Monday, January 2

T.G.ஜெயராமன் அகமுடையார்

நேதாஜியின் இந்திய ராணுவப்படைக்கு அறைக்கூவல் விடுத்த போது வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் ரத்தத்தில் கையெழுத்திட்டு நேதாஜி படையில் சேர்ந்தவர்.


ராக்கெட் மற்றும் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்.



இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு தாமரை பட்டையமும் விருதும் அளித்து கெளரவித்தது. பாரத் ரத்னா மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் நேதாஜியின் இந்திய ராணுவப்படையில் பணியாற்றியதற்கு "நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரர் எனவும் விடுதலை போராட்ட தியாகி" எனவும் கௌரவப்படுத்தினார்

பாலசுப்பிரமணிய முதலியார்

அண்ணாவின் அரசியல் குரு:

அண்ணாவின் அரசியல் குரு பி.பா என்கிற
பாலசுப்பிரமணியன் முதலியார்



13 வருடம் சண்டே அப்சர்வர் என்ற ஆங்கில பத்திரிகை நடந்தியவர் பெரியாருக்கு முன்பாகவே அண்ணா பொதுவாழ்க்கைக்கு அரசியல் குரு ஆவார் .


இன்று அண்ணாவை அனைவருக்கும் தெரியும் அவரை உருவாக்கிய இவரை?


இந்த அகமுடையாரின் புகழ் பரவ செய்வோம் போற்றுவோம்.



தொண்டை மண்டல அகமுடையார்கள்

தொண்டை மண்டல அகமுடையார் பிரிவுகளும் பட்டங்களும்:


1.விழுப்புரம் மாவட்டம்
1திருவெண்ணெய் நல்லூரில் - கோட்டை
பற்று அகமுடையார்
பட்டம்:- பிள்ளை, # உடையார் , ( துளுவ
வேளாளர் )
2.திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை
வட்டாரத்தில் மலைமான் ( மலைநாட்டு )
அகமுடையார்.
பட்டம்:- # பிள்ளை, உடையார், நாயக்கர்,
முதலியார்
3.கடலூர், விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் - துளு நாடு இரும்புத் தலைவேளிர் அகமுடையார் ,
பட்டம்:- # பிள்ளை , முதலியார், உடையார்,
( துளுவ வேளாளர் )
4.வேலூர் மாவட்டம் & சென்னை,
காஞ்சிபுரம் - கோட்டை பற்று அகமுடையார் மற்றும் துளு நாடு வேளீர் அகமுடையார்
பட்டம்:- # முதலியார், உடையார், பிள்ளை
( துளுவ வேளாளர் )
5.பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் -
சேர வம்ச ஐவளி நாட்டு அகமுடையார்
பட்டம்:- முதலியார், இராவ், ரெட்டி,
( துளுவ வேளாளர் )
நன்றி அண்ணன் : ஜெயகாந்தன் அகமுடையார் நெல்லிக்குப்பம

அங்கம்போரா

அங்கம்போரா-பழந்தமிழரின் தற்காப்புக்கலை:




சோழர் ஆட்சி இலங்கையில் வலுவிலந்த காலத்தில் சிங்கள மன்னர்கள் ஆட்சி மீண்டும் இலங்கையில் தோன்றியது!
அகம்படி சாதியினரின் தொல் அரசகுடிச்சிறப்பையும் , போர்முறைகளையும் கண்ட சிங்கள அரசர்கள் அகம்படியினரை தங்கள் படையினுள் இணைத்துக்கொண்டனர்!
முதலாம் பராக்கிரமபாகுவின் (1153-1186) படையில் அகம்படியினர் பெருமளவிலான அகம்படியினர் இருந்தனர்
ஆதாரம்: நிகாய சங்கரகய (சிங்கள பழம் நூல்)
கம்பதெனிய,கம்பளை,கோட்டே ஆகிய ராசதானிகளும் அகம்படிகள் படையினராக இருந்துள்ளனர்
ஆதாரம்: மயூரசந்தேஸய (சிங்கள பழம் நூல்)
அகம்படியினர் போர்ப்படையில் இருந்ததோடு அரசர்களின் அரண்மனைகள்,கோட்டைகள் மற்றும் புத்த ஆலயங்களைப் பாதுக்காத்தனர்.
அவ்வகையில் புத்தரின் புனிதப்பல் இருந்த புகழ்பெற்ற புத்த ஆலயத்தை அகம்படியினர் பாதுகாத்தனர்
ஆதாரம்: அகம்படி உம்பிழ அயித்தன் கல்வெட்டு( இலங்கை-ஹிங்குறாக்கொடை) -காலம் கி.பி 1150
பலகாலம் தமிழகத்தை விட்டு இலங்கையில் தங்கியிருந்த அகம்படியினர் அங்கிருந்த பெண்களை மணந்து கொண்டு புதிய சாதியை உருவாக்கினர்.
அகம்படியினர் பலர் புத்த மத்தத்தையும் தழுவினர்.அகம்படியினருக்கும் இலங்கையில் உள்ள பெண்களுக்கும் பிறந்தவர்கள் புத்த மதத்தினராகவே வளர்ந்தனர்!
தமிழ்நாட்டில் வாழந்த அகம்படியினர் பின்னாட்களில் வேளாண்மையில் கவனம் செழுத்த ஆரம்பித்த போது தங்களுடைய அங்கப்போர்க்கலை பயிற்சியை முற்றிலும் மறந்து போயினர்.
அதே வேளையில் அகம்படியினர் தங்கள் தற்காப்புக்கலையை சேரநாட்டில் களரிப்பயிற்று என்ற பெயரிலும் இலங்கையில் அங்கம்போரா என்ற பெயரிலும் தொடர்ந்து வளர்த்தனர்.
துரதிஷ்டவசமாக சேர நாடு ,கேரளமாகி தாய்தமிழ்நாட்டில் இருந்து தனது அடையாளங்களை அறுத்துக் கொண்டது.இலங்கை அகம்படியார்களும் புத்தமதத்தில் இணைந்து தனிச்சாதியிலும் கலந்தனர்.
இன்று இவர்கள் இலங்கையில் ( அகம்போடா,ஹேவபொனெ என்ற சாதியின் பெயரால் அறியப்படுகிறார்கள்- இலங்கையில் இவர்கள் சத்திரிய வர்ணத்தவர்களாக அறியப்படுகிறார்கள்)
இலங்கையில் அங்கம்போரா தற்காப்புக்கலை தொடர்ந்து வளர்ந்தது.அங்கப் போர்முறை அதிநுட்பமானது என்பதால் பெளத்த சங்கங்கள் போன்ற தீவிரமான கட்டுப்பாடு மிக்க நிறுவனங்களால் மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
இலங்கையில் உள்ள பெளத்தர்களிடையே அங்கமன உனம்புவா, கெஹல் பண்ணா, கல்கோடா போன்ற சில குடும்பத்தவரிடம் மட்டும் அங்கப்போர் மரபுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது!
அங்கமன உனம்புவா, கெஹல் பண்ணா, கல்கோடா போன்ற குடும்பங்கள் இன்றும் தங்களை அகம்படி வழியினர் என்றே அழைத்துக்கொள்கின்றனர்.அங்கமன உனம்புவா என்ற பெயரில் உள்ள அங்கமன என்பதே அகம்படி என்ற தமிழ்ச் சொல்லின் சிங்கள மொழியின் திரிந்த வடிவம் ஆகும்.
அங்கம்போரா(அங்கப்போர்) இலங்கையில் தொன்றுதொட்ட தற்காப்புக்கலை (30 ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாறு) என்று பின்னால் எழுதப்பட்ட புனைக்கருத்துக்கள் கூறினாலும்.அங்க
ம்போரா பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் 12ம் நூற்றாண்டில்(இலங்கையில் அகம்படியினரின் வருகைப்பின்பே ) கிடைக்கின்றன.
மேலும் அங்கம்போரா இன்று சிங்களத் தற்காப்புக்கலை என்று அறியப்பட்டாலும் அது இலங்கையில் இருந்த அகம்படியார்களால் உருவாக்கப்பட்டத
ென்பதை சிங்களர்களே மறுக்கவில்லை.
அங்கம்போரா -பழந்தமிழ்குடியினரான அகம்படியார்களால் உருவாக்கப்பட்ட தற்காப்புக்கலை என்பதை சிங்கள வரலாறு கட்டியம் கூறுகிறது!
அங்கம்போரா-பழந்தமிழரின் தற்காப்புக்கலை சிங்களர் வசம் சென்றது காலத்தின் கோலம்!



சோழ மண்டல அகமுடையார்கள்

சோழ மண்டல அகமுடையார் பிரிவுகள் மற்றும் பட்டங்கள்:



1.கோட்டைபற்று அகமுடையார் - கீழ் தஞ்சை முழுக்க பரவி உள்ளனர்.
பட்டம் - தேவர் மற்றும் பிள்ளை
2.இரும்புதலை அகமுடையார் - தஞ்சாவூர்
பட்டம் - பிள்ளை
3.புண்ணியரசு நாட்டு அகமுடையார் - பட்டுக்கோட்டை
பட்டம் - தேவர்
4.பதினோரு நாட்டார் அகமுடையார் - பேராவூரணி
பட்டம் - தேவர், நாட்டார் மற்றும் சேர்வை
5.ராஜவம்சத்து அகமுடையார் - முத்துப்பேட்டை முதல் வேதாரண்யம்
பட்டம் - தேவர்
6.குருகுலத்தேவர் - வேதாரண்யம்
பட்டம் - தேவர்
தகவல் உதவி: மன்னார்குடி சிவா அகமுடையார்

Saturday, September 10

அகப்படை

படையை அதன் நிலை அடிப்படையில் இருபடைகளாக பிரிக்கலாம்
*அகப்படை
*மறப்படை


 
அகப்படை என்றால் மூலப்படை, அந்தரங்கமான சேனை அல்லது அணுக்கபடை.ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர்.
மூலப்படை என்பதற்கு தொல்படை என பொருளுண்டு
இவற்றில் தொல்படையான மூலப்படையே சிறப்பானது.
வள்ளுவர் மூலப்படையை தொல்படை என தனது குறளில் "
உலைவு இடத்து ஊறுஅஞ்சா வன்கண் தாலைவுஇடத்துக்
தொல்படைக்கு அல்லால் அரிது" குறிக்கிறார்.
விளக்கம்:போரில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டு பெருமையுடைய படைகளுக்கு அல்லாமல் முடியாது.

தினமும் பயிற்சி செய்து நீண்ட காலமாக நிலைத்திருக்கும் படை அகப்படை.

மூலப்படை என்பது அரசரின் முன்னோரை தொடங்கி வரும் சேனை.இப்படையின் சிறப்பானது அரசன் மீது கொண்டுள்ள அன்பும் போரில் வலிமை குன்றினாலும் பயந்து விலகாத வீரமுமாகும்.

இராமாயணத்தில் மூலபல வதைபடலத்தில் இந்திரஜித்தின் இறப்பிற்கு பின் தாங்கள் போர்புரிய செல்வதாக மூலப்படயினர் கூறினர் இராவணன் இராமனையும் இலக்குவனையும் கொல்லும் படி கேட்டுகொள்கிறான்.மூலப்படை வருவதை கண்டு வானரபடை ஓட்டம் பிடித்தனர்.ஜாம்பவான் பயந்து ஓடியதற்கு அவமானபடுகிறார்.வீபஷணன் மூலப்படை பற்றியும் அதன் வலிமை பற்றியும் இராமனுக்கு சொல்கிறான்.இந்த அதிசய போரை சிவபெருமான், பிரம்மன் மற்றும் தேவர்கள் பார்க்கிறார்கள்.மூலப்படையை இராமன் அழித்ததை உலகமே கண்டு வியந்தது என கம்பர் கூறுகிறார்.

பரிமேலழகர் "மூலப்படை அறுவகை படையுள்ளும் சிறப்புடையது" என கூறுகிறார்.

யது குல மருதரசர்


மருது பாண்டியர்களின் வீரம் மற்றும் கொடை தன்மை பற்றி தெரிந்த அளவுக்கு அவர்களுடைய தமிழ் பற்றை பற்றி பலர் அறியவில்லை புலவர் பலர் கூடி அமர்ந்து தமிழ் வளர்க்க தமிழ் சங்கம் நிறுவியிருந்தனர்.வடமொழியில் அமைந்த வானர வீர புராணத்தை தமிழ் மொழியில் மாற்ற உதவினர்.இப்புராணம் தலபுராணமாக மானாமதுரையில் இருக்கும் சிவதலத்திற்கு பாடபெற்றது. அப்புராணத்தை தமிழ் மொழியில் மாற்றி அமைத்த புலவர் கடவுளை பற்றிய பாடலுக்கு பின் மருதுவை பற்றி கூறுகிறார் அதில் பகைவர்க்குச் சிங்கத்தை போன்றவன்(அடையலர் கேசரி) கல்வி மற்றும் செல்வம் உடையவன் காளையார் கோயிலில் கோபுரம் மற்றும் தேர் செய்தவன் உடையார் வேளின் புதல்வன் விசுவை மருது அரசர் உதவ வானரவீர புராணத்தை வடமொழியிலிருந்து தமிழ்மொழியில் எழுதியது மதுரை தெய்வசிகாமணியின் புதல்வர் என தம்மை பற்றி ஆசிரியர் கூறுகிறார். அடுத்து புராணத்தின் இறுதி பாடலில் மானாமதுரை வாழ்க(இந்து நன்நகரம்) வீற்றிருக்கும் இறைவன் இறைவியான சோமேசர் ஆனந்தவள்ளி வாழ்க என கூறி மருதரசரை பற்றி கற்பகம் போன்ற கொடைக்கை உடைய யது குலத்தை சேர்ந்த மருதரசர் அவரின் மைந்தர்கள் கிளைகள் சார்ந்தோர் வாழ்க வாழ்க என புராணத்தை நிறைவு செய்கிறார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...