு எழுந்தருளி கலியுக கண்கண்ட தெய்வமாக அருள்பாலிக்கின்றார். திருமண பொருத்தங்கள், தொழில்கள் தொடக்கி நடத்திடல், காரியங்கள் கைகூடல் இவைகளுக்காக பல்லி சொல் பலன் கேட்டு அதன்படி நடக்க சேவார்த்திகள் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்திற்கு வந்த வண்ணமிருப்பது இத்தல மகிமையாகும்.

சித்ரா பௌர்ணமி நாளன்று நூற்றுக்கணக்கானோர்கள் பல்வேறு வகையான காவடிகளை நேர்த்திக் கடனுக்காக எடுத்துவருவது கண்கொள்ளாக் காட்சியாகும். துவிதள விமானம், கர்ப்பகிரகம், அர்த்த மகா மண்டபம் அமைப்புகளுடன் ரூபாய் 25 லட்சங்கள் செலவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குடமுழுக்கு விழா காணவிருக்கின்றது. 58 அகமுடையர் சமுதாயக்குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் திருப்பணி வேலைகள் இனிதே நடந்தேற நன்கொடைகள் வழங்கிட வேண்டுகிறோம்,

10.முடப்புளிக்காடு:

 

ஏந்தல் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில், அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் (ஆத்தாளுர்) வருடாந்திர திருவிழாக்கள் சித்ரா பௌர்ணமி - ஆனி திருமஞ்சன விழாக்களாகும்.

பேராவூரணி வட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜனரஞ்சகமான திருக்கோயிலாகும். ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி பிரமோற்சவ விழா மிகவும் சிறப்பு என்பதுடன், தினந்தோறும் இத்திருக்கோவில் விழாக்கோலம் கொண்டுள்ளது.

சர்வ மதத்தினரும் வழிபடுகின்ற திருத்தலமாகும். அந்த அளவிற்கு சேவார்த்திகள், வழிபாட்டிற்கும், திருமணம் மற்றும் இன்னோரன்ன நிகழ்ச்சிகளுக்கும் வந்து கொண்டிருக்கின்றனர். தேரோட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர்கள் ஒன்று கூடி, தேர் வடம் பிடித்து, நான்கு வீதிகளிலும் இழுத்து வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

விஜய ஆண்டு தைமாதம் 27ஆம் நாள் (09.02.2014) ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00க்கு மேல் 10.30க்குள் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இனிதே நடத்தப்பட்டது. ரூ 27 லட்சங்கள் செலவில் வைரத் திருத்தேர் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் :

புராதனமான வைணவத் திருக்கோயிலாகும். அனைத்து திவ்ய தேசங்களின் பலன்களையும் ஒரு சேர வழங்கி வருகின்ற திருப்பதி திருவேங்கடமுடையானே, பஞ்ச கிராமத்தில் ஒன்றான பேராவூரணியில் அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாளாக சேவை சாதிக்கின்றார்.

இத்திருக்கோயிலைப் புதுப்பித்து, பஞ்சவர்ண பொலிவுடன், சென்ற சர்வஜித்து ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் நாள் (13.09.2007) வியாழக்கிழமை மகா சம்ப்ரோக்ஷ்னம் செய்விக்கப்பெற்றது.

(பதினோர் நாட்டு திருக்கோயில்களில் வராது எனினும், பேராவூரணி வட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலம் என்பதால் இதில் குறிப்பிடப்பட்டது.)


11.ஆண்டாகோட்டை:

 

அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோயில் :

அருள்மிகு இராஜப்பன் கோவில் - அருள்மிகு கருப்பணசுவாமி திருக்கோயில். இங்கு கிடா வெட்டு பூஜை பிரபல்யமானது.

250 கிடாய்களுக்கு மேல் வெட்டப்படும். மதுரை மற்றும் பல்வேறுபட்ட பகுதிகளில், வெவ்வேறு சமுதாயத்தினர்கள் இங்கு கிடாய்கள் வெட்டி, படையல் செய்து வழிபட்டு, சமையல் செய்து உற்றார் - உறவினர்கள் கிராமத்தார்களோடு உணவு அருந்துவது சமபந்தி போஜனத்திற்கு எடுத்துக்காட்டான விழாவாகவும் இது அமைகின்றது.


நிறைவாக கூடி வாழ்தல் ஒரு கலை. கூடி வாழ்தலுக்கு ஒரு மையம் வேண்டும். அவ்வகையில் பதினோர் நாட்டு உறவின் முறையினர் வாழ்க்கை முழுவதற்கும் மையமாக விளங்கும் நமது இத்திருக்கோயில்கள் நமது செல்வமல்லவா! திருக்கோயில்களை சற்றும் சிதைவு படாமல் நாம் பேணல் வேண்டும். மிகப்பெரிய திருக்கோயில்களை எடுத்த மன்னர்கள் கூட எடுத்த பெருமையை விடப் பேணும் பெருமையே சிறந்தது என்று கருதியிருக்கின்றார்கள்.

நன்றி : பதினோர் நாட்டு உறவின்முறை சங்கம்

எங்களப்பன் மருது பாண்டியர்

மருது பாண்டியரின் சிறப்பினை பற்றி  தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் கூறியவை








நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை


Wednesday, February 21

அகமுடையாரும் உடையார் பட்டமும்

வட தமிழகத்தில் முதலியார் பட்டம் போன்றே உடையார் பட்டமும் அகமுடையார்களால் பரவலாக பயன்படுத்தபட்டு வருகிறது.உதாரணமாக வட மாவட்ட கப்பலூர் என்ற ஊரின் அமைப்பை கீழே உள்ள படத்தில் காணலாம்.





உடையார் பட்டம் கொண்ட பொன்முடி



Thursday, February 8

M.V.முத்துராமலிங்கம்




மதுரை மாவட்டம் லாடனேந்தல் ஊரில் 1946ம் ஆண்டு பிறந்தார் ஆறு வயதிலே தந்தை இறந்து விட்டார் ஏழ்மை காரணமாக பால் வியாபாரம் செய்து வந்தார்.

வேலம்மாள்


உழைப்பின் மூலம் முன்னேறி இன்று தனது தாயாரான வேலம்மாள் அவர்களின் பெயரில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களை திறம்பட நடத்தி வருகிறார்.

Wednesday, February 7

அம்மணி அம்மாள்

அம்மணி அம்மாள் பழந்தமிழ் குடியான அகமுடையார் இனத்தில் பிறந்தவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார்.திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர்.

அம்மணி அம்மாள்

இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது.இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது.



அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்)



இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர் என்று கூறிகின்றார்கள்.அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது, மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார்.நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது, அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள், அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு.



அம்மணி அம்மாள் 17ம் நூற்றாண்டின் இறுதியில் ஜீவ சமாதியடைந்தார்.இவரது சமாதி ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.இந்த மடத்தில் தீபத்திருவிழா வழிபாடு சிறப்பாகும்.திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அம்மணி அம்மாளின் ஜீவசமாதியில் நெய்தீபம் ஏற்றப்படும். மடத்தின் முன்பு பக்தர்கள் தீபம் ஏற்படுத்தி வழிபடுகின்றார்கள்.இம்மடத்தில் கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் புகழ்பெற்றது

அகமுடையார்களின் எதிர்ப்பு


முக்குலம் அல்லது தேவர் என்பதை சாதி பெயராக அறிவிக்க கூடாது என்று அகமுடைய முன்னோர்கள் அளித்த விபரங்கள்.அகமுடையார் மட்டுமல்லாது கள்ளரும் மறவரும் இதையே வலியுறுத்தியுள்ளனர்.


அகமுடையரின் எதிர்ப்பு












கள்ளர்களின் எதிர்ப்பு





அன்றைய முதல்வர் கருணாநிதியின் விளக்கம்



சட்டசபையில் ஆர்.எம்.வீரப்பனின் விளக்கம்


Friday, February 2

மதுரை சிதம்பர பாரதி சேர்வை


1905-ம் ஆண்டு ரங்கசாமி சேர்வை, பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பதினாறாவது குழந்தையாக மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ என்னும் இல்லத்தில் பிறந்தார் சிதம்பர பாரதி. ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து போக படிப்பு பாதியிலேயே நின்றது. ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் தலைமையில் போராடிய தீவிரவாதிகளான வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணியம் சிவா ஆகியோரின் வன்முறைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அவர்களின் வழியில் இயங்கினார். வீர் சாவர்க்கர் எழுதிய ‘1857 – முதல் சுதந்தரப் போர்’ என்ற நூல் வெள்ளையரால் தடை செய்யப்பட்டிருந்தது. அதைப் படிப்பவர்களும் விநியோகிப்பவர்களும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அதை மொழிபெயர்க்கச் செய்து காங்கிரஸ் மாநாடுகளில் விநியோகித்தார் சிதம்பர பாரதி. அந்த ஆண்டு 1927. (மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சௌந்தரம்.) 1928-ல் சென்னையில் ‘தேசோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்தினார். 1922-லிருந்து 1942 வரையிலான காலகட்டத்தில் ஏழு முறை - மொத்தம் 14 ஆண்டுகள் - வடநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்.மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆண் போராளிகள் பெரும்பாலானோர் சிறையில் இருந்த நிலையில் பெண் தொண்டர்கள் ஓர் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்து பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டுத் திரும்பி விட்டனர் போலீசார். அருகிலிருந்த கிராமத்து மக்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்தக் காரியத்தைச் செய்த போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவர் மீது திராவகம் வீசினார்கள். அது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிதம்பர பாரதி. சிறையிலிருந்து வெளிவந்த பின் தன் உறவுக்காரப் பெண்ணான பிச்சை அம்மாளை மணந்தார். பதினைந்து சகோதர சகோதரிகளோடு பிறந்த சிதம்பர பாரதிக்கு ஒரே மகள். பெயர் சண்முகவல்லி.சுதந்தரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957-ல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் அவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...