Showing posts with label பச்சையப்ப முதலியார். Show all posts
Showing posts with label பச்சையப்ப முதலியார். Show all posts

Sunday, August 9

அகமுடைய வள்ளல்




பச்சையப்ப முதலியார் 1754 ஆம் ஆண்டு பெரியபாளையத்தில் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை விஸ்வநாத முதலியார் காலமாகிவிட்டிருந்தார்.வறுமையில் வாடும் குடும்பம் சென்னையைத் தஞ்சமடைந்தது.அப்போதைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வெள்ளைக்கார துரைகளுக்கு துபாஷியாக(கணக்குப் பிள்ளை / மொழி பெயர்ப்பாளர் / செயலாளர்)இருந்த நாராயண பிள்ளையிடம் உதவியாளராகச் சேர்ந்தார் பச்சையப்ப முதலியார்.சிறுவனாக நாராயண பிள்ளையின் உதவியாளராக சேர்ந்த பச்சையப்ப
முதலியார், நாராயண பிள்ளை திடீரென்று மரணமடைந்ததும்,தனது 16ஆவது வயதில் பெüனி துரையின் துபாஷியாக உயர்ந்தார்.பெüனி துரை சென்னையின் மேயராக நியமிக்கப்பட்டபோது,பச்சையப்ப முதலியாரின் செல்வாக்கும் இமயமாக உயர்ந்தது.சென்னையின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும்,அதிகார பலம் மிக்கவராகவும் பச்சையப்ப முதலியார் திகழ்ந்தார்.பெரும் தனவந்தராக இருந்தாலும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் பச்சையப்ப முதலியார்.அதிகாலையில் எழுந்து கூவம் ஆற்றில் நீராடி (அப்போதெல்லாம் கூவம் சாக்கடையாக இருக்கவில்லை) கோமளீஸ்வரன்பேட்டை ஆலயத்திலும்,கந்தகோட்டத்திலும் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் தனது அன்றாட அலுவல்களைத்தொடங்குவார்.அடிக்கடி காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் சென்று வருவார். அதேபோல,சாமி தரிசனம் செய்ய தஞ்சாவூருக்கும் அவ்வப்போது சென்று வருவதும் வழக்கம்.1794 மார்ச் 21 ஆம் நாள்,திருவையாற்றில் தனது 40வது வயதில் அவர் காலமானார். உயில் எழுதி வைத்து இறந்த வெகு சில இந்தியர்களில் பச்சையப்ப முதலியாரும் ஒருவர்.இந்து மதத்தைப் பரப்பவும்,பாதுகாக்கவும் நடத்தப்படும் செயல்பாடுகளுக்கு நாலரை லட்சம் ரூபாயும், இந்து இளைஞர்களின் ஆங்கில படிப்புக்கு உதவ ஏழு லட்சம் ரூபாயும்,தனது உயிலில் ஒதுக்கி இருந்தார்.அவர் 1794இல் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு ஏறத்தாழ 17லட்சம் ரூபாய். 1990இல் அதன் மதிப்பு 4,500 கோடி ரூபாயாகக்கணக்கிடப்பட்டுள்ளது. பச்சையப்ப முதலியாரின் சொத்துகளை நிர்வகித்து வரும் பச்சையப்பன் அறக்கட்டளை,ஆறு கல்லூரிகளையும்,ஒரு தொழிற்கல்வி நிலையத்தையும்,
16 பள்ளிகளையும் நடத்தி வருகிறது.



Sunday, August 2

பச்சையப்ப முதலியார்



பச்சையப்பா முதலியார்(1754-1794) தென்னிந்தியாவில்குறிப்பாகதமிழகத்தின் கல்வி
வளர்ச்சிக்கு வழிகோலிய கொடை வள்ளல் . சென்னைக்கு வடமேற்கில்
சுமார்23 கி.மீ. தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் தந்தையார் அகம்படியார் வகுப்பினராகிய காஞ்சி விசுவநாத முதலியார்தாயார்
பூச்சியம்மாள் ஆவர்.

இளமைக்காலம்;


இவர்தாய் வயிற்றில் இருக்கும்போதே இவர் தந்தையார் இறந்துவிட்டார். கணவரையிழந்த பூச்சியம்மாள் தம் பெண்மக்கள் இருவருடன் பெரியபாளையத்திற்குச்
சென்றுகுடியேறிக் குடும்ப நண்பரான ரெட்டி இராயர் என்பாரின் ஆதரவிலிருந்து வருகையில் பச்சையப்பர் பிறந்தார். தம் ஐந்தாம் வயதில் ரெட்டி இராயரையும்
இழந்தார். வறுமையில் வாடிய குடும்பம் சென்னைக்கு வந்து குடியேறினர். செல்வரும்
வணிகருமான நாராயணப்பிள்ளை என்பவர் இக்குடும்பத்திற்கு ஆதரவு அளித்தார். பச்சையப்பர் ஆங்கிலம் எழுதப்படிக்கவும்கணக்கும்வணிக முறையும் கற்றார்.

கொடை;


பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டிய பருவத்திலேயே பச்சையப்பர் வாழ்க்கைக்கு வழிதேடும் முயற்சியில் ஈடுபட்டார். மொத்த வணிகர்களுக்குச் சரக்கு வாங்கியும்விற்றுக் கொடுக்கும் முகவராக பணியாற்றினர். இத்தொழில் இவர் மொழிபெயர்ப்பாளர் ஆவதற்கு வாய்ப்பளித்தது. தம் பதினாறாம் வயதிலேயே கொடை வள்ளலானார் . அறப்பணிகளுக்குக் கொடை வழங்கலாயினர்.குடும்பப்புரவலர் நாராயணப் பிள்ளையின் செல்வாக்கால் நிக்கலசு என்ற ஏற்றுமதி வணிகருக்கு மொழிபெயர்ப்பாளராக பணிப்பொறுப்பினைப் பெற்றார். சில ஆண்டுகளில் சிறிது செல்வம் திரண்டது. தம் தமக்கையின் மகளான அய்யம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.

வணிகம்;


1776 இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரிவசூல் செய்தல்நவாப்பின் (Nawab)
அலுவலாளர்களுக்குச் சம்பளத்தை ஒப்படைப்பு செய்தல் முதலிய
ஒப்பந்தத்தொழில் ஆங்கிலநிறுவனத்தாருக்கு வரவேண்டிய தானிய
வரியை (மேல்வாரங்கள்) எனும் தானிய வரியை பணமாக்கித் தரும் குத்தகைத்தொழில்ஆங்கில வணிகர்கட்கும்கருநாடக நவாப்பு அதிகாரிகளுக்கும் இடையேயும் முகவராக
இருந்து கொடுக்கல் வாங்கல் செய்தல் முதலிய தொழில்களை மேற்கொண்டார் .வரிவசூல் செயலில் இவர்ஆங்கிலேயர்களின் நன்மதிப்பைப் பெற்றார். குறுகிய காலத்திலேயே,சென்னை மாகாணத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளராக திகழ்ந்தார்.

அரசுப்பணி;


தனது 28வது வயதில்ஆங்கிலேய நிறுவனத்தில் முக்கியபதவி வகித்த
இராபர்ட் யோசப்பு சலிவன் (sulivan) என்பவரின் முதன்மை மொழிபெயர்ப்பாளராக
ஆங்கில அரசுப்பணி ஏற்றார்.அதனாலும் பேரும்,பெருஞ்செல்வமும் பெற்றார்.சலிவனின் அரசியல் அலுவல்களில் பேருதவிப் புரிந்தார். தஞ்சாவூர் அரசருக்கு மொழிபெயர்ப்பாளராகவும்,வங்கியராகவும் இருந்து,
சென்னைமாகாணத்திற்கு சரியான முறையில்கப்பம் கட்ட துணைப்புரிந்தார். 1784 இல்
தஞ்சாவூரில் குடியேறினார். தஞ்சை அரசருக்குச் சென்னை அரசாங்கத்தாரால் தொல்லை நேராமல் காத்தார். அதனால் அரசர் இவரை திவான் போன்று போற்றி,பச்சைப்பருக்கு உரிமைகளையும்,சிறப்புகளையும் செய்தார்.

மறுமணம்;


பச்சையப்பரின் முதல் மனைவிக்கு மகப்பேறின்மையால்,வேதாரணியத்தைச் சேர்ந்த
பழனியாயி என்ற நங்கையை,இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்.
பழனியாயிக்கு ஒரு பெண் மகவுப்பிறந்தது. பச்சையப்பருக்கு 1791 இல் பக்கவாத நோயிற்கு உள்ளானார்.எனினும்தன் வங்கிமுகமைத் தொழில்களைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.


இறுதிக்காலம்;


1794 பிப்ரவரியில்இவரின் உடல்நிலை மிகவும் சீரற்றது. எனவேகும்பகோணத்தில் கட்டத்தொடங்கிய,சத்திர வேலையை விரைந்து முடிக்க அங்கு சென்றார். கும்பகோணத்தில்,மார்ச்சு மாதம் 22 நாளில்தம் உயிலை எழுதி முடித்தார் .திருவையாற்றில் இறக்க விரும்பி அங்கு விரைந்தார்.அதன்படிமார்ச்சு மாதம் 31ஆம்
நாளில் மரணமடைந்தார். இவர் இறப்பிற்கு அடுத்து,பழனியாயியும் அடுத்தாற்போல்
இவர்களுடைய மகளும் இறந்தனர்.

சொத்து;


பச்சையப்பர் ஈட்டிய பொருள் எத்தனை இலகரங்கள் என வரையறத்து அறியப்படவில்லை.இவரே தம் காலத்தில் அறப்பணிகளுக்கு ஆயிரக்கணக்கில்
செலவிட்டார். இவர் இறந்தபின்இவர் சுற்றத்தாரும்பேராசைச்காரர் சிலரும் செய்த மோசடிகள்வழக்குகள் முதலியவற்றால் அளவற்ற சொத்துக்கள் மறைந்தன. இவர் காலத்தின் பின்இவர் பொருளெனக் கண்டறியப்பட்ட தொகை வட்டி முதலுடன் கூடிய
தொகை சுமார் எட்டு இலட்சங்கள் ஆகும்.இத்தொகையை மூலப்பொருளாகக்
கொண்டு பச்சையப்பன் அறநிலைக்காப்பாளர்கள்அறப்பணிகளையும்,கல்விப் பணிகளையும்நடத்தி வருகின்றனர்.

கல்விப்பணிகள்;


கல்வி நிதிக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்துகிடைக்கும் வருமானத்தைக் கொண்டு
காஞ்சீபுரம் சிதம்பரம்சென்னை இம்மூன்று இடங்களில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும்,சென்னையில் கல்லூரி ஒன்றும்,காஞ்சியில் ஒரு கல்லூரியும்
தொடங்கப்பட்டுஅவைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

இறைப்பணிகள்;


பச்சையப்ப முதலியார் மிகுந்த கடவுட் பற்றுடையவர். இவர் செய்த அறப்பணிகள் பல. காஞ்சீபுரத்து ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ள திருமண மண்டபம் கட்டினார்.
சிதம்பரத்தில் தேர் செய்துஆனித் திருமஞ்சனம் என்ற புதிய விழாவைத்
தோற்றுவித்தார். காசியிலும் ,தென்னாட்டில் சென்னை,கும்பகோணம்திருவையாறு,
தஞ்சாவூர்மதுரை முதலிய இடங்களிலுள்ள திருக்கோயில்களுக்கும்,பலவகையான கட்டளைகளைத் திட்டஞ்செய்து வைத்தார். பல இடங்களில் அன்னசத்திரங்கள் கட்டினார்.
சில இடங்களில் அக்கிரகாரம் கட்டினார். இவ்வாறாக இவர் பலப்பல அறப்பணிகளையும்கணக்கில் அடங்கா கொடைகளையும் தன் வாழ்நாளில் செய்தார்.


Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...