Saturday, September 10

அகப்படை

படையை அதன் நிலை அடிப்படையில் இருபடைகளாக பிரிக்கலாம்
*அகப்படை
*மறப்படை


 
அகப்படை என்றால் மூலப்படை, அந்தரங்கமான சேனை அல்லது அணுக்கபடை.ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர்.
மூலப்படை என்பதற்கு தொல்படை என பொருளுண்டு
இவற்றில் தொல்படையான மூலப்படையே சிறப்பானது.
வள்ளுவர் மூலப்படையை தொல்படை என தனது குறளில் "
உலைவு இடத்து ஊறுஅஞ்சா வன்கண் தாலைவுஇடத்துக்
தொல்படைக்கு அல்லால் அரிது" குறிக்கிறார்.
விளக்கம்:போரில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டு பெருமையுடைய படைகளுக்கு அல்லாமல் முடியாது.

தினமும் பயிற்சி செய்து நீண்ட காலமாக நிலைத்திருக்கும் படை அகப்படை.

மூலப்படை என்பது அரசரின் முன்னோரை தொடங்கி வரும் சேனை.இப்படையின் சிறப்பானது அரசன் மீது கொண்டுள்ள அன்பும் போரில் வலிமை குன்றினாலும் பயந்து விலகாத வீரமுமாகும்.

இராமாயணத்தில் மூலபல வதைபடலத்தில் இந்திரஜித்தின் இறப்பிற்கு பின் தாங்கள் போர்புரிய செல்வதாக மூலப்படயினர் கூறினர் இராவணன் இராமனையும் இலக்குவனையும் கொல்லும் படி கேட்டுகொள்கிறான்.மூலப்படை வருவதை கண்டு வானரபடை ஓட்டம் பிடித்தனர்.ஜாம்பவான் பயந்து ஓடியதற்கு அவமானபடுகிறார்.வீபஷணன் மூலப்படை பற்றியும் அதன் வலிமை பற்றியும் இராமனுக்கு சொல்கிறான்.இந்த அதிசய போரை சிவபெருமான், பிரம்மன் மற்றும் தேவர்கள் பார்க்கிறார்கள்.மூலப்படையை இராமன் அழித்ததை உலகமே கண்டு வியந்தது என கம்பர் கூறுகிறார்.

பரிமேலழகர் "மூலப்படை அறுவகை படையுள்ளும் சிறப்புடையது" என கூறுகிறார்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...