Thursday, January 26

தஞ்சை அகமுடையார் பிரிவுகள்

ஐந்து நாட்டு அகமுடையார்:

அதானி,பெரம்பூர்,விலாங்குளம்,சூரங்குடி,சங்கமங்கலம்,அம்மையாண்டி,திருத்தேவன் மற்றும் கும்பதேவன் பகுதிகளில் வசிக்கும் அகமுடையார்கள் தங்களை ஐந்து நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.



புன்னியரசு நாட்டு அகமுடையார்:

அதம்பை,பத்தரசன்கோட்டை,கயவூர் இப்பகுதிகள் மற்றும் இதனை சுற்றி வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் தங்களை புண்ணியரசு நாட்டு அகமுடையார் என விளிக்கின்றனர்.ஐந்து நாட்டு அகமுடையர்களும் புண்ணியரசு நாட்டு அகமுடையர்களும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர்.

உமாமகேஷ்வரன் பிள்ளை - கரந்தை தமிழ் சங்கத்தின் நிறுவனர்


பதினொரு நாட்டு அகமுடையார்:

ஆவணம் மற்றும்  இதனை சுற்றியுள்ள பத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் பதினோரு நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.

கோட்டை பற்று அகமுடையார்;

பெரிய கோட்டை,முன்னவல் கோட்டை,கருப்புமுதலி கோட்டை மற்றும் சிக்கப்பட்டு பகுதி மற்றும் பல பகுதிகளில் பரவி வாழும் அகமுடையார்கள் கோட்டை பற்று அகமுடையார் என் அழைத்து கொள்கின்றனர்.

இரும்புதலை அகமுடையார்;

இரும்புதலை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிப்போர்கள் தங்களை இவ்வாறு அழைத்து கொள்கின்றனர்.








Friday, January 20

புதுக்கோட்டை அகமுடையார் பிரிவுகள்


அய்யாசாமி சேர்வையின் புதல்வர் புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை
பிரபல இசை கலைஞர்

1.அஞ்சூர் அகமுடையார்

வைத்தூர்,முட்டம்பட்டி,எறையூர்,வாட்டனகுருச்சி,மெய்க்குடிப்பட்டி பகுதிகளில் வாழும் அகமுடையார்கள் பல்லவராய அரச மரபினர். வல்லத்தரையன், பேய்வேட்டி, பேயடி, வாட்டாச்சி,சோழகன் மற்றும் கஸ்த்தூரி போன்ற பல பிரிவுகளை தங்களுக்குக்குள் கொண்டிருந்தனர்.

2.கோட்டைபற்று அகமுடையார்

பெருச்சாட்டி,மலுக்கன்,தனிப்பிரான்,குன்றாண்டான் போன்ற ஏழு பிரிவுகளை தங்களுக்குள் கொண்டுள்ளனர்.தாஞ்சுர் அகமுடையார் எனவும் அழைக்கப்படுகின்றனர். 

3.கிழக்கு சீமை அகமுடையார்
4.அஞ்சுக்கோட்டை அகமுடையார்
5.ராஜகுல அகமுடையார்
6.கோட்டைகாடு அகமுடையார்


சேர்வை,தேவர்,பிள்ளை பட்டங்களை புதுக்கோட்டை அகமுடையர்கள் பயன்படுத்துகின்றனர்.

Tuesday, January 17

எம்.ஆர்.குருசாமி முதலியார்


அன்றைய இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவர்  குருசாமி முதலியார் மைசூர் மாகாணத்தின் நிலமங்களா என்னும் ஊரில் 1880இல் பழந்தமிழ்க்குடியாம் அகமுடையார் இனத்தில் ராமசாமி முதலியார் என்னும் புகழ்பெற்ற கட்டிட கான்ட்ராக்டரின் மகனாக பிறந்தார்.மைசூரில் பள்ளிக்கல்வியை முடித்தவர் பெங்களூர் மத்திய கல்லூரியில் B.A பட்டம் பெற்றார்.ராஜாஜி இவருடைய கல்லூரி  நண்பர்.



பின்னர் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தஞ்சை மருத்துவ கல்லூரியில் பணியாற்றினார்.சில ஆண்டுகள் கழித்து மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.ஆங்கில மருத்துவர்கள் மட்டுமே வழங்கப்பட்ட மிகவும் மதிக்கத்தக்க பதவி குருசாமி முதலியார் அவர்களுக்கு வழங்கப்பட்டது முதல் இந்தியராக தெரபாட்டிக்ஸ் பேராசியராக நியமிக்கப்பட்டார்.1950 களில் influenza மெட்ராஸில் மிக அதிகமாக பரவி உயிர் பலிகளை வாங்கிக்கொண்டிருந்த நேரம் ஒரு பேட்டியின் போது எல்கோசின் என்ற மாத்திரையின் மூலம் influenza வை குணப்படுத்தலாம் என கூறினார்.உடனே அந்த மாத்திரையை மக்கள் அதிகளவு வாங்கி குணமடைந்தனர் இதை பல மருத்துவர்கள் மருத்துவ நெறிகளுக்கு புறம்பாக குருசாமி முதலியார் கூறியுள்ளார் என சாடினார் மக்களின் நலனை காட்டிலும் மருத்துவ நெறி பெரியது இல்லை என் கூறி மக்களின் மருத்துவராக தனது இறுதி காலம் வரை பணியாற்றினார்.

Monday, January 16

வீராசுவாமி


கன்னட திரையுலகின் புகழ் பெற்ற தயாரிப்பாளரான வீராசுவாமி பிறந்தது  அன்றைய மதராஸ் வட ஆற்காட்டில் ஓட்டேரி என்னும் ஊரில் அகமுடையார் குலத்தில் நாகப்பா - காமாட்சியம்மாள் ஆகியோர்க்கு மகனாக  1932 ஏப்ரல் 17 அன்று பிறந்தார்.1950ல் சினிமா துறையில் சிறிய வேலையில் தொடங்கி பின்னர் 1955ல் தன்னுடைய நண்பரான கங்கப்பா என்பவருடன் சேர்ந்து உதயா பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோகஸ்தராக  உயர்ந்தார்.1962இல் ஈஸ்வரி புரோடக்ஷனை நிறுவி 1971 குல கௌரவா எனும் திரைப்படத்தை ராஜ்குமாரை கதாநாயகனாக வைத்து வெளியிட்டார்,17 கன்னட திரைப்படங்கள்  1 தமிழ்(படிக்காதவன்) மற்றும் ஹிந்தி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.இவருடைய மகன் ரவிச்சந்திரன் புகழ் பெற்ற கன்னட நடிகர் ஆவர்.23 ஆகஸ்ட் 1992இல் இயற்கை எய்தினார்.

அ.சி.சுப்பையா

தமிழறிஞர் சுப்பையா

தஞ்சாவூர் மாவட்டத்தைச்  சேர்ந்த திருமக்கோட்டைக் கிராமத்தில் அ.சிதம்பர தேவருக்கும் மங்களதம்மாளுக்கும் 1881ஆம் ஆண்டு  டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தார்.இவர் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில்  பயின்றார்.1894ஆம் ஆண்டு  தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் சிற்பம், சித்திரம், வைத்தியம், சோதிடம் போன்ற பல துறைகளில் தேர்ச்சிப் பெற்றார்.சுவாமி சதானந்தா அவர்களிடம்  சித்த மருத்துவ முறைகளிலும் பயிற்சி பெற்றார்.மகாத்மா சதாநந்த சாமியவர்களின் அருள் கிடைக்கப் பெற்றமையால், ஆத்மார்த்தமான உபதேசங்களையும், சில அபூர்வ மான வைத்திய முறைகளையும் கற்று, அவரின் ஆசீர்வாதத்தால் ஸ்ரீமதி அஞ்சலையம்மாளை திருமணம் செய்து 1901-ம் வரு­டம் சிங்கப்பூர் வந்தனர். வந்த சில தினங்களின் பின் அரசாங்கப் பதார்த்த பரிசீலனப் பகுதியிலும், சிப்பாய் கோல்பந்து விளையாட்டுப் பகுதியிலும் வேலை செய்த பின் சொந்த வேலைகளில் ஈடுபட்டு சித்திரம் சித்தரிப்பதிலும், சில்லறை கட்டிட வேலைகள் ஒப்பந்தத்திலும் இவ்வாறு பல வேலைகளிலும் சீவியம் நடத்தி வந்தனர். இவ்வாறான வி­யங்களிலும் பரோபகாரமான குணத்தினாலும், பிறர்மேல் வைத்த அன்பினாலும், இவர் பெயர் நம் மக்களுள் மாத்திரமன்றிப் பிறர் மக்களுள்ளும் பிரக்கியாதி பெற்றது. தேடிய திரவியங்களும்  வளரத்துவங்கின. தனலட்சுமியும் கண்ணோக்கினள். இவ்வாறான நிலைமை எய்திய பின்னர்  சிராங்கூன் ரோட்,251- நி. இல்லத்தில்  சித்த வைத்திய பாற்மேசி  எனும் காந்தரசக் கம்பெனியை ஸ்தாபகஞ் செய்து வைத்தியம் நடத்தினர். இவரின் கையால் மண்ணைக் கொடுத்தாலும் பொன் போன்ற  மருந்தானது. ஆகையினால்  இவருடைய வைத்திய நிலைமை மலாய் நாடுகளில் எவ்வளவு தூரம் எட்டுமோ, எத்தனை சந்து பொந்துகள் நுழையுமோ, அத்தனை இடங்களுக்கு எட்டியும், நுழைந்தும் வேலை செய்தமையால் அயல் நாடுகளெங்கணும் பரவத் துவங்கியது.

இவருடைய அதிர்ஷ்டத்தோடு குணமும் மனமும் கூடிக் கொண்டன. கைபாகம் செய்பாகமும் முறை தவறாமல் நிறைவேறியது. தமது வைத்திய சாலையை மென்மேலும் விருத்தியாக்குவதற்கு நினைத்துத் தனிக் கட்டிடங்களாகச் சொந்தத்தில் மேல் கண்ட சிராங்கூன் ரோட், 233, 235-நிம்பர்களில்  மிகவும் விமர்சையாய் நடத்தி வருகின்றார். தனத்துக்கேற்ற குணம்போல் இம்மலாய் நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி பொதுஜன நன்மையின் பொருட்டு எத்தனையோ வி­யங்கள் புரிந்திருக்கின்றன. அவைகளியவையுங் கூற நமது சரித்திரமிடங்கொடாததினால், சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடு கின்றோம். சிங்கை விவேகானந்த சங்கம், ஆதித்திராவிட சங்கம், முதலிய சங்கங்களின ஸ்தாபகராயும், சில சங்கங்களின் அங்கத்தவராயும், எவரும் விரும்பத்தக்கவாறு தொண்டு புரிந்திருக்கின்றார்.


ஏ.ஆர்.பெருமாள்

அருப்புக்கோட்டை ராமுத்தேவர் - பாக்கியம் அம்மாள் ஆகியோரின் புதல்வராக 17.5.1921ல் ஏ.ஆர்.பெருமாள் பிறந்தார்.



அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்கின் தலைவராக இருந்தவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை முழுமையாக எழுதியவர். 12 வயதில் இருந்து தேவரோடு பயனித்தவர் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் காரியாபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை வென்றவர்.



1937 சட்டபேரவை தேர்தல் சமயம் முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மஹாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர் பின்னர் தேவர் வெளியே வந்து மக்களை வணங்கி விட்டு காரில் ஏறி சென்றார் அக்காலத்தில் தலைவர்களின் பெயரை கூறி விட்டு ஜே என்று கூறுவது வழக்கு.கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் இவ்வாறு கூறிக்கொண்டு தேவரின் காரை பின்தொடர்ந்து வர.சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு அச்சிறுவனை காரில் ஏற்றி யாரப்பா நீ என கேட்க நான் அருப்புக்கோட்டை ராமு தேவரின் புதல்வர் பெருமாள் என தேவரிடம் கூறினான் சிறுவன்.அந்த சிறுவனே பின்னாளில் (அருப்புக்கோட்டை ராமுத்தேவர் பெருமாள்)  எ.ஆர்.பெருமாள் என  அழைக்கப்பட்டார்.



பசும்பொன் தேவர் தனது சொத்தில் ஒரு பகுதியை வழங்கும் அளவுக்கு தேவரின் நம்பிக்கைக்குரியவராய் விழங்கினார்.அச்சொத்தை அவர் தேவர் பெயரில் இயங்கும் தரும ஸ்தாபனம் ஒன்று நிறுவி இனைத்து விட்டார்.தேவர் தனது சொத்தை 16 பேருக்கு பிரித்தளித்தார் இதில் 12 பேர் ஸ்தாபனத்தில் இனைத்து விட்டனர்.முத்துராமலிங்க தேவரின் மறைவிற்கு பின் கட்சியை வலுப்படுத்த பாண்டி மண்டலத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தேவர் புகழ் பரப்பினார்.



முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் அமைத்திடவும்,கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் முதுகளத்தூர் கலவரத்தினால் பாதிக்க பட்டவர்களை விடுதலை செய்யவும் மூக்கையா தேவரோடு இனைந்து பணியாற்றினார்.அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இனக்கமாக இருந்த காரணத்தினால் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக  அறிவிக்கவும் மாவட்டத்திற்கு தேவர் பெயரை சூட்டவும் காரணமாக இருந்தவர்.



அருப்புக்கோட்டை பெரிய தெரு பதினெட்டு தலைக்கட்டு அகம்படியர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அகம்படியர் மஹாலில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியவர் மேலும் தேவரின் வெண்கலச்சிலையை மஹாலில் திறந்து வைத்தார்.பசும்பொன் தேவர் திருமண மண்டபம் கட்டியவர்.



ஏ.ஆர் அவர்களுக்கு முன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.உடல்நலக்குறைவின் காரணமாக 21.4.1998இல்  இயற்கை எய்தினார்.

கந்தசாமி முதலியார்

 

நாடக கலையை வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் கந்தசாமி முதலியார் அவர்கள்.புகழ் பெற்ற நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தை.எம்.ஜீ.ஆர் அவர்களை திரையுலகிற்கு அறிமுக படுத்தியவர்.








 

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...