Wednesday, January 4

நகைமுகன்

தனித்தமிழர் சேனை நிறுவனர்.



1972ல் பொறியியல் பட்டதாரி..
திராவிட மாணவர் கழகப்பொறுப்பாளர்..
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களுடன் இடதுசாரி தத்துவத்தில் நம்பிக்கைகொண்டு தொடர்பு..
மேற்குவங்க இடதுசாரி இயக்கம்போல்
தமிழக அரசியலைப்படைக்க ஒத்த்க கருத்துள்ள நட்பு மற்றும் உறவுகளுடன் முயற்சி..
அகில இந்திய பார்வர்ட்பிளாக் கட்சித்தலைமையுடன் நெருக்கம்..
மத்திய அரசின் உயர்பதவியில் இருந்தபோதும் சமூகநீதியில் நம்பிக்கை கொண்டிருந்ததால் அகில இந்திய அளவில் "BAMSCEF" என்ற அமைப்பை திருவாளர்கள்:கன்சிராம்,சிம்ரத்சிங் மான்,லால்டெங்கா ,சந்திரசேகர் போன்றோருடன் சேர்ந்து உருவாக்கம்..
தமிழகத்தில்
திருவாளர்கள்:பி கே மூக்கையாத்தேவர்,
நல்லகண்ணு,ஆறுமுகசாமி,கா பா பழனி,அனந்தநாயகி,மணலி கந்தசாமி,தா பாண்டியன்,கூத்தகுடி சண்முகம்,அன்பில் தர்மலிங்கம்,கோவைச்செழியன்,மருத்துவர் இராமதாசு,பழ.நெடுமாறன்,கி.வீரமண
ி,அய்யணன் அம்பலம்,திருமாவ
ளவன்,தனியரசு..என அவரின் தொடர்புப்பட்டியல் தொடரும்..
திராவிடன் வீரம்,நகைமுகன் என்ற இதழ் நடத்தியவர்..
மண்ணின் மைந்தர் கொள்கையில் ஈர்க்கப்பட்டு மராட்டிய மாநில அரசியலில் இக்கொள்கையை நடைமுறைப்படுத்திட போராடிய சிவசேனாவின் பால்தாக்கரேயுடன் சந்தித்து,இலங்கையில் மண்ணைக்காக்கப்போராடும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைவிடச்செய்தவர்...
தந்தை பெரியாரின் சிந்தனையை ஏற்று
பின்னர் கர்நாடகத்தமிழர்,இந்தியத்தமிழர்
,உலகத்தமிழர்..பிரச்சனைகளுக்காக குரல்கொடுத்து,ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்தவர்...
1990ல் திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைதாகி 169 நாட்கள் சிறை சென்றவர்.
1991ல் திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கக் காரணமாயிருந்தவர்..
திராவிட இயக்கம் நடத்தும் தலைமைகளுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தபோதி
லும்
சமூகநீதி, இன உணர்வு,மண்ணின் மைந்தர் போன்ற கொள்கைகளில் சமரசம் காட்டாதவர்..
அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில்
தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படையாக பேசியும் எழுதியும் வந்தவர்..அதனால் அவருக்கு உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு நெருக்கமாக இருந்தது..
நான்காம் தூண் என்ற நூலை எழுதியவர்..
அரசியலில் எதிர்கருத்துக்க
ொண்டவர்களிடமும் நட்பு பாராட்டியவர்..
பகுத்தறிவும்
காங்கிரஸ் எதிர்ப்பும் கொண்டிருந்தாலும்
அவரது நூலை வெளியிட்டவர்
காஞ்சி சங்கராச்சாரியார்..
பெற்றுக்கொண்டவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..
2009ல் ஈழப்பிரச்சனையில்
திமுக நிலைப்பாட்டில் வெறுத்து
அதிமுக தலைமைக்கு ஆதரவாக செயல்பட்டவர்..
விடுதலைப்புலிகளுக்கு மத உணர்வு இல்லை என்றாலும் இந்துமத அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசியலை இந்திய பாஜக தலைமைகளுக்கு ஆதாரங்களைத்திரட்டி அத்வானி மூலம் தமிழீழத்துக்கு விடிவு கிடைக்க முயற்சித்தவர்..
திமுக எதிர்ப்பு உணர்வும்
தமிழரல்லாத அதிகாரிகளின் கோபமும்
இணைந்து இவர்மீது போலியாக 18 வழக்குகள் திட்டமிட்டு போடப்பட்டன..
பிணைபெற்று வரவர கைது நடவடிக்கை..
இதய நோயாளி
சக்கரை வியாதி
இரத்தக்கொதிப்பு
விபத்த்தில் கை முறிவு...
இத்தனையும் இருந்தும் அவரது துணிச்சல் மிக்க செயல்பாடுகள் 65 வயதுவரை மட்டும் இவ்வுலகில் அவரால் வாழமுடிந்தது..
சென்னை உயர்நீதிமன்ற சுவரொட்டி வழக்கு..
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக வழக்கறிஞர் ஆச்சாரியா வழக்கிலிருந்து விலக சட்டநெருக்கடி...
அவரது வாழ்க்கை சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் எனும் கிராமத்தில் தொடங்கி..
தமிழக அரசியலில் தலைப்புச்செய்தி
யாகி..
தமிழக அதிகாரிகளுடனான தொடர்பின் வழியாக பாதிக்கப்பட்டோருக்கு உதவும்கரமாகி..
எதிர்பாராத வகையில்
14.3.2016ல் மதுரையில் இயற்கை எய்தினார்.

நன்றி:அரப்பா தியாகராஜன்

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...