Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Wednesday, February 7

அம்மணி அம்மாள்

அம்மணி அம்மாள் பழந்தமிழ் குடியான அகமுடையார் இனத்தில் பிறந்தவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார்.திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர்.

அம்மணி அம்மாள்

இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது.இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது.



அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்)



இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர் என்று கூறிகின்றார்கள்.அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது, மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார்.நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது, அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள், அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு.



அம்மணி அம்மாள் 17ம் நூற்றாண்டின் இறுதியில் ஜீவ சமாதியடைந்தார்.இவரது சமாதி ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.இந்த மடத்தில் தீபத்திருவிழா வழிபாடு சிறப்பாகும்.திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அம்மணி அம்மாளின் ஜீவசமாதியில் நெய்தீபம் ஏற்றப்படும். மடத்தின் முன்பு பக்தர்கள் தீபம் ஏற்படுத்தி வழிபடுகின்றார்கள்.இம்மடத்தில் கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் புகழ்பெற்றது

Tuesday, January 3

சித்தானந்த சுவாமிகள்

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கடலூரில் பழந்தமிழ்குடியாம் அகமுடையார் இனத்தில் பிறந்தார்.சித்துகள் செய்வதிலேயே ஆனந்தம் கண்டவர் என்பதால்தான் அவருக்கு அத்தகைய பெயர் வழங்கப்பட்டு வந்தது.
அவரது வாழ்வு பல அபூர்வ சம்பவங்களை உள்ளடக்கியது.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டையை
அடுத்துள்ள கருவடிக் குப்பத்தில் சுவாமிகளின் சமாதித் திருக்கோவில் உள்ளது.



விளையாட்டாக சித்தானந்த சுவாமிகள் எது சொன்னாலும் அது உண்மையே ஆயிற்று. அவர் எங்கு நின்றாலும், எதைத் தொட்டாலும் அங்கே பொன் விளைந்தது. மக்கள் அவரை ஒருமுறை தரிசனம் செய்தால் அவர்கள் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்வு கண்டன.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் வாழ்ந்து வந்தார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை. அவரது மனைவிக்குத் தீராத வயிற்றுவலி. யாரோ சொன்னார்கள்- சித்தானந்தர் வீட்டுக்குள் வந்தால் வயிற்றுவலிலி உடனே சரியாகிவிடும் என்று.
நம்பிக்கையோடு சித்தானந்தரைத் தேடி கடலூர் வந்தார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை. விஷயத்தைச் சொல்லிலி அவரைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
சித்தானந்தர், "அதற்கென்ன புறப்படுவோம்' என உடன் கிளம்பினார். அவர் புதுச்சேரியில் பிள்ளை வீட்டுக்குள் நுழைந்த மறுகணம் பளிச் என்று வயிற்றுவலிலி முற்றிலுமாக நீங்கி எழுந்து உட்கார்ந்தாள் பிள்ளையின் மனைவி.
அதுவரை வயிற்றுவலிலியால் துடித்துக் கொண்டிருந்த அவள் அளவற்ற நிம்மதி அடைந்தாள். தெய்வம் அல்லவா மனித வடிவில் வந்திருக்கிறது!
சற்று யோசித்த அவள் சித்தானந்தரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள். "சாமீ! நீங்கள் எங்கள் வீட்டிலேயே சிலகாலம் தங்கலாகாதா?' என்பதே அந்த எளிய பெண்மணியின் வேண்டுகோள்.
இதற்கான காரணங்கள் இரண்டு. சுவாமிகள் தன் இல்லத்தில் தங்க வேண்டும் என உண்மையிலேயே பக்திப்பூர்வமாக அவள் விரும்பினாள் என்பது ஒன்று. சுவாமிகள் தன் வீட்டை விட்டுச் சென்றால் தன் கொடும் வயிற்றுவலிலி எங்கே மறுபடி வந்துவிடுமோ என அஞ்சினாள் என்பது இன்னொன்று.
அவள் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சுவாமிகள் நகைத்தார். ""மகளே! உன் வயிற்றுவலிலி மீண்டும் உன்னைத் துன்புறுத்தாது. அதற்குக் காரணமான தீய சக்திகள் வீட்டை விட்டு விலகி ஓடிவிட்டன. உனக்கு மறுபடி வயிற்றுவலிலி வருமோ என்ற அச்சம் தோன்றும்போதெல் லாம் பிறவிப்பிணி உள்பட எல்லாப் பிணிகளையும் போக்கக் கூடிய நமசிவாய மந்திரத்தை ஜெபிப்பாயாக. என்றாலும் உன் வேண்டுகோளுக்கு நான் உடன்படு கிறேன். உன் வீட்டிலேயே தங்குகிறேன்!'' என்றார் சுவாமிகள்.
முத்துகுமாரசாமிப் பிள்ளையும் அவர் மனைவி அன்னம்மாளும் அடைந்த ஆனந்தத்திற்கு ஓர் அளவு உண்டா என்ன? மாபெரும் சித்தராய் உலகோரால் கொண்டாடப்படும் ஒரு மகான் தங்கள் வீட்டிலேயே கொஞ்ச காலம் தங்கப் போகிறார்! பக்திப் பரவசத்தில் அவர்கள் தழுதழுத்தார்கள். தினமும் அந்த வீட்டில் நடந்தது ஆன்மிகச் சந்தைதான். நூற்றுக்கணக்கான மக்கள் சுவாமிகளைத் தேடி வந்தார்கள். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவகை பிரச்சினை.
சுவாமிகளின் அருளுரையைக் கேட்டும், அவர் நிகழ்த்தும் அற்புதங்களைக் கண்டும் அவர்கள் மெய் சிலிர்த்தார்கள். எல்லாரிடமும் ஆசைகளைக் குறைத்துக் கொண்டு நேர்மையான வழியில் வாழுமாறு வலிலியுறுத்தினார் சுவாமிகள். தீய பழக்கங்களைத் தொலைத்துவிட்டு தூய வாழ்வுக்குத் திரும்பு மாறு கூறினார். அவரது அருளுரைகளுக்கு வசப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல நல்ல நெறிகளை அனுசரித்து வாழத் தலைப் பட்டார்கள். சுவாமிகளின் புகழ் மேலும் மேலும் பரவியது.
சித்தானந்தர் பற்பல உடல் பிணி களுக்கு மருத்துவம் செய்தார். அவருக்கு உடல்நோய்களைத் தீர்க்கும் மருத்துவம் தெரிந்திருந்தது. தமது அற்புத சக்தியினா லும் பலரது பிணிகளைக் குணப்படுத் தினார்.
எங்குசென்றாலும் அன்னம்மாளுக் கும் முத்துக்குமாரசாமிப் பிள்ளைக்கும் கொடுத்த வாக்குறுதிப்படி இரவு அவர்கள் வீட்டிற்குத் திரும்பிவிடுவார். சுவாமிகள்மேல் மட்டற்ற அன்பு செலுத் திய அந்த அபூர்வத் தம்பதிகள் அவரைத் தங்கள் பிள்ளைபோல் பார்த்துக் கொண்டார்கள். முத்துக்குமாரசாமிப் பிள்ளைக்கு சுவாமிகள் பிள்ளை ஆனார்! அன்னம்மாளின் வயிற்றில் பிறந்த பிள்ளை அல்ல என்றாலும் வயிற்றுவலிலி நீக்கிய பிள்ளை அல்லவா!
சித்தானந்தரின் மகிமைகளால் கவரப்பட்டு முத்தையா முதலியார் என்ப வர் அவரது தீவிர அன்பரானார். சித்தானந்தர் நினைவிலேயே தோய்ந்து அவரையே பக்திசெய்து வாழ்ந்து வந்தார்.



முதலிலியாரின் மனைவிக்குத் திடீரென்று கடும் பிரசவ வலி எடுத்தது. அப்போது அவள் பட்ட வேதனையையும் அந்த வலியால் அவள் அலறிய அலறலையும் காணவும் கேட்கவும் சகிக்காத முதலியார் மருத்துவரைத் தேடிப் போவதற்கும் முன்பாக சுவாமிகளைத் தேடிவந்தார். ""என்ன செய்வேன். இப்படித் துடிக்கி றாளே அவள்! மருத்துவரைப் பார்ப்பதற் கும்முன் தங்கள் ஆசிகளைப் பெறவந் தேன்'' என்று மனம்குமுறிப் பதறினார்.
அமைதியாக முதலியாரைப் பார்த்த சுவாமிகள், ""ஆனந்தன் என்று பெயர் வை!'' என்றார். முதலிலியாருக்கு ஒன்றும் புரியவில்லை. ""என்ன சொல்கிறீர்கள் சுவாமி?'' என்று கேட்டார் அவர்.
""உன் மனைவியின் பிரசவ வலிலி நின்று விட்டது. அவள் இப் போது மிகுந்த மகிழ்ச்சியோடு உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். சுகப் பிரசவம் ஆகி யிருக்கிறது. ஆண்குழந்தை பிறந்திருக் கிறது. இனி நீ ஆனந்தமாக இருக்கப் போகிறாய். அதனால்தான் அந்தக் குழந்தைக்கு ஆனந்தன் என்று பெயர் வை என்றேன். இனி மருத்துவர் எதற்கு? நேரே வீட்டுக்குப் போ! மனைவியைக் கவனி!'' என்று திருநீறு கொடுத்து அனுப்பினார் சுவாமிகள்.
வீட்டுக்கு ஓடிய முதலிலியாருக்கு உண்மை யிலேயே ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. பக்கத்தில் கொழுகொழுவென்று ஓர் ஆண் குழந்தை சிரித்துக் கொண்டிருக்க, மனைவி வாயெல்லாம் பல்லாக அவரை வரவேற்றாள். தம் ஞானக் கண்ணால் அனைத்தையும் உணர்ந்துசொல்லும் சுவாமிகளின் ஆற்றல்
முதலியாரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவர் சுவாமிகள்மேல் கொண்ட பக்தி மேலும் வலிலிமைப்பட்டது.
ஒருநாள் சுவாமிகள் குயவர்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வழியிலிலிருந்த சாராயக் கடை ஒன்றின் வாசலிலில் ஒரு குடிகாரன் அவரை வழிமறித்தான்.
""சாமீ! ஆன்மிகமெல்லாம் பேசறீங்களாமே? கொஞ்சம் சாராயம் குடிச்சுப் பாருங்க. நல்லா ஆன்மிகம் பேச வரும்!'' என்று அவரைக் கிண்டல் செய்தான். அவனைத் தவிர்த்துவிட்டுப் போக முனைந்தார் அவர். ஆனால் அவனோ மறுபடி மறுபடி வழிமறித்து சாராயம் குடிக்கு மாறு வற்புறுத்தினான்.
கெடுதலைத் தனக்குத்தானே வரவழைத்துக் கொள்வதென அவன் முடிவு செய்திருக்கிறபோது அதை யார்தான் தடுக்க முடியும்? சுவாமிகள் ""சரி, சாராயம் கொடு!'' என்றார். நிகழவிருக்கும் விபரீதத்தை உணராமல், சாராயக் கடைக்காரரிடம் ""சாமிக்கு வேண்டும் மட்டும் சாராயம் கொடு!'' என்றான் அவன்.
சுவாமிகள் மெல்லிலிய முறுவலுடன் சாராயம் குடிக்கலானார். திரும்பத் திரும்ப சாராயத்தை வாங்கிக் குடித்துக் கொண்டே இருந்தார். ஒரு பீப்பாய் சாராயம் காலிலியாயிற்று!
கடைக்காரன் வெலவெலத்துப் போனான். சுவாமிகளைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த அவன் முகத்தில் அச்சம் பரவியது.
ஆனால் சுவாமிகளிடம் எந்தத் தள் ளாட்டமும் இல்லை. ஏதோ பசித்த குழந்தை பாலைக் குடிப்பது மாதிரி குடித்துக் கொண்டே இருந்தார்.
ஆனால் அவர் குடித்த சாராயத்தின் போதையெல்லாம் குடிகாரன் உடலிலில் ஏறிக் கொண்டிருந்தது. தன் போதையைக் கட்டுப் படுத்த இயலாத அவன் தள்ளாடினான்; தடுமாறினான்; வாய்குழறினான்; மயக்கம் போட்டுக் கீழே சரிந்தான். அளவற்ற போதை காரணமாக அவன் நாடித் துடிப்பு மெல்ல மெல்லக் குறைந்துகொண்டிருந்தது.
கடைக்காரன் சுவாமிகளின் காலிலில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். ""என்னை ஏதும் சபித்துவிடாதீர்கள். நான் பிள்ளை குட்டிக் காரன்!'' என்று அழுதான். ""நீ என்னப்பா செய்வாய்? அவன் சொன்னபடி நீ செய்தாய். அவ்வளவுதானே?'' என்ற சுவாமிகள் தன்னை வம்புசெய்த குடிகாரனை ஒரு பார்வை பார்த்து விட்டு, வேகமாக முத்துக்குமாரசாமிப் பிள்ளை இல்லத்தை நோக்கி நடையைக் கட்டினார்.
திகிலடைந்த கடைக்காரன் உடனே ஓடிப் போய் அந்தக் குடிகாரனின் உறவினர்களுக்குத் தகவல் சொன்னான். அவர்கள் வந்து பார்ப் பதற்குள் நிலைமை மோசமாகியிருந்தது.
அளவற்ற போதை தலைக்கேற அவன் பிழைப் பதே சிரமம் என்பதை உறவினர்கள் உணர்ந் தார்கள்.
மருத்துவரிடம் போகலாம் என்று ஒருவர் சொன்னதைக் கேட்டு, அந்தப் பைத்தியக்காரத் தனத்தைச் செய்யவேண்டாம் என்று கண்டித் தாள் அந்தக் குடிகாரனின் மனைவி. தன் கண வனை அள்ளித் தோள்மேல் சுமந்துகொண்டு சுவாமிகளைத் தேடி ஓடினாள் அவள். கூட்டம் அவளைப் பின்தொடர்ந்தது.
சுவாமிகளிடம், ""ஐயா, எனக்கு நீங்கள்தான் மாங்கல்யப் பிச்சை தரவேண்டும்!'' எனத் தன் கணவனை அவர் காலிலில் கிடத்தித் தானும் விழுந்து வணங்கினாள்.
மக்கள் வெள்ளம் என்ன நடக்கப் போகிறதோ என அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. சுவாமிகளின் கருணை மனம் உருகியது.
""டேய். போதையில் கிடந்தது போதும்; எழுந்திரு.'' என்று ஆணையிட்டார் அவர்.
அடுத்த கணம் வாரிச்சுருட்டிக் கொண்டு
அவன் எழுந்து நின்றான்.
""சாமி... என்னை மன்னிச்சுடுங்க சாமி!'' என மறுபடி அவர் காலிலில் விழுந்து பணிந் தான். இனிமேல் சாராயம் குடிப்ப தில்லை என்று மனைவிக்கு சத்தியம் செய்து தரச்சொன்னார் சுவாமிகள். அவன்
அப்படியே சத்தியம் செய்துகொடுத்தான். மனைவி கண்ணீர் மல்க சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றாள்.
சித்தர்களின் உணவைப் பற்றி என்ன சொல்வது? அவர்களில் சிலர் பல மாதங்கள் சாப்பிடாமலே இருப்பதுண்டு. சிலர் பசி வந்தால் கல்லைக் கடித்துச் சாப்பிட்டுப் பசி ஆறுவதுண்டு! சித்தானந்த சுவாமிகள் எப்போது சாப்பிடுகிறார்- எதைச் சாப்பிடு கிறார் என்றெல்லாம் அதிகம் பேர் எதுவும் அறியவில்லை. அவர் சாப்பிடுவதுண்டா, காற்றையே உணவாய்க் கொள்கிறாரா என்றுகூட சிலர் சந்தேகம் கொண்டதுண்டு.
ஆனால் முத்தையா முதலிலியாரின் மனைவி அவர்மேல் தன் பிள்ளைபோல் பாசம் வைத்தி ருந்தாள். ""உடலைப் பராமரிக்காமல் என்ன தியானம் வேண்டிக் கிடக்கிறது? கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் பிறகு இந்த தியானத்தை எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாதா?'' என்று அடிக்கடி அவள் அங்கலாய்ப்பாள். தன் வயிற்று வலிலியை நீக்கியவரின் வயிற்றுப் பசியை நீக்குவதைத் தன் கடமைபோல் மேற்கொண்டிருந்தவள் ஆயிற்றே!
சுவாமிகள் எப்போதாவது அவளிடம் வசமாக மாட்டிக் கொள்வார். அவளது தாயன் பைப் பார்த்துச் சிரித்துக்கொள்வார். சாப்பிட்டு விட்டுப் போகும்படி அவள் வற்புறுத்தும்போது சிலநேரம் சரி என்று சாப்பிட உட்கார்வார்.
முத்தையா முதலிலியார் வீட்டில் ஒரு கருங்கல் உண்டு. அம்மிக்கல் மாதிரி சற்று சமதளமாக உள்ள கருங்கல் அது. அதில் இலை எதுவும் போடாமல் கழுவிவிட்டு உணவு பரிமாறச் சொல்வார்.
சுவாமிகள் ஏன் இப்படியெல்லாம் சொல்கி றார் என்ற விசித்திரங்களை யார்தான் அறிய முடியும்? சுவாமிகள் கல்லிலில் சாப்பிடுவதை எண்ணி அந்தப் பெறாத தாயின் மனம் உருகும். ஆனால் என்ன செய்வது? கருங்கல்லிலில் பரிமாற மறுத்தால், அவர் சாப்பிடா மலே போய்விட்டால் அது இன்னும் சங்கடமல்லவா?
உளுந்து வடை, சுண்டல் போன்றவைதான் அவருக்கு விருப்பமான உணவு வகை. அவற்றை ஏதோ சாப்பிட்டேன் என்று கொறித்துவிட்டு எழுந்துவிடுவார்.
அவர் தனக்காகச் சாப்பிடாமல் வேறு யாருக்காகவோ சாப்பிடுவதாகத் தோன்றும். சாப்பிட்ட நாட்களிலும் சரி; சாப்பிடாத நாட்களிலும் சரி- உடல் ஆரோக்கியத்திலோ சுறுசுறுப்பான நடையிலோ சுவாமிகளிடம் எந்த வித்தியாசத்தையும் காணமுடியாது.
அவர் மற்ற எல்லாரையும்போல அல்ல; மற்ற எல்லாரையும்விட அதிக ஆரோக்கியத்தோடு இருந்தார்.
'சாப்பிடும்போது வேறு யாருக்கோ சாப்பிடுவது மாதிரி சாப்பிடுகிறார். அது மாதிரி அவர் சாப்பிடாத காலங்களில் அவருக் காக வேறு யாரோ சாப்பிடுகிறார்களோ என்னவோ!' என்று நினைத்து வியந்து கொள்வாள் முதலிலியாரின் மனைவி.
சுவாமிகள் சாப்பிடப் பயன்படுத்திய அந்தக் கருங்கல்லுக்கு ஒரு தனி மகிமை வந்தது. பிரசவ வலிலியால் அவதிப்படுபவர்கள் அந்தக் கல்லிலில் சற்று நேரம் உட்கார்ந்தால் போதும். வலிலி விரைவில் நீங்கி சுகப் பிரசவம் நடந்தது! பிரசவத்திற்குக் காத்திருக்கும் பெண்களெல்லாம் முதலியார் மனைவியின் அனுமதியைப் பெற்று, அந்தக் கல்லில் சற்றுநேரம் பிரார்த்தனையோடு அமர்ந்து விட்டுச் செல்வார்கள்.
ராமாயண காலத்தில் ராமன் கால்பட்ட கல்லிலிலிலிருந்து அகலிலிகை உயிர்த்தெழுந்தாள். இக்கலிகாலத்தில் சுவாமிகளின் கைபட்ட கல் பல உயிர்கள் வலிலியின்றிப் புவியில் எழ உதவியது.
சுவாமிகள்மேல் ஒரு குயவனுக்கு மிகுந்த அன்பு. அவர் பெருமையை உணர்ந்திருந்த அவன் அடிக்கடி அவரைத் தேடிவருவான்.
அவரது அருளுரைகளில் மனம் ஈடுபட்டு கேட்டுக் கொண்டிருப்பான். தன் வீட்டாரிடம் சுவாமிகளின் மகிமைகள் பற்றி ஓயாமல்
சொல்லிலிக் கொண்டிருப்பான்.
அவனுக்கு வாழ்நாளில் ஒரே ஒரு ஆசை. சுவாமிகள் என்றாவது ஒரு நாள் தன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்பதுதான் அது. ராமன் சாப்பிடப் போகும் விருந்துக்காக சபரி காத்திருந்த மாதிரி அவனும் பிரார்த்தனை செய்துகொண்டு காத்திருந்தான்.
சுவாமிகள் எங்கு போனாலும் அங்கே போய் அவரது அருள்பொலிலியும் திருமுகத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டான் அவன். சுவாமிகள் உபதேசம் செய்யும் நேரங்களில் ஐயப்ப சாமி மாதிரி குத்துக் காலிலிட்டு அமர்வதை யும் நன்கு கவனித்துப் பார்த்துக் கொண்டான்.
அவனிடம் ஒரு கலை குடியிருந்தது. மண்ணால் பொம்மை செய்யும் கலை. அச்சு அசல் சுவாமிகளைப்போலவே ஒரு பொம்மையை உருவாக்கினான். நெற்றியில் குங்குமம். முகத்தில் தாடி. கழுத்தில் ருத்திராட்ச மாலை.
அவன் கலைத்திறனோடு உருவாக்கிய சிலை மட்டுமல்ல அது; பக்திப் பெருக்கோடு உரு வாக்கியதும்கூட. அவனது பக்தியை மெச்சி சுவாமிகளே அந்த மண்பொம்மையில் ஊடுருவி அமர்ந்துகொண்டார் என்றுதான் பார்த்தவர் களுக்குத் தோன்றியது. சுவாமிகளைச் சிறிய வடிவில் நேரில் பார்ப்பதைப்போல் பார்த்தவர் கள் மயங்கினார்கள். அந்தச் சிலையைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.
சுவாமிகளிடம் ஒருநாள் தன் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று விண்ணப் பித்தான். அவர் அவன் முதுகில் தட்டிக் கொடுத் தார். ஜாதி மத வேறுபாடுகளை ஒருபோதும் அவர் பாராட்டியதில்லை. நாளையே வருகி றேன் என்றார்.
அந்தக் குயவன் அளவற்ற ஆனந்தம் அடைந்தான். மறுநாள் விருந்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யலானான்.
அந்த வீடே விழாக்கோலம் பூண்டது.
மறுநாள் காலை சுவாமிகள் வருகை தந்த போது, வாயிலிலில் முழங்காலிலிட்டு அமர்ந்து சுவாமிகளைப் பார்த்தவாறே கண்ணீர் பெருக்கினான் அவன். அந்த எளிய குயவனின் உள்ளார்ந்த பக்தியைக் கண்டு சுற்று வட்டாரமே வியந்தது. குயவன் வீட்டில் ஊர் முழுவதும் குழுமி விட்டது. சுவாமிகள் ஆஞ்சனேயரை ராமபிரான் தழுவிக் கொண்ட மாதிரி அவனை அள்ளித் தழுவிக் கொண்டார்.
""அன்பனே, உள்ளே வா'' என அவனோடு வீட்டுக்குள் நடந்தார்.
அன்றுதான் சுவாமிகள் அத்தனை சாப்பாடு சாப்பிட்டதை எல்லாரும் பார்த்தார்கள். சுவாமிகள் அவன் தந்த உணவையா உண்டு கொண்டிருந்தார்? அவனது தூய பக்தியை அல்லவா மனமாரப் பருகிக் கொண்டிருந்தார்!
விருந்து முடிந்ததும் சுவாமிகளை விழுந்து வணங்கி அவன் தான் உருவாக்கிய சிலையை அவர் கைகளில் கொடுத்தான். அச்சு அசலாக சுவாமிகளைப்போலவே அமைந்திருந்த அந்தச் சிலையைப் பார்த்து கூட்டம் கைதட்டி ஆர்ப் பரித்தது.
சிலையை மறுபடி மறுபடி பார்த்த சுவாமி கள் அருட்புன்னகை புரிந்தார். ""தோலால் மூடப்பட்ட கூடு, மண்ணால் செய்யப்பட்ட கூடு!'' எனத் தம்மையும் அந்தச் சிலையை யும் காட்டிக் காட்டி குறிப்பிட்டார். ""சிலையை நானாக எண்ணிக் கொள்ளுங்கள்!'' என்றார். விரைவில் தான் உலகை விட்டு மறையப் போகிறோம் என்பதை அவர் சூசகமாக உணர்த்தினார். அப்படியும் அவரது குறிப்பை யாரும் புரிந்துகொள்ளவில்லை.
ஒருநாள் முத்துக்குமாரசாமிப் பிள்ளையை அழைத்தார் சுவாமிகள். ""வரும் வெள்ளிக் கிழமை எனக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது. நம் அன்பர்கள் எல்லாரையும் முத்தியால்பேட்டையில் உள்ள சிங்காரத் தோட்டத்திற்கு வரச் சொல்லி விடுங்கள்!'' என்று உத்தரவிட்டார்.
பிள்ளைக்கு ஏதோ புரிந்தது; புரியாதது போலவும் இருந்தது. புரிந்துகொண்ட உண்மை யைப் புரிந்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தார் அவர். விழிநீரைத் துடைத்துக் கொண்டு அன்பர்கள் அனைவருக்கும் செய்தி சொல்லி அனுப்பினார்.
அந்த நாளும் வந்தது. எல்லாருமே நடக்கப் போவதை உணர்ந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தனர். ஆராதனைக்குரிய மங்கலப் பொருட்கள் வந்து குவிந்திருந்தன. கூட்டம் வெள்ளம்போல் கூடியிருந்தது. விறுவிறு வென்று நடந்து தோட்டத்திற்குள் வந்த சுவாமிகள், தம் அன்பரான சொக்கலிலிங்கம் பிள்ளை என்பவரை அழைத்தார். தாம் பயன் படுத்திய கைக்கடிகாரத்தையும் தம்முடைய பாதுகைகளையும் அவரிடம் கொடுத் தார்.
""நீ வைத்துக்கொள். எனக்கு கைக் கடிகாரம் தேவைப்படாது. நான் காலத் தைக் கடக்கப் போகிறேன். பாதுகை களும் தேவைப்படாது. மண்ணில் நடக்கத்தான் பாதுகை தேவை. ஆகாயத்தில் நடக்கப் பாதுகைகள் எதற்கு?''
அவர் சொன்னதைக் கேட்டு கூட்டம் விம்மியது. மங்கல காலங்களில் அழுவது சரியல்ல என்று கூட்டத்தினருக்கு உணர்த்திய அவர், தாம் உடலை உகுத்தாலும் சூட்சும ரூபமாக அவர்களுக்கு என்றும் வழிகாட்டுவோம் என்று உறுதியளித்தார்.
கூட்டம் ஒருவாறு தன் துயரத்தைக் குறைத் துக்கொண்டது. அபிஷேக ஆராதனைகளை எந்தெந்த வகையில் செய்யவேண்டும் என்று விரிவாக உணர்த்திய அவர், பத்மாசனத்தில்
அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.
ஆராதனைகள் தொடங்கின. கற்பூர ஆரத்தி காட்டும்போது சுவாமிகளின் ஆன்மா அவரது உடல் கூட்டிலிலிருந்து விடுதலை பெற்றிருந்தது. செய்தி கேட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் குழுமத் தொடங்கினார்கள்.
 சுவாமிகளின் திருமேனியைச் சமாதிக்கு எடுத்துச் செல்ல யத்தனிக்கையில் ஓர் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது. சுவாமிகள் மறுபடி உயிர்த் தெழுந்தார்! அவரைச் சுற்றி ஒரு புனித ஒளி கண்ணைக் கூசவைக்கும் வகையில் படர்ந்திருந்தது. ""ஆராதனைகளைச் செய்யும்போது இன்னின்ன செயல்களை
அவசரத்தில் செய்யாமல் விட்டுவிட்டீர்கள்.
அவற்றையும் பொறுமையாகச் செய்து உடலைச் சமாதி செய்வியுங்கள்!'' என்று அறிவுறுத்திய சுவாமிகள், மீண்டும் தன் உயிரை உகுத்தார்!
திகைப்படைந்த மக்கள் மறுபடி ஆராதனைகளை முறைப்படி செய்து, அவரது திரு மேனியை அவர் சொன்னவாறே முத்துக் குமாரசாமிப் பிள்ளை தோட்டத்திற்கு ஊர்வல மாக எடுத்துச் சென்றார்கள். அங்கே அவரது உடலை மண்ணில் வைத்து மூடி சமாதி எழுப்பினார்கள்.
அந்தச் சமாதியில் இருந்தும், தன்னை பக்தியுடன் எண்ணுபவர்கள் நெஞ்சங்களில் இருந்தும் வேண்டியவர்க்கு வேண்டி யதை வழங்கியவாறு தொடர்ந்து அருளாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் சுவாமிகள்!

நன்றி:நக்கீரன்

Friday, July 29

சாத்தப்ப ஞானி



சிவகங்கை மாவட்டம் கோவனூரை சேர்ந்த வீரப்பன் சேர்வை அவர்களின் புதல்வரே சாத்தப்பன் சேர்வை.பின்னாளில் சிவகங்கை உருவாக காரணமானவரும் சிவகங்கை அரசர்களின்  ராஜகுருவாகவும்  விளங்கியவர்.சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம் உள்ளவராய் இருந்தார்.காட்டில்திரிந்து கொண்டிருந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினார். அவரது இறையுணர்வை கண்ட முனிவர்கள் அதனை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றனர்.பின்னர் மௌனகுருவிடம் உபதேசம் பெற்றார் தாயுமானவர் திருச்சபையில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார் தாயுமானவரின் சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.கோவனூர் முருகன் கோயிலே கதியென கிடந்தவர் பின் பல தலங்களுக்கு சென்று சாத்தப்பன் ஞானி என அனைவராலும் போற்றப்பட்டார்.


முருகனின் மீது அளவில்லா பக்தி உடையவராக திகழ்ந்தார் நாட்டில் உள்ள முருகன் கோயிலில் எல்லாம் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.ஒரு முறை சசிவர்ண பெரிய உடையாத் தேவர் வேட்டைக்கு சென்ற போது நாவலடி ஊற்றில் தவம் செய்து கொண்டிருந்த சாத்தப்ப ஞானியரை கண்டு வணங்கினார்.சசிவர்ணரை கண்ட ஞானியார் நல்ல யோகமும் புதிய பட்டமும் வந்து யானை கட்டி சீமையாளுவாய் என விபூதி கொடுத்து அருளி தஞ்சை செல்லுமாறு உத்தரவு கொடுத்து அனுப்பினார்.மன்னரும் தஞ்சை சென்று அரண்மனையில் புலியை கொன்று மேலும் தஞ்சை படைகளின் உதவியுடன் ராமநாதபுரத்தில் அரசனாக இருந்த பவானி சங்கர தேவரை வென்றார்.பின்னர் ஞானியாரை வந்து சந்தித்தார் முன்னர் சந்தித்த இடத்தில் இருந்த ஊற்றில் திருக்குளம் வெட்டி சிவகங்கை என பெயரிட்டு குளத்தின் மேல் மூலையில் அரண்மனை கட்டி சீமை ஆள் என அருளினார்.அரசரும் அவ்வாறே செய்து தனது குருவான ஞானியருக்கு மடம் நிறுவி நிலங்களையும் சமயப்பணி சிறப்பாக செய்வதற்கு அளித்தார்.மேலும் சாத்தப்பர் அவர்களின் புதல்வரும் புகழ்பெற்ற சேது தளவாயான வைரவன் சேர்வைக்காரர் கட்டிய ராமநாதபுரம் அருகிலிருக்கும் பெறுவயலில் ரணபலி  முருகன் கோயிலுக்கு திருவெற்றியூரில் சில இடங்களை கொடுத்துள்ளார்.இன்று வரை இவ்வூரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு சாத்தப்பையா என பெயர் வைக்கின்றனர்.
1961ஆம் ஆண்டு வரை சிவகங்கையின் மன்னர்களால் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.குருவின் நினைவாக ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று படையல் வைத்து குரு பூஜை செய்து அன்னக்கொடி நட்டு அன்னதானமும் நடைபெறுகிறது..தற்போது மடத்தின் சொத்துகள் பலவும் பலரால் அக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சசிவர்ண தேவரவர்கள் காளையார்கோயிலில் தனது சிலையை நிறுவி அதற்கு எதிரே சாத்தப்ப ஞானியாரின் சிலையை நிறுவி உள்ளார்.

Thursday, August 6

முஸ்லிம் ஜமாத்தார் பங்கேற்ற கோயில் கும்பாபிஷேகம்

JANUARY 28, 2011

கம்பத்தில் சாந்தகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. கம்பம் ராஜகுல அகமுடையார் சமுதாயத்திற்கு சொந்தமான சாந்தகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை முதல் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சிகள் துவங்கி 10.45 மணிக்கு கும்பிஷேகம் நடந்தது. கும்பத்தில் புனித நீர் ஊற்றிய போது, வானில் கருடன் பறந்து வட்டமிட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. கும்பாபிஷேகத்தில் கம்பம் முஸ்லிம் ஜமாத் தலைவர் கே.எம். அப்பாஸ் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜமாத் நிர்வாகிகளை, விழாக்குழுவினர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். கோயில் வளாகத்தில் அமர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஜமாத் நிர்வாகிகள் பார்த்தனர். ஜமாத் நிர்வாகிகள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியது. ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மாணிக்கம் செய்திருந்தார்.

THANKS TO DINAMALAR


Sunday, August 2

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்து வடமொழி,தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார்.திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும்,சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின்
வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார்.அவரது சமாதி கோவில் சென்னை ,திருவான்மியூரில் உள்ளது.



வாழ்க்கைக் குறிப்பு:

பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850 ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார்.இவரது இயற்பெயர்
அப்பாவு என்பதாகும். 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார்.சிறுவயதில் இவருக்கு கந்தர் சஸ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும்.இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது.சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர்என்ற பெயரும் பெற்றார்.இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக்கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு முருகையபிள்ளைசிவஞானாம்பாள், குமரகுருதாசபிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப் பயணங்கள் மேற்கொண்டார்.அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுகிறார் "குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர்.அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்"
திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127. 1923ஆம் ஆண்டு திசம்பர் 27அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச்சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73.ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார்.அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப்படம் மாட்டப்பட்டு    நோயாளிகளால் வழிபடப்படுகிறார். 1926 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார். மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

சுவாமிகள் இயற்றிய பாடல்கள்:

*
சண்முக கவசம்
*
பஞ்சாமிருத வண்ணம்
*
குமரகுருதாச சுவாமிகள் பாடல் -1266
*
ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
*
திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
*
திருப்பா (திட்ப உரை) -1101
*
காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
*
சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
*
சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம்- புலால் மறுப்பு) - 235
*
பரிபூரணானந்த போதம்
(
சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
*
செக்கர் வேள் செம்மாப்பு - 198
*
செக்கர் வேள் இறுமாப்பு - 64
*
தகராலய ரகசியம் (சதானந்த சாகர
உரை)- 117
*
குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி -100
*
சேந்தன் செந்தமிழ்
(
வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
*
குமாரஸ்தவம் 44
*
தென்னாட்டுத் திருத்தலதரிசனம்
(
கட்டளைக் கலித்துறை) 35
*
பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
*
ஆனந்தக்களிப்பு 30
*
சமாதான சங்கீதம் 1
*
சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2
ஆகப் பாடல்கள் 6666.

சுந்தரானந்தர்


சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் . போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர்.கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும்,அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.


வரலாறு:

இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார்.இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும்,சட்டை முனியால் ஆட்கொள்ளப்பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப்படுகிறது.இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. சுந்தரானந்தர் மதுரை நகரின் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும்,பெண்ணை ஆணாக்கியும்,ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும்,திடிரென மறைந்தும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் மன்னனிடம் தெரிவிக்க சித்தரை அரண்மனைக்கு அழைத்துவர ஆள் அனுப்ப, சுந்தரானந்தர் அரசன் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பினார் சித்தரைப் பார்க்க அரசர் வந்தார்.அப்போது ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன்,சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உண்ணும்படியாகச் செய்யுங்கள் என்றார். சித்தர்
கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார்.யானை கரும்பை பெற்று உண்டது.மீண்டும் கல் யானையாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டனர். அன்பும் பக்தியும் பெருக்கெடுத்தோட சித்தரின் காலில் விழுந்து மன்னர் வணங்கினார் என்று செவிவழிச் செய்திகள் சித்தரை பற்றி உள்ளது.

சமாதி:

இவர் மதுரையிலே
சமாதியடைந்ததாக சொல்லப்
படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.

நூல்கள்:

இவர் இயற்றிய நூல்கள்
*சோதிட காவியம்
*வைத்தியத் திரட்டு
*தண்டகம்
*முப்பு
*சிவயோக ஞானம்
*அதிசய காராணம்
*பூசா விதி
*தீட்சா விதி
*சுத்த ஞானம்
*கேசரி
*வாக்கிய சூத்திரம்
*காவியம்
*விச நிவாரணி

இவர் பதினென் சித்தர்களில் ஒருவர்


Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...