Showing posts with label இலங்கையும் அகமுடையாரும். Show all posts
Showing posts with label இலங்கையும் அகமுடையாரும். Show all posts

Wednesday, December 9

இலங்கையும் அகமுடையாரும் :


குடியேற்றவாதக் காலத்திலும் அதற்கு முன்னரும் மடப்பளி,
அகம்படியர் ஆகிய சாதிகளும் உயர் சாதிகளாகக் கருதப்பட்டன.
தற்காலத்தில் இவ்விரு சாதிகளும் இல்லாமல் போய்விட்
டாலும் அகம்படியர்கள்  சில இடங்களில் வாழ்கின்றனர் பெரும்பாலும் கனடா,லண்டன் மற்றும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து விட்டனர்.விடுதலை புலிகளின் உளவு படையின் தலைவர் பொட்டு  அம்மான் அகமுடையார் இனத்தை சேர்ந்தவரே.வன்னியர் என்ற சாதிப் பட்டம் நெருப்பு என்று பொருள்படும் வஹ்னி என்ற வடமொழிச் சொல்லிருந்து தோன்றியிருக்கலாம். இச்சாதிப்பட்டம் இலங்கையில் முக்குவர்களுக்கும்,அகம்படிய மறவர்களுக்கும் வழங்கப்பட்டது உண்டு.

இலங்கைத் தமிழ் கல்வெட்டுக்களில் அகமுடையார்:

வரலாற்று மூலததாரங்களில் முதன்மையானதாகக் காணப்படுகின்ற
கல்வெட்டுக்களின் அமைப்புமுறை பொதுவாக மேல்வரும் பகுதிகளைக்
கொண்டதாக அமைந்திருக்கும்.
 

1) தொடக்கச் சொல் அல்லது மங்களச் சொல்
2) கல்வெட்டின் காலக்குறிப்பு
3) நோக்கம்
4) முடிவுச் சொல் அல்லது ஓம்படைக்கிளவி


இவ்வாறான நான்கு அம்சங்களைத் தாங்கியதாக கல்வெட்டுக்கள்
காணப்பட்டாலும் ஆரம்ப காலக் கல்வெட்டுக்களில் இந்த நான்கு
அம்சங்களையும் காணமுடியாது.ஆதியான பிராமிச் சானங்களில்
பெரும்பாலானவற்றில் செய்தி மாத்திரமே காணப்படுகிறது.
எனினும் ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு பெரும்பாலான சாசனங்களில்
இந்த அம்சங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்களச்
சொல்லை சோழர்களுடைய சாசனங்களிலே காணலாம். அதற்கு முந்தைய கால சாசனங்கள் பெரும்பாலானவற்றில் ஸ்ரீ என்ற சொல் மங்களச் சொல்லாக எழுதப்பட்டிருந்தது.விஜயநகர பேரரசுக் காலத்திலே சிவமஸ்து சுபமஸ்து முதலான சொற்கள் தொடக்கச் சொல்லாக வருகின்றது. இலங்கையிலே 12 ஆம் நூற்றாண்டு விஜயபாகு மன்னன் காலத்து பொலன்நறுவைக்
கல்வெட்டொன்றிலே நமே புத்தாய நம என்ற மங்களச் சொல் பௌத்த சமயத்தோடு தொடர்பு பட்டதாக வருகிறது. இவ்வாறு இலங்கையிலே
மங்களச்சொற்களை அமைக்கும் முறை சோழர்களுடைய செல்வாக்கினாலே
ஏற்பட்டுக் கொண்டது.

ஹிங்குறாங்கொடையில் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குறிய வரிவடிவிலமைந்த தமிழ்ச் சாசனமென்று கிடைத்துள்ளது.இச்சாசனம் 


கஜபாகு தேவரோடு தொடர்புடைய அகம்படி என்கின்ற பிரிவினரில் ஒருவனாகிய உம்பிழ அயித்தன் என்பவன் ஜீவிதமாகிய தன் நிலத்தை விற்று புத்தஸ்தானம் ஒன்றுக்கு தானமாக வழங்கிய செய்திகளை பதிவு செய்கிறது.

 
சாசனத்தின் முடிவில் 'இதற்கு விக்நம் செய்வாருண்டாகில் புத்த ஸ்தானத்திற்கு பிளைச்சாராவார் நரகம் புகுவார்' என்று வசனம்
எழுதப்பட்டுள்ளது. இந்த தர்மத்திற்கு விரோதமிழைப்பவர்கள் பௌத்த
நிலையத்திற்கும் நெறிகளுக்கும் பிழை செய்த பாவத்தைப் பெறுவார்கள், நரகத்தையும் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.சாசனத்தில் நகர, னகர மற்றும் ளகர, ழகர வழுக்கள் இடம்பெற்றுள்ளது.சாசனங்களில் இவ்வாறான இலக்கண வழுக்கள் இடம்பெறுவது இயல்பான ஒன்றாகும்.

நன்றி


ஜெ கோபிநாத் ~ வரலாற்றுத் துறை

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...