Saturday, September 10

அகப்படை

படையை அதன் நிலை அடிப்படையில் இருபடைகளாக பிரிக்கலாம்
*அகப்படை
*மறப்படை


 
அகப்படை என்றால் மூலப்படை, அந்தரங்கமான சேனை அல்லது அணுக்கபடை.ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர்.
மூலப்படை என்பதற்கு தொல்படை என பொருளுண்டு
இவற்றில் தொல்படையான மூலப்படையே சிறப்பானது.
வள்ளுவர் மூலப்படையை தொல்படை என தனது குறளில் "
உலைவு இடத்து ஊறுஅஞ்சா வன்கண் தாலைவுஇடத்துக்
தொல்படைக்கு அல்லால் அரிது" குறிக்கிறார்.
விளக்கம்:போரில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டு பெருமையுடைய படைகளுக்கு அல்லாமல் முடியாது.

தினமும் பயிற்சி செய்து நீண்ட காலமாக நிலைத்திருக்கும் படை அகப்படை.

மூலப்படை என்பது அரசரின் முன்னோரை தொடங்கி வரும் சேனை.இப்படையின் சிறப்பானது அரசன் மீது கொண்டுள்ள அன்பும் போரில் வலிமை குன்றினாலும் பயந்து விலகாத வீரமுமாகும்.

இராமாயணத்தில் மூலபல வதைபடலத்தில் இந்திரஜித்தின் இறப்பிற்கு பின் தாங்கள் போர்புரிய செல்வதாக மூலப்படயினர் கூறினர் இராவணன் இராமனையும் இலக்குவனையும் கொல்லும் படி கேட்டுகொள்கிறான்.மூலப்படை வருவதை கண்டு வானரபடை ஓட்டம் பிடித்தனர்.ஜாம்பவான் பயந்து ஓடியதற்கு அவமானபடுகிறார்.வீபஷணன் மூலப்படை பற்றியும் அதன் வலிமை பற்றியும் இராமனுக்கு சொல்கிறான்.இந்த அதிசய போரை சிவபெருமான், பிரம்மன் மற்றும் தேவர்கள் பார்க்கிறார்கள்.மூலப்படையை இராமன் அழித்ததை உலகமே கண்டு வியந்தது என கம்பர் கூறுகிறார்.

பரிமேலழகர் "மூலப்படை அறுவகை படையுள்ளும் சிறப்புடையது" என கூறுகிறார்.

யது குல மருதரசர்


மருது பாண்டியர்களின் வீரம் மற்றும் கொடை தன்மை பற்றி தெரிந்த அளவுக்கு அவர்களுடைய தமிழ் பற்றை பற்றி பலர் அறியவில்லை புலவர் பலர் கூடி அமர்ந்து தமிழ் வளர்க்க தமிழ் சங்கம் நிறுவியிருந்தனர்.வடமொழியில் அமைந்த வானர வீர புராணத்தை தமிழ் மொழியில் மாற்ற உதவினர்.இப்புராணம் தலபுராணமாக மானாமதுரையில் இருக்கும் சிவதலத்திற்கு பாடபெற்றது. அப்புராணத்தை தமிழ் மொழியில் மாற்றி அமைத்த புலவர் கடவுளை பற்றிய பாடலுக்கு பின் மருதுவை பற்றி கூறுகிறார் அதில் பகைவர்க்குச் சிங்கத்தை போன்றவன்(அடையலர் கேசரி) கல்வி மற்றும் செல்வம் உடையவன் காளையார் கோயிலில் கோபுரம் மற்றும் தேர் செய்தவன் உடையார் வேளின் புதல்வன் விசுவை மருது அரசர் உதவ வானரவீர புராணத்தை வடமொழியிலிருந்து தமிழ்மொழியில் எழுதியது மதுரை தெய்வசிகாமணியின் புதல்வர் என தம்மை பற்றி ஆசிரியர் கூறுகிறார். அடுத்து புராணத்தின் இறுதி பாடலில் மானாமதுரை வாழ்க(இந்து நன்நகரம்) வீற்றிருக்கும் இறைவன் இறைவியான சோமேசர் ஆனந்தவள்ளி வாழ்க என கூறி மருதரசரை பற்றி கற்பகம் போன்ற கொடைக்கை உடைய யது குலத்தை சேர்ந்த மருதரசர் அவரின் மைந்தர்கள் கிளைகள் சார்ந்தோர் வாழ்க வாழ்க என புராணத்தை நிறைவு செய்கிறார்.

Friday, July 29

மாவீரன் வெங்கண்ணன் சேர்வைகாரர்


1853 இராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடடைந்து இருந்தது.நாட்டு மக்கள அதிருப்தியில் இருந்தனர்.அவர்களுக்கு எதிராக அரசு படையை பயன்படுத்தியது.அப்போது நாட்டு மக்களை காக்க விடிவெள்ளியாக வந்தவர் தான் வெங்கண்ணன் சேர்வைகாரர்.தொண்டைமானின் படைப்பிரிவின் தலைவராக இருந்ததால் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி படைப்பிரிவினரில் ஒரு பகுதியை கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக திருப்பினார்.படைவீரர்களை பணிக்கு செல்லாதபடி தூண்டினார்.விவசாய மக்களை வரிகொடுக்க வேண்டாமென விழிப்புணர்வு செய்தார்.நிலமை மோசமாவதை உணர்ந்த தொண்டைமான் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.1854ல் ஆங்கில ராணுவம் புதுக்கோட்டை வந்தது வெங்கண்ணர் அஞ்சாமல் போராடினார் இருப்பினும் நவீன ஆயுதங்கள் கொண்ட ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை ஒடுக்கினர்.இதன் விளைவால் ஆங்கில ராணுவம் நிரந்தரமாக புதுக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டது.தொண்டைமானின் அதிகாரமும் குறைக்கப்பட்டது.வெங்கண்ணன் சேர்வைகாரர் கலகம் என வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடகப்படுகிறது.இவர் புதுக்கோட்டையை ஆண்ட அகமுடையார் குல பல்லவராயர் வழிவந்தோர் தற்கால தொண்டைமான்களுக்கு முன்னால் புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள்.சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டையுடன் கிழவன் சேதுபதியின் ஆளுகையில் இருந்த சேது நாட்டின் சில பகுதிகளுக்கும் பிரதிநிதியாக இருந்தார்.இவரை நீக்கிவிட்டு தன்னுடைய கள்ளரின மனைவியின் அண்ணனான ரகுநாதராய தொண்டைமானுக்கு புதுக்கோட்டை பகுதியை வழங்கினார்.இவ்வாறு அரசு நீக்கப்பட்ட அகமுடையார்கள் படைத்தளபதியாகவும் படைப்பிரிவு தலைவர்களாகவும் வீரர்களாகவும்  பணிபுரிந்தனர்.

மலயா கணபதி




மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 10 வயதிருக்கும் போது மலேசியா சென்றார்.கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டு தன்னை கம்யூனிச இயக்கத்தில் இணைத்து கொண்டார். 1936-38 வருடங்களில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடினார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது மலேயா தமிழர்கள் சார்பாக மூன்று பேரை தமிழகம் அனுப்பி போராட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார் ஜப்பான் சரணடைந்ததை நேதாஜியிடம் கூறியவரும் இவரே. திராவிட இயக்க தலைவர்களாக மலாயாவில் முதலில் தோன்றியவர்கள் சிங்கை அகம்படியர் சங்கத்தை சேர்ந்தவர்களே. பின்னாளில் 'அகம்படியர் சங்கம்' 'தமிழர் மறுமலர்ச்சி கழகம்'(Tamil  Reform Society) என 1932இல் மாற்றம் பெற்றது.தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.இந்த சங்கம் முதலில் வெளியிட்ட வார பத்திரிகையே பின்னர் சிங்கையில் தமிழில் வெளியாகும் முதல் தினசரியாக 'தமிழ் முரசு' என வெளிவந்தது. சிங்கை அகம்படியர் மஹாஜன சங்கத்தின் தலைவராக இருந்த எ.சி.சுப்பையா அவர்களின் முயற்சியிலே ஆதி திராவிடர் சங்கம் நிறுவப்பட்டது.கணபதி அவர்களும் அகம்படியர் சங்கத்தின் பணியாற்றியிருக்கலாம் அதன் காரணமாகவே மிக பெரிய போராளியாக வந்தார் எனவும் கருதுகின்றனர். மலாயா மற்றும் சிங்கையில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து 'அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்' உருவாக்கப்பட்டது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட வலிமை மிக்க இயக்கத்தின் தலைவராக கணபதி இருந்தார். பல போராட்டங்களை நடத்தினார் 50000மக்கள் கலந்து கொண்ட மே தின அணிவகுப்பை நடத்தி காட்டினார். 1948இல் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தை தடை செய்வதாக அறிவித்தனர். சட்டத்திற்கு விரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என காரணம் காட்டி கைது செய்தனர் தூக்கு தண்டனையை கோலாலம்பூர் நீதிமன்றம் விதித்தது. தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது நேரு ஆங்கில அரசிடம் பேசி தடுக்க முயன்றார் ஆங்கில அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டாமென தந்தி அனுப்பினர் பலன் இல்லை தூக்கு தண்டனையை நிறைவேற்றினர் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மடிந்தார் அந்த மாவீரன். கணபதியின் இறப்பிற்கு பின் வீரசேனனும் (சிங்கை தொழிலாளர் சங்க தலைவர்) சுட்டு கொள்ளபட்டார். கயிற்றில் தொங்கிய கணபதி என முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இம்மாவீரனை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.

கணபதி தேவர் என்ற அகமுடையார் தான் தொழிலாளர்களின் தோழனாகவும் ஆங்கிலேயர்கள் மற்றும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராடிய முக்கிய சக்தியாக திகழ்ந்தவர்.

THANKS: http://www.malaya-ganapathy.com/

சாத்தப்ப ஞானி



சிவகங்கை மாவட்டம் கோவனூரை சேர்ந்த வீரப்பன் சேர்வை அவர்களின் புதல்வரே சாத்தப்பன் சேர்வை.பின்னாளில் சிவகங்கை உருவாக காரணமானவரும் சிவகங்கை அரசர்களின்  ராஜகுருவாகவும்  விளங்கியவர்.சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம் உள்ளவராய் இருந்தார்.காட்டில்திரிந்து கொண்டிருந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினார். அவரது இறையுணர்வை கண்ட முனிவர்கள் அதனை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றனர்.பின்னர் மௌனகுருவிடம் உபதேசம் பெற்றார் தாயுமானவர் திருச்சபையில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார் தாயுமானவரின் சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.கோவனூர் முருகன் கோயிலே கதியென கிடந்தவர் பின் பல தலங்களுக்கு சென்று சாத்தப்பன் ஞானி என அனைவராலும் போற்றப்பட்டார்.


முருகனின் மீது அளவில்லா பக்தி உடையவராக திகழ்ந்தார் நாட்டில் உள்ள முருகன் கோயிலில் எல்லாம் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.ஒரு முறை சசிவர்ண பெரிய உடையாத் தேவர் வேட்டைக்கு சென்ற போது நாவலடி ஊற்றில் தவம் செய்து கொண்டிருந்த சாத்தப்ப ஞானியரை கண்டு வணங்கினார்.சசிவர்ணரை கண்ட ஞானியார் நல்ல யோகமும் புதிய பட்டமும் வந்து யானை கட்டி சீமையாளுவாய் என விபூதி கொடுத்து அருளி தஞ்சை செல்லுமாறு உத்தரவு கொடுத்து அனுப்பினார்.மன்னரும் தஞ்சை சென்று அரண்மனையில் புலியை கொன்று மேலும் தஞ்சை படைகளின் உதவியுடன் ராமநாதபுரத்தில் அரசனாக இருந்த பவானி சங்கர தேவரை வென்றார்.பின்னர் ஞானியாரை வந்து சந்தித்தார் முன்னர் சந்தித்த இடத்தில் இருந்த ஊற்றில் திருக்குளம் வெட்டி சிவகங்கை என பெயரிட்டு குளத்தின் மேல் மூலையில் அரண்மனை கட்டி சீமை ஆள் என அருளினார்.அரசரும் அவ்வாறே செய்து தனது குருவான ஞானியருக்கு மடம் நிறுவி நிலங்களையும் சமயப்பணி சிறப்பாக செய்வதற்கு அளித்தார்.மேலும் சாத்தப்பர் அவர்களின் புதல்வரும் புகழ்பெற்ற சேது தளவாயான வைரவன் சேர்வைக்காரர் கட்டிய ராமநாதபுரம் அருகிலிருக்கும் பெறுவயலில் ரணபலி  முருகன் கோயிலுக்கு திருவெற்றியூரில் சில இடங்களை கொடுத்துள்ளார்.இன்று வரை இவ்வூரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு சாத்தப்பையா என பெயர் வைக்கின்றனர்.
1961ஆம் ஆண்டு வரை சிவகங்கையின் மன்னர்களால் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.குருவின் நினைவாக ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று படையல் வைத்து குரு பூஜை செய்து அன்னக்கொடி நட்டு அன்னதானமும் நடைபெறுகிறது..தற்போது மடத்தின் சொத்துகள் பலவும் பலரால் அக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சசிவர்ண தேவரவர்கள் காளையார்கோயிலில் தனது சிலையை நிறுவி அதற்கு எதிரே சாத்தப்ப ஞானியாரின் சிலையை நிறுவி உள்ளார்.

Wednesday, July 20

மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் மருது பாண்டியர் மணி மண்டபம்

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள்  1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை  மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.


வீரர்கள் மண்ணில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்..!

அலங்காரத்தில் மருதரசர்கள்

 

மருது  சகோதரர்கள் நினைவுத் தூண், இடம்: திருப்பத்தூர்

 

                                   

                               

மருது பாண்டியர் நினைவு மண்டபம, இடம்: திருப்பத்தூர்



மருது பாண்டியர்களின் சிலை

நினைவு மண்டபத்திலுள்ள சின்ன மருது பாண்டியர் சிலை

 

நினைவு மண்டபத்திலுள்ள பெரிய மருது பாண்டியர் சிலை

 

 

 



 

Monday, July 18

மருது பாண்டியர் கட்டிய காளையார் கோயில் மற்றும் மருது பாண்டியர் கோயில்



“மருது பாண்டியர்கள் சரணடையவில்லை என்றால் காளையர் கோவிலை இடித்து விடுவோம்” என்று வெள்ளைக்காரன் எச்சரிக்க, எம்முயிரை விடக் கோவில்களே முக்கியமென்று கருதி சரணடைந்து தூக்கு மேடை ஏறிய தெய்வங்களே மருது சகோதரர்கள்.

காளையார் கோயில்



பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால்  தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும்.

பழைய புகைப்படம் காளையார் கோயில் 

 


நாட்டுப் பாடல் ஒன்று,

"கருமலையிலே கல்லெடுத்து காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி"
என்று அவர்களின் பெருமை சொல்லும்.

மருது கட்டிய ராஜ கோபுரம்




கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை – மானாமதுரை – முடிக்கரை – காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை.



இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு.காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் – தியாகம் – செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும் அடுத்த பதிவில் பார்ப்போம்.1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது.

காளையார் கோயிலில் உள்ள மருதரசர்கள் சிலை 


மருது திருக்கோயில்:

 

குரு பூஜையின் போது

கோயிலின் எதிரே மருது பாண்டியர்கள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள மருது சிலை


வேற்று நாட்டவனும் அதிர்ந்து போன மருது பாண்டியர்களின் வீரம் தெறித்த இம்மண்ணில், கோயில் அறம் காக்க தன் இன்னுயிர் நீக்கினாரே! செத்தும் வாழும் வீரர்கள் துயில் பயிலும் ஜீவ சமாதி! கோயிலை நோக்கி தத்தமது சிரசுகள் இருக்கும்படிக்கு புதைக்குமாறு ஆங்கிலேயரிடம் சொன்னபடியாள்  புதைக்கப்பட்டது இவ்விடத்திலே! தரிசனம் செய்ய மறவாதீர்! நமது தூய்மையான அஞ்சலியும், சில துளி கண்ணீரும் இவ்வீரத் தமிழருக்கு, காளையார் கோயில் கட்டிய காளையருக்கு நாம் செலுத்தும் கடனாம்! நமது தேசத்தைக் காக்க இங்கே நமது வேண்டுதலை வைப்போம்! 

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...