Showing posts with label போராளிகள். Show all posts
Showing posts with label போராளிகள். Show all posts

Thursday, March 8

நாடு கடத்தப்பட்ட நாயகர்கள்

மருது பாண்டியர்களை வீழ்த்திய வெள்ளையர்கள் எதிர்ப்பு போராட்டத்திற்கு துணையாக இருந்த பலரை இரக்கமின்றி படுகொலை செய்தனர் இன்னும் சிலரை நாட்டில் இருந்தால் கழகத்தில் ஈடுபடுவார்கள் என்ற நோக்கில் நாடுகடத்தினர் அதில் வயதில் சிரியவரான சின்ன மருதுவின் மகனும் அடக்கம்.மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 விடுதலை போராட்ட தியாகிகளை வெள்ளையர்கள் பினாங்கு நாட்டிற்கு நாடு கடத்தினர்.



நாடு கடத்தப்பட்ட 73 விடுதலை போராட்ட தியாகிகளின் பெயர்கள்:

1) வேங்கன் பெரிய உடையத்தேவர் - சிவகங்கை

2) முத்துவடுகு என்ற துரைசாமி (மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன்)

3) சின்ன லக்கையா என்ற பொம்மை நாயக்கர் - வாராப்பூர்

4) ஜெகநாத ஐயன் - இராமநாதபுரம்

5) பாண்டியப்ப தேவன் - கருமாத்தூர்

6) சடையமான் - கருமாத்தூர்

7) கோசிசாமி தேவர் - கருமாத்தூர்

8) தளவாய் மாடசாமி நாயக்கர் - பாஞ்சாலங்குறிச்சி

9) குமாரத்தேவன் - முள்ளூர்

10) பாண்டியன் - பதியான்புத்தூர்

11) முத்துவீர மணியக்காரர் - ஆணைக்கொல்லம்

12) சாமி - மணக்காடு

13) ராமசாமி

14) எட்டப்ப தேவர் - நான்குநேரி

15) பாண்டிய நாயக்கர் - கோம்பை

16) மண்டைத் தேவர்

17) மலையேழ்மந்தன்

18) வீரபாண்டிய தேவர்

19) கருப்ப தேவர்

20) சுப்ரமணியம்

21) மாடசாமி

22) பெருமாள்

23) உடையத்தேவர் (த/பெ : சின்னப்பிச்சை தேவர்)

24) தேவி நாயக்கர்

25) முத்துக்கருப்ப தேவர்

26) மண்டந்தேவர் (த/பெ : சங்கரநாராயண தேவர்)

27) பேயன் (த/பெ : பால உடையாத் தேவர்)

28) அழகிய நம்பி

29) ஒய்யக்கொண்ட தேவர்

30) சிவனுத்தேவர்

31) காணி ஆழ்வார்

32) மூப்பு உடையான்

33) கொண்டவன்

34) வீரபத்திரன் - நான்குநேரி

35) சிலம்பன் - நான்குநேரி

36) பேயன் - நான்குநேரி

37) ராமசாமி - நான்குநேரி

38) இருளப்பன் - நான்குநேரி

39) மாடசாமி - நான்குநேரி

40) வீரபாண்டியன்

41) வெங்கட்டராயன் - நான்குநேரி

42) உடையார்

43) முத்துராக்கு - நான்குநேரி

44) முத்துராக்கு - ஆனைக்கொல்லம்

45) சொக்கதலைவர் - நான்குநேரி

46) இருளப்ப தேவர் - நான்குநேரி

47) மல்லையா நாயக்கர் - இளவம்பட்டி

48) சுப்பிரமணி நாயக்கர் - கண்டநாயக்கன் பட்டி

49) மல்லைய நாயக்கன் - இலாம்பட்டி

50) சல்வமோனிய நாயக் - கட்ட நாயக்கன்பட்டி

51) தோமச்சி நாயக்

52) சுளுவமோனியா நாயக் - ஆடினூர்

53) இராமசாமி - குளத்தூர் பாலிகர் பேரன்

54) பிச்சாண்டி நாயக் - எருவுபோபரம்

55) தளவாய் கல்லுமடம்

56) சின்ன மாடன் - பசுவந்தனை

57) வைடியம் மூர்த்தி - கந்தீஸ்வரம்

58) தளவாய் பிள்ளை (தேசகாவல் மணிகர்)

59) சுளுவமணியம்

60) பெடன்ன நாயக் (சுளுவமணியம் மகன்) - தூத்துக்குடி போராட்ட தளபதி

61) கிருஷ்ணமா நாயக்

62) வாயுளன் - குளத்தூர்

63) மிளனன் - அறச்சேரி

64) வைல முத்து -கங்கராயகுறிச்சி

65) ராமன் - சுவளி

66) பாலையா நாயக் - நாஞ்சி நாட்டு சூரன்குடி

67) குமரன்

68) வெள்ளிய கொண்டான் வெள்ளியன்

69) இராமன்

70) அல்லேக சொக்கு

71) சேக் உசேன்

72) அப்பாவு நாயக்

73) குப்பன்னா பிள்ளை

Friday, February 2

மதுரை சிதம்பர பாரதி சேர்வை


1905-ம் ஆண்டு ரங்கசாமி சேர்வை, பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பதினாறாவது குழந்தையாக மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ என்னும் இல்லத்தில் பிறந்தார் சிதம்பர பாரதி. ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து போக படிப்பு பாதியிலேயே நின்றது. ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் தலைமையில் போராடிய தீவிரவாதிகளான வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணியம் சிவா ஆகியோரின் வன்முறைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அவர்களின் வழியில் இயங்கினார். வீர் சாவர்க்கர் எழுதிய ‘1857 – முதல் சுதந்தரப் போர்’ என்ற நூல் வெள்ளையரால் தடை செய்யப்பட்டிருந்தது. அதைப் படிப்பவர்களும் விநியோகிப்பவர்களும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அதை மொழிபெயர்க்கச் செய்து காங்கிரஸ் மாநாடுகளில் விநியோகித்தார் சிதம்பர பாரதி. அந்த ஆண்டு 1927. (மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சௌந்தரம்.) 1928-ல் சென்னையில் ‘தேசோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்தினார். 1922-லிருந்து 1942 வரையிலான காலகட்டத்தில் ஏழு முறை - மொத்தம் 14 ஆண்டுகள் - வடநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்.மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆண் போராளிகள் பெரும்பாலானோர் சிறையில் இருந்த நிலையில் பெண் தொண்டர்கள் ஓர் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்து பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டுத் திரும்பி விட்டனர் போலீசார். அருகிலிருந்த கிராமத்து மக்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்தக் காரியத்தைச் செய்த போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவர் மீது திராவகம் வீசினார்கள். அது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிதம்பர பாரதி. சிறையிலிருந்து வெளிவந்த பின் தன் உறவுக்காரப் பெண்ணான பிச்சை அம்மாளை மணந்தார். பதினைந்து சகோதர சகோதரிகளோடு பிறந்த சிதம்பர பாரதிக்கு ஒரே மகள். பெயர் சண்முகவல்லி.சுதந்தரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957-ல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் அவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

Monday, January 2

T.G.ஜெயராமன் அகமுடையார்

நேதாஜியின் இந்திய ராணுவப்படைக்கு அறைக்கூவல் விடுத்த போது வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் ரத்தத்தில் கையெழுத்திட்டு நேதாஜி படையில் சேர்ந்தவர்.


ராக்கெட் மற்றும் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்.



இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு தாமரை பட்டையமும் விருதும் அளித்து கெளரவித்தது. பாரத் ரத்னா மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் நேதாஜியின் இந்திய ராணுவப்படையில் பணியாற்றியதற்கு "நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரர் எனவும் விடுதலை போராட்ட தியாகி" எனவும் கௌரவப்படுத்தினார்

Friday, July 29

மாவீரன் வெங்கண்ணன் சேர்வைகாரர்


1853 இராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடடைந்து இருந்தது.நாட்டு மக்கள அதிருப்தியில் இருந்தனர்.அவர்களுக்கு எதிராக அரசு படையை பயன்படுத்தியது.அப்போது நாட்டு மக்களை காக்க விடிவெள்ளியாக வந்தவர் தான் வெங்கண்ணன் சேர்வைகாரர்.தொண்டைமானின் படைப்பிரிவின் தலைவராக இருந்ததால் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி படைப்பிரிவினரில் ஒரு பகுதியை கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக திருப்பினார்.படைவீரர்களை பணிக்கு செல்லாதபடி தூண்டினார்.விவசாய மக்களை வரிகொடுக்க வேண்டாமென விழிப்புணர்வு செய்தார்.நிலமை மோசமாவதை உணர்ந்த தொண்டைமான் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.1854ல் ஆங்கில ராணுவம் புதுக்கோட்டை வந்தது வெங்கண்ணர் அஞ்சாமல் போராடினார் இருப்பினும் நவீன ஆயுதங்கள் கொண்ட ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை ஒடுக்கினர்.இதன் விளைவால் ஆங்கில ராணுவம் நிரந்தரமாக புதுக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டது.தொண்டைமானின் அதிகாரமும் குறைக்கப்பட்டது.வெங்கண்ணன் சேர்வைகாரர் கலகம் என வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடகப்படுகிறது.இவர் புதுக்கோட்டையை ஆண்ட அகமுடையார் குல பல்லவராயர் வழிவந்தோர் தற்கால தொண்டைமான்களுக்கு முன்னால் புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள்.சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டையுடன் கிழவன் சேதுபதியின் ஆளுகையில் இருந்த சேது நாட்டின் சில பகுதிகளுக்கும் பிரதிநிதியாக இருந்தார்.இவரை நீக்கிவிட்டு தன்னுடைய கள்ளரின மனைவியின் அண்ணனான ரகுநாதராய தொண்டைமானுக்கு புதுக்கோட்டை பகுதியை வழங்கினார்.இவ்வாறு அரசு நீக்கப்பட்ட அகமுடையார்கள் படைத்தளபதியாகவும் படைப்பிரிவு தலைவர்களாகவும் வீரர்களாகவும்  பணிபுரிந்தனர்.

மலயா கணபதி




மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 10 வயதிருக்கும் போது மலேசியா சென்றார்.கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டு தன்னை கம்யூனிச இயக்கத்தில் இணைத்து கொண்டார். 1936-38 வருடங்களில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடினார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது மலேயா தமிழர்கள் சார்பாக மூன்று பேரை தமிழகம் அனுப்பி போராட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார் ஜப்பான் சரணடைந்ததை நேதாஜியிடம் கூறியவரும் இவரே. திராவிட இயக்க தலைவர்களாக மலாயாவில் முதலில் தோன்றியவர்கள் சிங்கை அகம்படியர் சங்கத்தை சேர்ந்தவர்களே. பின்னாளில் 'அகம்படியர் சங்கம்' 'தமிழர் மறுமலர்ச்சி கழகம்'(Tamil  Reform Society) என 1932இல் மாற்றம் பெற்றது.தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.இந்த சங்கம் முதலில் வெளியிட்ட வார பத்திரிகையே பின்னர் சிங்கையில் தமிழில் வெளியாகும் முதல் தினசரியாக 'தமிழ் முரசு' என வெளிவந்தது. சிங்கை அகம்படியர் மஹாஜன சங்கத்தின் தலைவராக இருந்த எ.சி.சுப்பையா அவர்களின் முயற்சியிலே ஆதி திராவிடர் சங்கம் நிறுவப்பட்டது.கணபதி அவர்களும் அகம்படியர் சங்கத்தின் பணியாற்றியிருக்கலாம் அதன் காரணமாகவே மிக பெரிய போராளியாக வந்தார் எனவும் கருதுகின்றனர். மலாயா மற்றும் சிங்கையில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து 'அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்' உருவாக்கப்பட்டது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட வலிமை மிக்க இயக்கத்தின் தலைவராக கணபதி இருந்தார். பல போராட்டங்களை நடத்தினார் 50000மக்கள் கலந்து கொண்ட மே தின அணிவகுப்பை நடத்தி காட்டினார். 1948இல் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தை தடை செய்வதாக அறிவித்தனர். சட்டத்திற்கு விரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என காரணம் காட்டி கைது செய்தனர் தூக்கு தண்டனையை கோலாலம்பூர் நீதிமன்றம் விதித்தது. தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது நேரு ஆங்கில அரசிடம் பேசி தடுக்க முயன்றார் ஆங்கில அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டாமென தந்தி அனுப்பினர் பலன் இல்லை தூக்கு தண்டனையை நிறைவேற்றினர் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மடிந்தார் அந்த மாவீரன். கணபதியின் இறப்பிற்கு பின் வீரசேனனும் (சிங்கை தொழிலாளர் சங்க தலைவர்) சுட்டு கொள்ளபட்டார். கயிற்றில் தொங்கிய கணபதி என முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இம்மாவீரனை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.

கணபதி தேவர் என்ற அகமுடையார் தான் தொழிலாளர்களின் தோழனாகவும் ஆங்கிலேயர்கள் மற்றும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராடிய முக்கிய சக்தியாக திகழ்ந்தவர்.

THANKS: http://www.malaya-ganapathy.com/

Monday, September 21

கருப்பசேர்வை



கருப்பசேர்வை கொங்கு நாட்டு ஓடாநிலைக் கோட்டை பாளையக்காரர் தீரன் சின்னமலையிடம் படைத் தலைவராக இருந்தவர். தீரன் சின்னமலையிடம் திறை வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை கருப்பசேர்வை விரட்டியடித்தார். மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கூட்டணி சேர்ந்து, சின்னமலை மற்றும் கருப்பசேர்வை, கம்பெனி ஆட்சிக்கு எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர். கம்பெனிப் படைகளுக்கு எதிராக, 1801இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802இல் ஓடாநிலைக் கோட்டையிலும், 1804-ல் அரச்சலூரிலும் நடந்த போர்களில் கருப்பசேர்வை தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன.

கள்ளிக் கோட்டையிலிருந்து பெரும் அளவில் வந்த ஆங்கிலேய பீரங்கிப் படைகள் ஓடாநிலைக் கோட்டையைத்தகர்த்து, சின்னமலையுடன் கருப்பசேர்வையையும் கைது செய்த, ஆங்கிலேயப் படைகள் சங்ககிரிக் கோட்டையில்இருவரையும் 31 ஆகஸ்டு 1805 அன்று தூக்கிலிட்டனர்.

Sunday, September 20

ஜாம்புவானோடை சிவராமன்


பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க, பெருமுதலாளிகள்,நிலச்சுவான்தார்கள் ,ஜமீன்தார்கள் அதிகாரத்திலும் , ஆணவத்திலும் மிதந்து ,பாட்டாளிகளை கொடுமைப்படுத்தி வந்த காலம் .ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் போர்க்குரலாக பொதுவுடமை இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் போராடி வந்தன. ஒரு கட்டத்தில் இயக்கங்கள் தடை செய்யப்பட தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு மக்கள் நலப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்த வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், ஜாம்புவானோடை சிவராமன் போன்றோருக்கு எதிராக காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.துரோகிகளால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஜாம்புவானோடை சிவ ராமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மணலி கந்தசாமி தலைமறை வாக இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தால் விட்டு விடுவதாக ஆசை வார்த்தை காட்டியபோது, தெரியாது என மறுத்துவிட்டார். நீ ஓடி தப்பித்து போய் விடு என காவல்துறை அதிகாரிகள் சொன்னபோது, `சிவராமன் தப்பி ஓடினான். சுட்டுக்கொன்றோம் என்று சொல்வாய். நான் ஒன்றும் கோழை அல்ல. தப்பி ஓட... என்று கூறி நெஞ்சில் சுடு... ஏவல்துறையே... என்று கூறி நெஞ்சில் குண்டு தாங்கி வீரமரணத்தை தழுவினார் தியாகி ஜாம்புவானோடை சிவராமன் 

வாட்டாக்குடி இரணியன்


இவர் இயற்பெயர் வெங்கடாச்சலம் தேவர். இவர் இளம் வயதில் சிங்கப்பூர் சென்று அங்கு பணி செய்யும் பொழுது பொதுவுடைமை கொள்கையில் ஈர்க்கப்பட்டு தனது பெயரை இரணியன் என்று மாற்றிக் கொண்டு போசினால் கவரப்பட்டு இந்திய தேசிய இராணுவத்தில் பணி செய்து பின் தனது 28வது வயதில் 1948ல் சொந்த ஊர் திரும்பினார். அப்பொழுது காங்கிரசின் ஆட்சியில் முதலாளித்துவம் வளர்ந்து தொழிலாளர்கள் பல இன்னல்களைக் கண்டனர். இதனைப் பார்த்ததும் பல தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராக பல போராட்டங்களை செய்து தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தார். பல குள்ளநரி முதலாளிகள் இவரின் மேல் பல பொய்யான வழக்குகளை பதிவு செய்து காவல் துறையினால் தேடப்பட்டார். பின் இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். காவல்துறை இவரை கைதுசெய்த போது இவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரை காவல்துறை உன்மீது வழக்கு ஏதும் இல்லை சென்றுவிடு என்று கூறியும் இரணியனிடம் கொண்ட நட்பினால் பிரியாமல் இருக்க இருவரையும் சுட்டு கொன்றது காவல்துறை. இந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினர். போசின் தலைமையை ஏற்றுக் கொண்ட இரணியன் சாதிபார்க்கவில்லை. தனது இறதி மூச்சுள்ள வரை நாட்டிற்காக மட்டும் பாடுபட்ட வீரர் அவர் தனது 30வது வயதில் இறந்தார்.வாடியக்காடு ஜமீன் (அ) மதுக்கூர் ஜமீனை எதிர்த்து தான் “வாட்டாக்குடி இரணியன்” போராடினார்.

Saturday, September 19

பொட்டு அம்மான்


பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ஆவர். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் கடற்புலிகளின் தலைவரான கேணல் சூசையுடன் இணைந்து தாக்குதற் திட்டங்களைத் தயாரித்தவர்.
இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலையில் இவரது பங்களிப்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கூறுகின்றன.

எங்கள் கரிகாலனின் வலது கை நீதான் என்பதை உலகறியும் அதை வைத்து என்றுமே நீ பெருமைதேடியவனில்லை.

உன் மனைவி, மக்கள் யாரென்றுகூட எம்மக்களுக்கு தெரியாது

கரிகாலனின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஆயிரமாயிரம் போராளிகள் அமைதியாக துணை நின்றார்கள். அவர்களுள் முதன்மையானவன் நீ.

எதிரிகளே அஞ்சி நடுங்கும் தமிழரின் உளவுப்பிரிவை கட்டியாண்டவன் நீ, அதை இன்றளவும் இயங்கவைதுக்கொண்டும் இருக்கிறாய்.

அன்று மணலாற்றில் முற்றுகைக்குள் இருந்தபோது தலைவர் சொன்னார் - " பொட்டு நிழல் போல பின்னால் இருக்கும் வரை பிரபாகரனுக்கு ஒன்றும் நிகழ்ந்து விடாது" என்று

அந்த நம்பிக்கை தான் இன்றும் இருக்கிறது பறந்த குருவி திரும்பும் போது எம்மக்களின் விடுதலையையும் உடன் கொண்டு வருமென்று !

Friday, September 18

எஸ். ஏ. கணபதி தேவர்



எஸ். ஏ. கணபதி அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 - இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர்.இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர்.
அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர்.மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர்

வாழ்க்கை சுருக்கம்

எஸ். ஏ. கணபதி இளம் வயதிலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரானார். அவரின் சாதனை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்கவனத்தையே ஈர்த்தது. எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், பத்து ஆராங் என இரு நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களுக்கு மத்தியில் வாட்டர்பால் தோட்டம் (Waterfall Estate) இருக்கிறது. அங்கே கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும் துப்பாக்கி குண்டுகளும் வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
உடனடியாக, அவர் அங்கிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டார். அவரைக் காப்பாற்ற ஜவஹர்லால் நேரு புதுடில்லியில் இருந்து பல முயற்சிகளை மேற்கொண்டார்.
நேருவின் நண்பர் வி. கே. கே. கிருஷ்ண மேனன் லண்டனில் முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் இந்தியாவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. விசாரணை செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். எஸ். ஏ. கணபதி தூக்கில் இடப்பட்டதை எதிர்த்து இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
எஸ். ஏ. கணபதி தூக்கிலடப்பட்ட செய்தியைப் பிரித்தானிய அரசாங்கத்தின் காலனி ஆட்சிகளுக்கான அமைச்சர் வில்லியம்ஸ் டேவிட் ரீஸ், நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். எஸ். ஏ. கணபதியின் வழக்கில் நீதி மதிப்பீட்டாளர்களாக இருந்த ஓர் ஐரோப்பியரும் ஓர் இந்தியரும் ஒரு சேர தூக்குத் தண்டனைக்கு முடிவு எடுத்தனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வாழ்க்கை வரலாறு

எஸ். ஏ. கணபதி தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர் வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தைஅமைத்தார். அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்திய தேசிய ராணுவத்தினர் (Indian National Army) நடத்தி வந்தனர். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும் பயிற்றுநராகவும் சேவை செய்தார். மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் Malaya Communist Party (MCP) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இந்தக் கட்டத்தில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம்

இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது. ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார்.
எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை நடத்தியது. எஸ். ஏ. கணபதி ஊக்கமுடையவராகவும், செயல்பாட்டுத் திறன் மிக்கவராகவும் இருந்தார். இந்தப் பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைத்துவத்திற்கு கொண்டு சென்றது.

மலாயாத் தொழிற்சங்கங்களின் உருவாக்கப் பின்புலம்

1900களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். 1928 ஆம் ஆண்டு முதல் 1937 வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் அந்தச் சம்பளமும் குறைக்கப்பட்டு 40 காசாகக் கொடுக்கப் பட்டது. அதனால் பிரச்னைகள் ஏற்பட்டன. அதற்கு தீர்வு காண 1939 ஜனவரி முதல் தேதியில் இருந்து பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன.
சீனத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு வரை கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் முன் வந்தன. சீனத் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் இடையிலேயே பாரபட்சம் காட்டப்பட்டது. ஒரே அளவுள்ள வேலை. ஆனால், ஏற்றத் தாழ்வான சம்பள முறை. இதைக் கண்டித்து சிலாங்கூர், கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இது 1940இல் நடந்தது.

10 காசு சம்பள உயர்வு போராட்டம்

அந்த முதல் இந்தியத் தொழிற்சங்கத்திற்கு, அப்போது கோலாலம்பூரில் மிக முக்கியப் பிரமுகராக விளங்கிய ஆர். எச். நாதன் எனும் ஆர். ஹாலாசிய நாதன் தலையாய பங்கு வகித்தார். இவர் 1938இல் தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியர் பகுதியில் பணிபுரிந்து வந்தார். கிள்ளான் வட்டார இந்தியத் தொழிலாளர்கள் 10 காசு சம்பள உயர்வு கோரிப் போராடினர். அப்போதைய தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் தோட்டத்திற்குள் வருகை தரக்கூடாது. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரில் மிதிவண்டியில் போகக்கூடாது எனும் அடிமைத்தனமான கட்டுப்பாடுகள். இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்; சம்பளத்தில் 10 காசு உயர்த்தி 60 காசாகத் தர வேண்டும் என்று கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கம் போராட்டத்தில் இறங்கியது.

வேலை நிறுத்தம்

1941 பிப்ரவரி மாதம் கிள்ளான் வட்டார இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும்; 5 காசு சம்பள உயர்வு தரவும் தோட்ட நிர்வாகங்கள் முன்வந்தன. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தம் 1941 ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவுக்கு வந்தது. நாடு முழுமையும் இருந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த வேலை நிறுத்தம் ஒரு புது விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மலாயாவில் முதன்முறையாகப் பெரிய அளவில் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தத்திற்கு மூல காரணமாக இருந்த ஆர். எச். நாதனும், அவருக்கு உதவியாக இருந்த டி. சுப்பையா என்பவரும், 1941 மே மாதம் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

ஜப்பானியர் ஆட்சி

1941 டிசம்பர் மாதம் தொடங்கி 1945 வரையில் மலாயாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்தனர். அந்தக் காலக்கட்டத்தில் தொழிற்சங்கங்கள் துடிப்புடன் செயல்படவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தன. 1945 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் ஜப்பானியர்களின் ஆட்சி ஒரு முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல தொழிற்சங்கங்கள் மலாயாவின் பல பகுதிகளில் உருவாக்கம் பெற்றன. இந்தியர்கள் பலர் அந்தத் தொழிற்சங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்தனர்.
  • கெடா இந்தியர் தொழிலாளர் சங்கம் - ஏ.எம்.சாமி (தலைவர்)
  • பேராக் இந்தியத் தொழிலாளர் இயக்கம் - எம்.சி.பி.மேனன் (தலைவர்)
  • நெகிரி இந்தியர் தொழிலாளர் சங்கம் - கே.சௌத்ரி; பி.பி.நாராயணன் (தலைவர்)
  • சிலாங்கூர் தோட்டத் தொழிலாளர் சங்கம் - சி.வி.எச்.ஏ.மூர்த்தி (தலைவர்)

அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்

இவ்வாறு தோன்றிய தொழிற்சங்கங்களில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களும் இடம் பெற்று இருந்தனர். அவர்களும் இந்தத் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர். மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றாக இணைத்து அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் (Pan Malaysian Federation of Trade Union) எனும் பெயரில் ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் முதல் மாநாடு 1946 மே மாதம் 15 ஆம் தேதி சிங்கப்பூர் சிலிகி சாலையில் இருந்த ஜனநாயக இளைஞர் கழக மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு லூ சின் இங் என்பவர் தலைமை தாங்கினார். அந்த மாநாட்டிற்குப் பிறகு லூ சின் இங், பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்ப்பட்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சி

அதன் பின்னர் 1947 பிப்ரவரி மாதம் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக எஸ். ஏ. கணபதி பொறுப்பேற்றார். அந்தச் சம்மேளனத்தின் மத்திய செயல்குழுவில் 4 சீனர்கள், 4 இந்தியர்கள், 2 மலாய்க்காரர்கள் இடம் பெற்றிருந்தனர். சிங்கப்பூர் துறைமுக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. வீரசேனன் அந்தத் தொழிற்சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவர்.
அப்போது மலாயா கம்யூனிஸ்டு கட்சி தலைமறைவு இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாட்டில் நிகழ்ந்த பற்பல குழப்பங்களுக்கு மலாயா கம்யூனிஸ்டு கட்சியே காரணமாகவும் இருந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டு இயங்கிய தொழிற்சங்கங்களைக் காவல் துறையினர் மிக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். தொழிற்சங்க அலுவலகங்களில் சோதனைகளையும் மேற்கொண்டனர். சில தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டு காவலில் தடுத்தும் வைக்கப்பட்டனர்.

அவசரகால பிரகடனம்

மலாயாவில் பல வேலை மறியல் போராட்டங்களை அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன் நின்று நடத்தி வந்தது. அதனால், 1946இல் மலாயா,சிங்கப்பூர் பெருநிலங்களில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. தொழிற்சங்கங்க பதிவிற்காகத் தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
கடைசியில், 1948 ஜூன் 13இல் தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் ஒட்டு மொத்தமாகத் தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், சிங்கப்பூரில் தடை செய்யப்படவில்லை. ஆனால், சிங்கப்பூரிலும் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட வேண்டும் என ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் (Singapore Straits Times) 19 ஜூன் 1948 இல் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தித் தலையங்கம் எழுதியது.

பி. வீரசேனன்

அப்போது சிங்கப்பூர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகப் பி. வீரசேனன் என்பவர் இருந்தார். 1947ஆம் ஆண்டில் மட்டும் ஒரு வாரத்திற்கு இரண்டு எனும் எண்ணிக்கையில், 89 ரப்பர் தோட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அந்த வேலைநிறுத்தங்களுக்கு அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன்னோடியாக விளங்கியது. ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் மலாயாவுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் சர் எட்வர்ட் ஜெண்ட்டிற்கு (Sir Edward Gent) நெருக்குதல்கள் கொடுத்தது. சர் எட்வர்ட் ஜெண்ட் ஓர் உயர் ஆணையராக இருந்தும் மலாயாவில் ஒரு நியாயமான மனிதராக நடந்து கொண்டார்.
எஸ். ஏ. கணபதியை சிங்கப்பூரில் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை நிராகரித்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்; சிங்கப்பூரில் அல்ல என்பதில் சர் எட்வர்ட் ஜெண்ட் பிடிவாதமாகவும் இருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் 1948 ஜூலை 4இல், அவர் லண்டன் திரும்பிய போது அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் அவர் இறந்து போனார். அந்த விமான விபத்தைப் பற்றிய மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன.
மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஊடுருவல் இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டது. அதனால், தொழிற்சங்க அலுவலகங்கள் அடிக்கடி சோதனையிடப்பட்டன. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். 1948 ஜூன் மாதம் 18 ஆம் தேதி நாடு முழுமையும் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது.

கணபதியின் கடைசிகாலம்

பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். எஸ். ஏ. கணபதி பத்து ஆராங் நகரத்திற்கு அருகில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் (World Federation of Trade Unions) எஸ். ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டன.

ஜவஹர்லால் நேரு வற்புறுத்தல்

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய விடுதலை வீரர் நேதாஜி போன்றோரிடம் எஸ். ஏ. கணபதிக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. 1945 ஆகஸ்டு 10ஆம் தேதி ஜப்பான் சரணடைந்த செய்தியை முதன்முதலில் நேதாஜிக்கு அறிவித்ததே எஸ். ஏ. கணபதிதான். சிங்கப்பூரில் இருந்து சிரம்பான்வந்து அந்தச் செய்தியை எஸ். ஏ. கணபதியும் லட்சுமிய்யாவும் நேதாஜியிடம் தெரிவித்தனர் என்று நம்பபடுகிறது.  ஜவஹர்லால் நேரு சிங்கப்பூர் வந்திருந்த போது எஸ். ஏ. கணபதியைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
கணபதியின் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு நேரடியாகவும் பிரிட்டனுக்கான இந்திய்த் தூதர் வே. கி. கிருஷ்ண மேனன் மூலமாகவும் பிரித்தானிய பிரதமரை வற்புறுத்தினார். அதற்கு பிரித்தானிய பிரதமர் சம்மதம் தெரிவித்தார். முறையான உத்தரவு தொலைத்தந்தி வழி அனுப்பபட்டது. ஆனால், பலன் ஏதும் இல்லை.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...