Saturday, December 23

ராமசாமி சேர்வை


தென்னாட்டு வீர மருது பாண்டிய மன்னன் வரலாற்று கும்மியின் ஆசிரியர் ராமசாமி சேர்வை அகமுடையார் இனத்தவர்கள் பற்றிய சிறு குறிப்பை கூறுகிறார் (பெரும்பாலும் அகம்படியர்கள் தங்கள் வரலாற்றை எழுதவில்லை மிகச்சிலரே எழுதியுள்ளனர்) அதில் சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒரே ஷத்திரிய குலத்தில் உதித்தவர்கள் இவர்களின் வழித்தோன்றல்களான பல்லவர்களும் சித்தர்பிரான் சுந்தரானந்தர்,வங்கி மன்னன் கந்தவர்மன்,கலிங்கத்து கொற்றவன் கருணாகரன்,திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்,தொண்டைமண்டலச் சீமான் பச்சையப்ப முதலியார்,திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமிகளும்,சிவகங்கை மருது சகோதரர்களும் இந்த வழித்தோன்றல் என்பது சரித்திரம் கண்ட உண்மையாகும்.சிதம்பரம் நடராஜ கோயிலில் சிவபக்தியில் சிறந்த ஏழாயிரம் அகம்படியார் அணுக்கத் தொண்டர்கள் சேவை செய்தனர்.

Saturday, December 2

சேர்வைகாரன்

1844ல் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட தமிழ் ஆங்கில அகராதியில் சேர்வைகாரன் என்றால் சேனாதிபதி படைதலைவன் என்றே பொருள் குறித்துள்ளனர்.முதன்மை அதிகாரம் பெற்றவர்களாகவே அகமுடையார்கள் காலம் காலமாக வாழ்ந்துள்ளனர்.சோழர் பாண்டியர் கால கல்வெட்டுகளில் ஆரம்பித்து சேதுபதிகள் காலம் வரை அகமுடையார்கள் முதன்மையானவர்களாகவே திகழ்ந்துள்ளனர். அகமுடையாரின் ஒரு பிரிவாக சேர்வைகாரன் என்பதை குறித்து வைத்துள்ளனர் ஆனால் இப்போது அவ்வாறு எந்த பிரிவும் இருப்பதாக தெரியவில்லை.தென் தமிழகத்தை பொறுத்த வரை அகமுடையார்கள் சேர்வை பட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.வயிரவன் சேர்வைகாரர்,வெள்ளையன் சேர்வைகாரர், மருது சேர்வைகாரர் போன்ற பெரும் புகழ்பெற்ற அகமுடையார்கள் சேர்வைகாரர் பட்டம் சூடியவர்களே.



இராஜ குல அகமுடையார்கள் சேர்வை, சேர்வார் மற்றும் சேர்வாரன் என்று அழைக்கபடுகின்றனர்.

Friday, December 1

முதல் சமபந்தி விருந்து

அகமுடையார்கள் ஹிந்து சமயத்தவர்களாக பெரும்பாண்மையாக இருந்தாலும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை தழுவிய அகமுடையார்கள் உண்டு. 



கணகராய முதலியார் என்னும் அகமுடையார் புதுச்சேரி பகுதியில் பிரஞ்சுகாரர்களுடன் வணிகம் செய்தார் அவருக்கு உதவியாக அவர் மகன் வேலவேந்திர முதலியும் ஈடுபட்டுவந்தார் திடிரென்று அவர் இறந்துவிட்டார் இதனால் பெரிதும் துயருற்ற கணகராயர் தன் மகன் நினைவாக 1745 நவம்பர் 30ல் செய்ன்ட ஆண்டருஸ் சர்ச் அமைத்தார்.இந்நாளே முதல் முறையாக சாதி மதம் கடந்து சமபந்தி விருந்து தமிழகத்தில் நடைபெற்றது கணகராயரால். ஆணந்தரங்க பிள்ளை தனது நாட்குறிப்பில் சமபந்தி விருந்து குறித்து பதிவு செய்துள்ளார்.

Thursday, November 30

டி.ராஜரத்தினம்


அகமுடையார் இனத்தில் பிறந் திமுக சார்பில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் 1967 மற்றும் 1971 பூந்தமல்லி தொகுதியில் 1977 மற்றும் 1980ல் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தவர்.

Sunday, November 19

சுபேதார் சுலைமான்

மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் தான் சுலைமான் இவன் காளையார் கோயில் மீது படையெடுக்க சரியான தருணத்தை கணக்கிடுவதற்காகவும் மருது பாண்டியர்களின் படையின் வலிமையை அறிந்து கொள்ளவும் அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்து சரியான நேரத்தில் படையெடுக்க ஆற்காடு நவாப்பால் அனுப்பப்பட்ட ஒற்றன் ஆவான் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் மருது பாண்டியரைக் கொலை செய்வதற்குக் கூட சுலைமானுக்கு யோசனை சொல்லப்பட்டதாம் அந்த சமயத்தில் அங்கு வந்த சுலைமான் மருது பாண்டியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அதிகமாக வரும் நீர் ஊற்றை தான் தடுத்துவிடுவதாகச் சொல்கிறான் அதுகேட்டு மன்னர் மருதிருவர் மன மகிழ்ச்சி அடைகிறார்கள் உடனே சுலைமானுக்கு நீர் ஊற்றை அடைக்க தேவையானவற்றை கொடுக்க வேலையாட்களிடம் பணித்தார்கள் மருது பாண்டியர்கள்...!

சுலைமான் பத்து வண்டி அளவு அயிரை மீன்கள் வேண்டும் என்றார் அடுத்த நாள் காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் செய்தி அனுப்பி அயிரை மீன்களையும் அஸ்திவாரம் தோண்டிய நீர் தேக்கிய பகுதிகளில் சுலைமான் ஆற்று மணலுடன் சேர்த்துப் போட்டதால் ஒவ்வொரு மீனும் மணலைகளைக் கவ்விக்கொண்டு நீர் ஊற்றை அடைத்தது அதன் பின்னர் நீரின் கசிவு ஏற்படாததால் கோபுரம் கட்டும் வேலை சுணக்கம் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது இதனை கண்ட மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி சுலைமானிடம் உனக்கு என்ன வேண்டும் என மருதரசன் கேட்டார் அதற்கு சுலைமான் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டார் இந்த சுலைமான் பல மொழி பேசும் திறமை பெற்றவர் அத்தோடு வானத்தில் பறக்கும் பறவையை குறிதவறாது வேட்டையாடும் கலையை நன்கறிந்தவர் அத்துடன் மல்யுத்தம், சிலம்பு ஆட்டம் கற்றறிந்தவர் மகா புத்திசாலி
அப்படிப்பட்டவரை மருது பாண்டியர்கள் அவர்கள் தனது அரண்மனையிலேயே அதன் உள்ளே உள்ள குதிரை லாயத்தின் முழுப் பொறுப்பையும் கவனிக்க முழு அதிகாரத்தை சுலைமானுக்கு கொடுத்து கௌரவித்தார்...!

காலப் போக்கில் மருது சகோதரர்களின் உண்மையான உணர்வுகளும் சிறந்த சிந்தனைகளும் அவர்களுக்கு மக்களிடத்தில் அவர்கள் காட்டும் அன்பையும் நேரில் பார்த்த பொழுது சுபேதார் சுலைமான் மனம் மாறினார் அவர் உளவாளியாக வந்த ஆற்காட்டருக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை இப்படிப் பல மாதங்கள் உருண்டோடின ஒரு நாள் பெரிய மருது பாண்டியர் சிவகங்கைக்கு அரசு வேலையாக சென்றிருந்தார் சின்ன மருது பாண்டியர் அவரின் நம்பிக்கைக்கு உரிய கரடிக் கறுத்தானைக் கூட்டிக் கொண்டு காளையார் கோயிலுக்கு சென்றார் (இந்தக் கரடி கறுத்தான் தான் பின்னாளில் வெள்ளையனின் பொருளுக்கு ஆசைப்பட்டு சின்ன மருது பாண்டியரை துப்பாக்கியால் சுட்டு காலை உடைத்து ஒரு மிருகம் போல வேட்டையாடி வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்தவன்) அங்கு ஒரு வெள்ளை புறா பறந்து சென்றது சின்ன மருது பாண்டியர் தனது வளரியை எடுத்து பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி வீசினார் குறிதவறாது புறா மீது வளரி தாக்கி புறா கீழே விழுந்து கொண்டிருந்தது அது தரையில் விழு முன் சுலைமான் புறாவை தனது கையில் பிடித்தார் அதை அருகில் இருந்து பார்த்த சின்ன மருது பாண்டியருக்கு ஒரே ஆச்சரியம் வளரியால் வீழ்த்திய புறாவை இடையிலேயே பிடிப்பவன் தனக்கு அடுத்து இந்த கரடி கறுத்தான் ஒருவனே ஆனால் இந்த வித்தை சுலைமானுக்கு எப்படித் தெரியும் என்று அப்பொழுது கறுத்தான் சுலைமானின் கையிலிருந்து புறாவைக் கவனித்தான் அதன் கால்களில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது அதை உடனே சின்ன மருதுவும் நோக்கினார் அதன் எழுத்து உருது மொழியில் இருந்தது அதில் ஆற்காட்டான் எப்பொழுது காளையார் கோயிலுக்கு படையெடுத்து வரலாம் என சுலைமானின் யோசனையைக் கேட்டு எழுதி இருந்தது...!

இந்தச் செய்தியை படித்தமட்டில் சின்ன மருதுவுக்கு கோபம் எல்லை மீறிப் போய்விட்டது அடேய் ராஜதுரோகி உன்னை எனது அண்ணன் பெரிய மருது பாண்டியர் எப்படியெல்லாம் உயர்வாக நடத்துகிறார் அதற்கு நீ காட்டும் நன்றிக் கடன் இது...? என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தார் இது கண்டு சுலைமானுக்கு மிகுந்த மனவேதனை அடைந்தார் உடனே மன்னர் அவர்களே நான் சொல்லும் விளக்கத்தினை தயவுசெய்து செவிமடுத்துக் கேட்கவும் நான் ஒற்றனாய் வந்தது உண்மை ஆனால் இங்கு உங்களையும் பெரிய மன்னரையும் கண்டவுடன் அவர் ஆட்சியையும் அவர் நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பை பார்த்த பின்பு நான் வந்த வேலையை மறந்தேன் அத்தோடு ஆற்காட்டருக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை அதனால் தான் அவர்கள் எனது நோக்கம் அறிய புறா மூலம் தூதுவிட்டுள்ளனர் என்றார் சின்ன மருது பாண்டியர் எந்த விளக்கத்தையும் கேட்பதாக இல்லை உடனே அவருக்குத் தெரிந்த கத்திச் சண்டை, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டில் எப்படியும் சுலைமானின் உயிரைப் போக்க வேண்டும் என முடிவு செய்தார் அதற்கு சுலைமானும் சளைக்காமல் சின்னமருதுவுக்கு சமமாக அவரும் ஈடு கொடுத்து சமாளித்தார் ஆனால் கடைசியில் சின்ன மருது பாண்டியர் அவர்களின் மர்ம அடி  நெற்றியில் பட்டு அக்கணமே சுலைமானின் உயிர் பிரிந்தது...!

சிவகங்கையில் உள்ள பெரிய மருது பாண்டியருக்கு இந்த துயரமான செய்தி கிடைத்தவுடன் மிகவும் மன வேதனைப்பட்டார் மனம் மாறிய சுலைமானை சின்ன மருது கொன்றுவிட்டானே என அப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அப்படி ஒரு செயலை சின்ன மருது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போலும் தனது உண்மையான ஊழியன் என எண்ணப்பட்ட கரடிக் கறுத்தான் மருது பாண்டியரைக் காட்டிக் கொடுத்தான் ஆனால் ஒற்றனாய் வந்த சுலைமான மருதுவுக்கு அதரவாக இருந்துள்ளார் இது காலத்தின் கோலம் தானே பெரிய மருதுவின் மனம் அம்மாவீரனுக்கு அவரின் ஞாபகமாக பட்டரைக் கண்மாய் என்ற ஊரில் ஒரு பெரிய சமாதி ஒன்றைக் கட்டினார் அத்தோடு அவரின் சந்ததியினருக்கு பல நிலங்களை தானமாக கொடுத்தாராம் அந்த நினைவிடத்தில் இன்றும் விவசாய காலம் ஆரம்பிக்கும் பொழுதும் பின் அறுவடை நடைபெறும் காலத்திலும் சுபேதார் சுலைமானின் சமாதியில் காணிக்கை செலுத்தி அவரின் நினைவாக எல்லா சமூகத்தினரும் வணங்கிச் செல்வது அங்கு வழக்கமாக கொண்டுள்ளனர் இச்செய்தியை மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் அவர்கள் மருதுபாண்டியர் நினைவு நாளில் சொல்லக் கேட்டது...!



சுபேதார் சுலைமானின் சமாதி


பட்டரை கண்மாய் கிராமத்தில் மாமன்னர் பெரிய மருது பாண்டியரால் கட்டப்பட்ட சுலைமான் சமாதி தற்போது அவர்களது வாரிசுதார்களின் வசம் உள்ளது அவர்கள் தான் பராமரிப்பு செய்கிறார்கள்...!!!


தகவல் மற்றும் புகைப்பட உதவி: மருது பிரசன்னா அகமுடையார்

Wednesday, November 8

மாமன்னர் மருதுபாண்டியர்கள்

மருதுபாண்டியர்கள்

ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்த மருதுபாண்டியர்களின் இறுதி நொடி பொழுதினை மருதுபாண்டியர்கள் அரசு விழாவன்று ஓவியமாக வெளியிட்டு மாமன்னர் மருதரசர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர் மருது வரலாறு மீட்புகுழுவினர்.



புகைப்பட உதவி:மருது பிரசன்னா

Thursday, July 13

MJF.லியோமுத்து



சுந்தரராஜன் சேர்வை

அகமுடையாரான தியாகி சுந்தரராஜன் சேர்வை அவர்களால் திறக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முதல் சிலை.இச்சிலை ஆங்கிலேயர் காலத்திலயே திறக்கப்பட்டது.



நேதாஜி அவர்களின் படையில் அகமுடையார்கள் பெருமளவில் இருந்தனர் .

எஸ்.ஆர்.நாதன்

சிங்கப்பூரின் முன்னாள் குடியரசு தலைவர் எஸ்.ஆர்.நாதன் அகமுடையார் இனத்தவர்.வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் துாதர் என பல உயரிய பதவிகளை சிங்கையில் வகித்தவர் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.சிங்கை மற்றும் மலேசிய பகுதிகளில் கோலோச்சிய தமிழர்கள் பெரும்பாலும் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர்கள்.

Sunday, July 2

மணலி கந்தசாமி

தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் கட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பனி ஆற்றியவர் மணலி சி.கந்தசாமி இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறிப்பினராகவும் தேர்ந்துதெடுக்க்ப்பட்டவர்.

Saturday, May 27

மதுரை மாவட்ட அகமுடையார் தொகுதிகள்

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை அகமுடையார் அனைத்து பகுதிகளிலும் பரவலாக வசித்து வருகின்றனர்.மதுரை மாநகராட்சியில் அகமுடையார்கள் மிக அதிகமாக உள்ளனர்.



மதுரை பத்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டது ஐந்து தொகுதிகளில் முதல் பெரும்பாண்மையாக அகமுடையார்கள் உள்ளனர்.

சோழவந்தான்(தனி)

சோழவந்தான் தனி தொகுதியாக உள்ளது.

1 வாடிப்பட்டி ஒன்றியம்
2 அலங்காநல்லூர் ஒன்றியம்
3 வடக்கு தாலுகா (சில பகுதிகள்) உள்ளடக்கியது பேரூராட்சிகள்:
1 சோழவந்தான்
2 வாடிப்பட்டி
3 அலங்காநல்லூர்
4 பாலமேடு
அகமுடையார் அதிகமுள்ள பேரூராட்சிகள்
1சோழவந்தான்
2 வாடிப்பட்டி
கணிசமாக உள்ள பேரூராட்சி
1பாலமேடு
அகமுடையார் அதிகமுள்ள கிராமங்கள்:
1முள்ளிப்பள்ளம்
2 தென்கரை
3 மன்னாடிமங்கலம்
4 இரும்பாடி
5 ரிஷபம்
6 நாச்சிகுளம்
7 மேலநாச்சிகுளம்
8 காடுபட்டி
9 கருப்பட்டி
10 கிருஷ்ணாபுரம்
11 பெருமாள்பட்டி
12 செம்மினிப்பட்டி
13 மேலக்கால்
14 தேனூர்
15 சமயநல்லூர்
16 சத்யமூர்த்தி நகர்
17 கள்ளிக்குடி
18 தோடனேரி
19 மூலக்குறிச்சி
20 தனிச்சியம்
21 வயலூர்
22 அரியூர்
23 பொதும்பு
24 அதலை
25 தண்டலை
26 புதுப்பட்டி
27 எர்ரம்பட்டி
28 வாவிடமருதூர்
29 மேட்டுப்பட்டி
30 அய்யூர்
31 நடுப்பட்டி
2 கணிசமாக உள்ள கிராமம்
1 நீரேத்தான்
2 அய்யங்கோட்டை
3 குருவித்துறை
4 மாத்தூர்
5 திருவேடகம்
6 முடுவார்பட்டி
7 தாதகவுண்டம்பட்டி
வாடிப்பட்டி வட்டாரத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளது


மதுரை வடக்கு தொகுதி:

மதுரை மாநகர பகுதி 8 முதல் 15 வார்டு பகுதிகளை கொண்டது.
இத்தொகுதியின் அனைத்து பகுதிகளிலும்
அகமுடையார்கள் மிக அடர்த்தியாக உள்ளனர்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1 நரிமேடு
2 பி.பி குளம்
3 சின்னசொக்கிகுளம்
4 மருதுபாண்டியர்நகர்
5 மீனாம்பாள்புரம்
6 செல்லூர்
7 அகிம்சாபுரம்
8 கட்டபொம்மன் நகர்
9 ஆழ்வார்புரம்
10 மதிச்சியம்
11 கே.கே நகர்
12 புதூர்
13 தல்லாகுளம்
14 லூர்துநகர்
15 கைலாசபுரம்
இப்பகுதிகள் அனைத்திலும் அகமுடையார்கள் பெரும்பாண்மை எண்ணிக்கையோடு வாழ்கின்றனர்

அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்
1 அண்ணாநகர்
2 சாத்தமங்கலம்
3 கோரிப்பாளையம்
4 செல்லூர்
5 கோமதிபுரம்
7 மேலமடை
8 ரிசர்வ்லைன்
இப்பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்
இத்தொகுதியில் 70000 வாக்காளர்களுக்கு மேல் அகமுடையார்கள் உள்ளனர்அதிகமானோர் சுயதொழில் செய்பவர்கள்.


மதுரை மேற்கு தொகுதி:

1,மதுரை மாநகர பகுதிகள்
2,தெற்கு தாலுகா(சில பகுதிகள்)
3,வடக்கு தாலுகா(சில பகுதிகள்) உள்ளடக்கியது
இத்தொகுதியின் நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்திலும் அகமுடையார்கள் பரவியுள்ளனர்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1 பழங்காநத்தம்
2 ஜெய்ஹிந்த்புரம்
3 பைக்காரா
4 சுப்ரமண்யபுரம்
5 நேரு நகர்
6 சோலையழகுபுரம்
7 வசந்தநகர்
8 ஆண்டாள்புரம்
9 முத்துப்பட்டி
10 கோச்சடை
11 துவரிமான்
12 விராட்டிப்பத்து
13 கொடிமங்கலம்
14 அச்சம்பத்து
15 ஜீவாநகர்
16 விளாங்குடி(பேரூர்)
17 பரவை (பேரூர்)
18 பெத்தானியாபுரம்
19 கோயில்பாப்பாங்குடி
20 கீழமாத்தூர்
21 எம்.கே புரம்
அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்
1 பொன்மேனி
2 காளவாசல்
3 கரிசகுளம்
4 பிபி சாவடி
5 அழகப்பன்நகர்
6 கூடல்நகர்
7 மாடக்குளம்
இத்தொகுதியில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்களுக்கு மேல் அகமுடையார்கள் உள்ளனர்.

திருமங்கலம் தொகுதி:



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
1 கள்ளிக்குடி ஒன்றியம்
2 திருமங்கலம் ஒன்றியம்
3 டி.கல்லுப்பட்டி ஒன்றியம்
4 திருமங்கலம் நகர்
5 பேரையூர் பேரூர்
திருமங்கலம் தொகுதியில் சுற்றியுள்ள அனைத்து கிராமத்திலும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 90 சதவீத கிராமங்களில் அகமுடையார் மிகப்பெரும்பான்மையான எண்ணிக்கையோடு உள்ளனர்
திருமங்கலம் நகராட்சியிலும் அகமுடையார் சமூகம் பெரும்பான்மை
இது தவிர திருமங்கலம் ஒன்றியம் கல்லுப்பட்டி ஒன்றியம் மற்றும் பேரையூர் பகுதியிலும் பரவலாக உள்ளனர்
இத்தொகுதியில் அகமுடையார்கள் 95000 வாக்காளர்களைக் கொண்டு வெற்றியை நிர்ணயிக்கும் சமூகமாக உள்ளனர்.


திருப்பரங்குன்றம் தொகுதி:



திருப்பரங்குன்றம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார்கள் அடர்த்தியாகவும் கணிசமாகவும் உள்ளனர்.
தொகுதியில் முக்கிய பகுதிகளான அவனியாபுரம் , நாகமலை , திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் அகமுடையார் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட பகுதிகளும் இவைகள் தான்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1, அவனியாபுரம்
2, நாகமலை
3, சிலைமான்
4, ஒ.ஆலங்குளம்
5, பெரிய ஆலங்குளம்
6, பனையூர்
7, அய்யனார்புரம்
8, சாமநத்தம்
9, சின்னஅனுப்பானடி
10, பெரியகூடக்கோயில்
11, நிலையூர்
12, பெருங்குடி
13, வில்லாபுரம்
14, சின்னஉடப்பு
15, நெடுங்குளம்
16, விராதனூர்
அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்..
1 திருப்பரங்குன்றம்
2 விரகனூர்
3 கீழக்குயில்குடி
4 தோப்பூர்
5 திருநகர்
6 வடிவேல்கரை
7 ஐராவதநல்லூர்
8 சிந்தாமணி
9 பசுமலை
10 புளியங்குளம்
11 ஹார்விபட்டி
12 கொம்பாடி
இத்தொகுதியில் 55000 அகமுடையார் வாக்காளர்கள் உள்ளனர்.இது தவிற மற்ற தொகுதிகளில் பரவலாக உள்ளனர்.

நன்றி: சகோதரர் ராகவன் அகமுடையார்

Saturday, April 15

திருமால் தேவர்

திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் சாப்டூர் ஜமீனில் மதயானை ஒன்று அப்பகுதியை நாசம் செய்து  கொண்டிருந்தது ஒருநாள் அரண்மனைக்கு உள் நுளைய முயன்றது உடனே திருமால் தேவர் தன் வாள் கொண்டு யானையின் துதிக்கையை வெட்டி அந்த யானையை அடக்கினார்.



இதனை கண்ட திருமலை நாயக்கர் உங்களுக்குக்கு என்ன வேண்டும் என கேட்க அதற்கு திருமால் தேவர் மேலமன்று (திருமங்கலம் மேற்கு) பகுதியின் வரிவசூல் செய்யும் உரிமை கேட்க அவர் விருப்படியே அந்த பகுதியின் தலைவராகவும் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றார் திருமால் தேவர்.
33 கிராமங்களை கொண்ட மேல மன்று இராஜ குல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர் இன்று வரை மேல மன்று தலைவர் திருமால் தேவர் வாரிசுகளே.





தகவல் உதவி:சிவா அகமுடையார்

Friday, March 17

கவிஞர் முத்துலிங்கம்

சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் சுப்பையா சேர்வை - குஞ்சரம் தம்பதிக்கு மகனாகப் மார்ச் 20, 1942-ல் பிறந்தவர் முத்துலிங்கம்.



சிவகங்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்தார்.
1966 முதல் 1972 வரை முரசொலியில் துணையாசிரியராகவும், 1972 முதல் 1975 வரை அலை ஓசை யில் துணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் அவர் எழுதிய முதல் பாடல் பொண்ணுக்குத் தங்க மனசு படத்துக்காக. படத்தின் இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷ். இதில் வெங்கடேஷுக்கு உதவியாளராக இருந்தவர்தான் இளையராஜா.இசைஞானி இளையராஜாவுக்கு முதன் முதலில் பாட்டெழுதிய கவிஞர் என்ற பெருமையும் முத்துலிங்கத்துக்கு உண்டு.
1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெரும்பாலும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
அமரர் எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்ற, நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கவிஞர் முத்துலிங்கம். எம்ஜிஆர் மீது இன்றுவரை மாறாத விசுவாசம், பாசத்துடன் இருப்பவர் முத்துலிங்கம்.
முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர், அரசவைக் கவிஞர் என கவிஞரை உயரிய இடத்தில் வைத்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர்.

விருதுகள்:

தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கானவிருது (1978-79), கலைமாமணி விருது (1981), பாவேந்தர் பாரதிதாசன் விருது (1981), கலைத்துறை வித்தகர் விருது (1991), கபிலர் விருது (2013) பெற்றுள்ளார்.
2006-ல் தினத்தந்தி ஆதித்தனார் விருது பெற்றார். 2013-ல் கண்ணதாசன் விருது, 2008-ல் வாலி விருது, சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் கவுரவ டாக்டர் படம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

எழுதிய நூல்கள்:

1. வெண்ணிலா (பாரதிதாசன் முன்னுரையுடன் வெளிவந்த முதல் கவிதைத் தொகுதி) வெளிவந்த ஆண்டு 1961.
2. எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்
3. எம்.ஜி.ஆர். உலா
4. எம்.ஜி.ஆர். அந்தாதி
5. முத்துலிங்கம் கவிதைகள்
6. என் பாடல்கள் சில பார்வைகள் (கட்டுரை)
7. காற்றில் விதைத்த கருத்து (கட்டுரை - இதற்குத்தான் தினத்தந்தி ஆதித்தனார் விருது கிடைத்தது)
8. பாடல் பிறந்த கதை (கட்டுரை)
9. உலாப் போகும் ஓடங்கள் (கவியரங்கக் கவிதைகள்)
10. திரை இசைப் பாடல்கள் (இரண்டு தொகுதி)
11. முத்துலிங்கம் திரைப்பாடல் முத்துக்கள்
12. பூகம்ப விதைகள் (கவிதைகள்)


Saturday, March 11

மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர்


ரெத்தினசாமி தேவர் அவர்கள் 1971ஆம் ஆண்டு பார்வர்டு ப்ளாக் சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏவாக  வெற்றி பெற்றார். இவருடைய மகள் இராமநாதபுரம் முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன் ஆவார்.

படங்கள்: www.agamudayarotrumai.com

S.S.சந்திரன்


S.S.சந்திரன் அவர்கள்1956ஆம் ஆண்டு பிறந்தார் 15வயதில் இருந்தே நடிக்க தொடங்கி 700க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார்.


நகைச்சுவை நடிகர்,தயாரிப்பாளர்,அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர்.அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தவர்.அக்டோபர் 9, 2010 அன்று மாரடைப்பில் காலமானார்.

Thursday, March 9

டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார்


சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியவாதியும் தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள் அன்றைய கோவை மாவட்டத்தின் திருப்பூரில் வளமான குடும்பத்தில் பிறந்தார் (1903). தந்தை பிரபல வணிகர். திருப்பூர் உயர்நிலைப் பள்ளியிலும் கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் 1925-ல் பட்டம் பெற்றார்.ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், திருமணம் செய்துகொள்ளாமல் இறுதிவரை, ஏறக்குறைய துறவி போலவே எளிமையாக வாழ்ந்து வந்தார். தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கை, குடும்பம், வெற்றிகரமான தொழில் அனைத்தையும் தியாகம் செய்தவர்.1930-ல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் தொடங்கினார். பின்னர் பெரியநாயக்கன் பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்துக்கு அந்தப் பள்ளியை மாற்றினார். கோவையில் ஒரு ஹோம் சயின்ஸ் கல்லூரியையும் தொடங்கினார்.இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்து ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்டப் போராட்டங்களில் பங்கேற்றார். 1930 முதல் 1942 வரையிலான காலகட்டங்களில் நான்கு முறை சிறை சென்றார். காங்கிரசில் இணைந்து பணியாற்றினார்.கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டத்தகாதவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்வுக்காகப் பாடுபட்டார். 1934-ம் ஆண்டு ஹரிஜன நலவாழ்வு நிதிக்காக நன்கொடை திரட்டத் தமிழகம் வந்த காந்தியடிகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். விதவைகள் மறுமணத்துக்காகவும் போராடி வந்தார்.



கல்வி நிலையங்களிலும் ஜாதிப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், தனது பள்ளியில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர் களையும் சேர்த்துக்கொண்டார். 1957-ல் பெண் கல்விக்காக கல்லூரி ஒன்றைத் தொடங்கினார். அது தற்போது அவிநாசிலிங்கம் மனை யியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது. இவர் எழுதிய திருக்கேதாரம் என்ற பயண நூல் மிகவும் பிரசித்தம். மேலும் பொருளா தாரம், காந்தியின் கல்விக் கொள்கை குறித்தும் எழுதியுள்ளார்.1946-ல் சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். டி. பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் சென்னை மாகாண அமைச்சரவையில் கல்வியமைச்சராகப் பணியாற்றினார். பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு வந்தார். 1946-ல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவினார். இந்த அமைப்பு, தமிழில் முதன் முறையாக பத்து அதிகாரங்கள் கொண்ட என்சைக்ளோபீடியாவை வெளியிட்டது.நூலகங்களை சீரமைத்தார். பாரதியார் பாடல்களை தேசிய மயமாக்கினார். ஆறாம் வகுப்பிலிருந்து திருக்குறளைப் பாடத்திட்டத் தின் ஓர் அங்கமாக அறிமுகம் செய்தார். 1952-ல் திருப்பூர் நாடாளு மன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1958 முதல் 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1975-ல் இவரது தலைமையிலான ஒரு குழு சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்டது. சிறந்த விவசாயக் கொள்கை மட்டுமே வெற்றிகரமான தொழில்மயமாக்கலுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று நம்பினார்.1970-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது, ஜி.டி. பிர்லா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த கல்வியாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், 1991-ம் ஆண்டு, நவம்பர் மாதம், 88-வது வயதில் காலமானார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

Monday, March 6

M.D.தியாகராஜ பிள்ளை


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற  தொகுதியில் 1952,1957,1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.1958ல் அகமுடையார் மாநில சங்கத்தை சென்னையில் நிறுவி சமூக தொண்டாற்றினார்.

கோ.ஐய்யப்பன்

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக 2006-2011 வரை திமுக சார்பில் இருந்தவர்.

Wednesday, February 22

வீ .நாராயணசாமி அகம்படியர்



மதுரை ஜில்லா ஹிந்துமகாசபை மாகாண கமிட்டி மெம்பராக இருந்து பல நற்காரியங்கள் செய்தவர்.

Thursday, February 9

மருது பாண்டியரிடம் இருந்த கமுதி கோட்டை


கமுதி கோட்டை சுமார் 300 வருடங்களுக்கு முன்பு உடையத்தேவர் என்னும் விஜய ரகுநாத சேதுபதியால் பிரெஞ்சு பொறியாளர்களை கொண்டு  கட்டப்பதாகும்.மருது பாண்டியர் கையில் இக்கோட்டை சில காலம் இருந்தது அப்போது ஊமைத்துரை இக்கோட்டையில் தங்கி இருந்ததாகவும் நம்பபடுகிறது.பாஞ்சாலகுருச்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் ஆங்கிலேயரின் கைகளுக்கு சென்றது.


கமுதி கோட்டை மேடு மருது சிலைகள் 



Saturday, January 28

கோவை அகமுடையார் பிரிவுகள்

கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் இருந்து தொடங்குகிறது பின்னர் மதுரை ராமநாதபுரம் ஆற்காடு பகுதியில் இருந்து குடியேற்றங்களும் நாயக்கர் படையில் வந்தவர்கள் சேதுபதிகளிடம் ஏற்பட்ட மோதலினால்  குடியேறியவர்கள் பஞ்ச கால குடியேற்றம் என ஒவ்வொரு காலகட்டங்களிலும் கொங்கு பகுதியில் அகமுடையார் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

இரத்தின சபாபதி முதலியார்  இவருடைய பெயரில் அமைந்துள்ளதே ஆர்.எஸ்.புரம்

அகமுடையார் சமூகத்தினர் அகம்படிய தேவர் என்றும் வெற்றிலைக்கார தேவர் சமூகம் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அகமுடையரில் ஒரு பிரிவினர்  எமதர்மரை  குல தெய்வமாக வணங்குகின்றனர்.


பிரிவுகள்:


1.ராஜ  குல அகமுடையார் 
2.துளுவ வேளாள அகமுடையார் 
3.கோட்டை பற்று அகமுடையார்
4.இரும்புத்தலை அகமுடையார் 
5.ஐவளி நாடு அகமுடையார்


கோவை பகுதியில் வெள்ளலூர்,சூலூர்,இருகூர், பள்ளபாளயம்,ஒட்டபாளயம்,இராசிபாளயம்,உடையாம்பாளயம்,ஆண்டிபாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்

பொள்ளாச்சி பகுதியில் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கிடவு,பொள்ளாச்சி,குறும்ப பாளையம்,செல்லம்பாளையம்,செட்டிப்பாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்

உடுமலை  பகுதியில் கண்ணாடிபுதூர்,ஆண்டிபாளையம்

திருப்பூர் பகுதியில் திருப்பூர்,பெரிச்சம்பாளையம், மங்கலம், செட்டிபாளையம்,கருவலம்பபாளையம்

மேலும் கோதவாடி,தேவன்பாடி, வீரப்பகவுண்டன்புதூர்,தென்னம்பாளையம்,குறும்பபாளையம்,எம்மாண்டாம்பாளையம்,செட்டிக்காபாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்.

ராமலிங்க செட்டியார் கோவையின் முதல் எம்.பி

பட்டங்கள்:


தேவர்
சேர்வை
முதலியார்
மணியகாரன்
செட்டியார்
கொங்கன்
குடகன்
வேந்தன்
மலையான்
புலவர்
உதியன்
வாத்தியார்
கணக்கன்

சிவகங்கை அகமுடையார் பிரிவுகள்

சிவகங்கை என்றாலே நினைவுக்கு வருபவர்கள் மருது பாண்டியர்களும் அவர்களின் ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டங்களுமே.


ஆவாரங்காடு பகுதியில் உள்ள கலைஅரங்கம் மேல் உள்ள மருதிருவர் சிலைகள்


சிவங்ககை மாவட்டங்களில் அகமுடையார் இன மக்கள் பெருந்தொகையினராய் வாழ்கின்றனர். சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை,காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவி வாழ்கின்றனர்.


கோட்டைப்பற்று அகமுடையார் திருமண மண்டபம்


1.ராஜகுல அகமுடையார்
2.ராஜபோஜ அகமுடையார்
3.ராஜவாசல் அகமுடையார்
4.கோட்டைப்பற்று அகமுடையார்

பிரிவுகள் இப்பகுதியில் காணப்படுகின்றனர்.

மானாமதுரை வட்டம் வீரநாரயண தேவன்பட்டியில் உள்ள மருதிருவர் சிலைகள்

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...