Saturday, September 10

யது குல மருதரசர்


மருது பாண்டியர்களின் வீரம் மற்றும் கொடை தன்மை பற்றி தெரிந்த அளவுக்கு அவர்களுடைய தமிழ் பற்றை பற்றி பலர் அறியவில்லை புலவர் பலர் கூடி அமர்ந்து தமிழ் வளர்க்க தமிழ் சங்கம் நிறுவியிருந்தனர்.வடமொழியில் அமைந்த வானர வீர புராணத்தை தமிழ் மொழியில் மாற்ற உதவினர்.இப்புராணம் தலபுராணமாக மானாமதுரையில் இருக்கும் சிவதலத்திற்கு பாடபெற்றது. அப்புராணத்தை தமிழ் மொழியில் மாற்றி அமைத்த புலவர் கடவுளை பற்றிய பாடலுக்கு பின் மருதுவை பற்றி கூறுகிறார் அதில் பகைவர்க்குச் சிங்கத்தை போன்றவன்(அடையலர் கேசரி) கல்வி மற்றும் செல்வம் உடையவன் காளையார் கோயிலில் கோபுரம் மற்றும் தேர் செய்தவன் உடையார் வேளின் புதல்வன் விசுவை மருது அரசர் உதவ வானரவீர புராணத்தை வடமொழியிலிருந்து தமிழ்மொழியில் எழுதியது மதுரை தெய்வசிகாமணியின் புதல்வர் என தம்மை பற்றி ஆசிரியர் கூறுகிறார். அடுத்து புராணத்தின் இறுதி பாடலில் மானாமதுரை வாழ்க(இந்து நன்நகரம்) வீற்றிருக்கும் இறைவன் இறைவியான சோமேசர் ஆனந்தவள்ளி வாழ்க என கூறி மருதரசரை பற்றி கற்பகம் போன்ற கொடைக்கை உடைய யது குலத்தை சேர்ந்த மருதரசர் அவரின் மைந்தர்கள் கிளைகள் சார்ந்தோர் வாழ்க வாழ்க என புராணத்தை நிறைவு செய்கிறார்.

1 comment:

  1. அகமுடையார் சூரிய குலம் தான ..... அகமுடையாருகும் யது குலதுக்கும் என்ன சம்மந்தம்.....

    ReplyDelete

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...