Tuesday, December 15

கோவில் திருப்பணித் தென்றல் கம்பரன்பர் வே.இராஜீ சேர்வை


கம்பரன்பர்  வே.இராஜீ சேர்வை அவர்கள் தன் வாழ்நாளை இறைத் தொண்டிலேயே கழித்தவர்.இதனால் இவர் திருமங்கலத்தின் கோவில் திருப்பணித் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.
இன்று திருமங்கலத்தில்  வைணவத்தின் சிறப்பு மிக்க அடையாளமாக இராஜாஜி தெருவில் கம்பீரமாக அமைந்திருக்கும் பெருமாள் கோவில் இவரின் பெரு முயற்சியால் உருவானதே ஆகும். இன்று கோவில் இருக்கும் இடமும் ,கோவிலின் முன்பு(கோவிலின் எதிரே) பேருந்து நிலையம் செல்லும் பாதையில் இருக்கும் பரந்த இடமும் இவர் காலத்தில் கோவிலுக்காகப் பெறப்பட்டதே.
இதே போல் சைவ நெறி தழைக்க திருமங்கலம் அரசு மருத்துமனை எதிரில் ஈசனின் வடிவமான “மூனீஸ்வரர்” ஆலயத்தை எழுப்பினார்.இன்று சிறிய இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் அந்நாட்களில் விரிவான இடத்தில் 20க்கும் மேற்பட்ட சிலைகளுடன் வெகு பிரசித்தமாக அமைந்திருந்தது.
அதுமட்டுமல்ல திருமங்கலம் புளியங்குளம் கிராமத்தில் (பி.கே.என் கல்லூரி செல்லும் பாதையில்) “செந்திலாண்டவர் ஆசிரமம்” ஒன்றை நிறுவி அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.மேலும் ஆறுபடை முருகனுக்கு தனி சன்னதி அமைக்க முயன்றார்(  இவர் இறந்ததால் கோவில் கட்டிடங்கள் பாதியில் இருப்பதும்,ஆறுபடை முருகன் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெறாது இருப்பதும் இன்றைய நிலை)
ஓவ்வொரு திருப்பணிக்குப் பின்பும் கடுமையான உழைப்பு அடங்கியிருந்தது. திருப்பணிக்காக  ஒருவரை ஒருமுறை அல்ல ,பலமுறை சந்தித்து ,இந்து தர்மங்களை எடுத்துக்கூறி  சம்மதிக்க வைத்து  பின்னர் தொடர்ந்த முயற்சியினால் இந்தக் கோவில்கள் உருப்பெற்றன.
இறைப்பணி மட்டுமின்றி,இலக்கிய பணியிலும் ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.இலக்கியப் பேரவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் இறைவணக்கத்தோடு ஆரம்பிப்பார்.இவர் இலக்கியப்பணியை பாராட்டி 1981ம் வருடம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்ட கம்பன் கழகத்தார் இவருக்கு “கம்பரன்பர்” என்ற பட்டத்தை வழங்கினர்
மேலும் பல ஆலயங்கள் திருமங்கலத்தில் பின்னாளில்  இவரைப் பின்பற்றி உருவாக எடுத்துக்காட்டாகவும், பல தர்மப் பணிகளுக்கு  ஊக்கமூட்டுபவராகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு இறைவனின் திருப்பணிகளில் திலைத்த இவர்  2006ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

நன்றி திருமங்கலம் இணையதளம்

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...