This blog is all about THE AGAMUDAYAR HISTORY. THANKS to BROTHERS BALAMURUGAN AGAMUDAYAR, IMALATHITHAN AGAMUDAYAR, SAKTHI AGAMUDAYAR & SIVA AGAMUDAYAR for the infos.
Sunday, July 17
Thursday, July 14
இராமநாதபுரமும் அகமுடையார்களும்
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் இருக்கும் மருதிருவர் சிலை |
ராமேஸ்வரத்தில் உள்ள மருதராசர் சிலை |
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் மருது பாண்டியர்களும்
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பெரிய மருது சிலை |
மதுரை மீனாட்சி அம்மனின் மீது அளவில்லா பக்தி கொண்டவர்களாக மருது பாண்டியர்கள் திகழ்ந்தனர்.மதுரை மீனாட்சி திருக்கோயிலில் சேர்வைக்காரர் மண்டபம் கட்டினார்கள்.திருகல்யாண மண்டபத்தையும் பழுது நீக்கி கட்டினார்.மருது குடும்பத்தினரின் சிலைகள் இம்மண்டபத்தில் உள்ளது.அன்னை மீனாட்சியின் சன்னதியில் 1008 திருவிளக்குகளை கொண்ட இரு திருவாட்சி விளக்குகளை அமைத்து என்றென்றும் ஒளியூட்டி நிற்குமாறு செய்தனர்.இந்த தீபங்களுக்கு நெய் வார்க்க ஆவியூர் என்ற கிராமத்தை மானியமாக விட்டனர்.அன்னையின் பூசைக்காக உப்பிலிக்குண்டு,கடம்பங்குளம்,சீகனேந்தல்,மாங்குளம்,மங்கையேந்தல்,புவனேந்தல் முதலிய கிராமங்களை மானியமாக விட்டனர்.
Wednesday, December 16
பாண்டிய நாட்டு ராஜகுல அகமுடையார்
பாண்டிய நாட்டின் தலை நகரம் மதுரை , மதுரை மாவட்டத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.அவர்கள்,
• கீழமண்டு அகமுடையார்
• மேலமண்டு அகமுடையார்
மேல மண்டு 33 கிராமங்கள் அடங்கியதாகும்
1. வெயிலாம்பட்டி
2. மங்கல்ரேவ்
3. வீரப்பட்டி
4. வீராளம்பட்டி
5. சின்ன பூலாம்பட்டி
6. கோட்டைப்பட்டி
7. சேடப்பட்டி
8. சல்லுப்பபட்டி
9. தொட்டணம் பட்டி
10. அப்பக்கரை
11. தொட்டிய பட்டி
12. அலப்பலச்சேரி
13. கரிகாலம் பட்டி
14. கண்டுகுளம்
15. திருமாணிக்கம்
16. செம்பட்டி
17. பாப்பு நாயக்கன் பட்டி
18. சங்கரலிபுரம்
19. பழையூர்
20. அல்லிகுண்டம்
21. சின்ன கட்டளை
22. பூலாங்குளம்
23. பெரிய மீனாட்சி புரம்
24. துள்ளுக்குட்டி நாயக்கனூர்
25. வாக்குளம்
26. வண்ணாங்குளம்
27. வண்டாடுபட்டி
28. வண்ணம்பட்டி
29. குருவப்பன் நாயகன்பட்டி
30. நல்லமரம்
31. நாட்டணி பட்டி
32. கன்பம்
33. சாத்தங்குடி
ஆகிய 33 கிராமங்கள் மேலமண்டு அகமுடையார் கிராமங்கள் ஆகும்
கீழமண்டு :
மதுரை-லிருந்து விருதுநகர் செல்லும் இருப்பு பாதைகளுக்கு இடையே உள்ளது திருமங்கலம் இதன் கிழக்கே உள்ள 48 கிராமங்களும் கீழமண்டு என்று அழைக்கபடுகின்றது.
1. மருதங்குடி
2. மாந்தோப்பு
3. அழகிய நல்லூர்
4. ஆவல் சூரம்பட்டி
5. அரசம்பட்டி
6. சென்னம் பட்டி
7. குராயூர்
8. கொக்குளம்
9. திருமால்
10. கூடக்கோவில்
11. கொம்பாடி
12. உப்பிலிக்குண்டு
13. உலகாணி
14. மொச்சிக்குளம்
15. மைக்குடி
16. எட்நாளி
17. விருசங்குளம்
18. ஆலங்குளம்
19. கல்லுபட்டி
20. வெப்பன்ங்குளம்
21. கல்லணை
22. பாறைக்குளம்
23. வலையங்குளம்
24. வீரப்பெருமாள் கோவில்
25. கிருஷ்ணாபுரம்
26. புதூர்
27. தும்பக்குளம்
28. கடமாங்குளம்
29. சீகனேந்தல்
30. மாங்களம்
31. மங்கை ஏந்தல்
32. பூவனேந்தல்
33. இலுப்பகுளம்
34. ஆவீயூர்
சில கிராமங்கள் விடுபட்டுள்ளது உட்பட மொத்தம் 48 கிராமங்களும் கீழமன்டாகும்.
நன்றி ஜெ.பாலசந்தர்
நன்றி ஜெ.பாலசந்தர்
Tuesday, December 15
கோவில் திருப்பணித் தென்றல் கம்பரன்பர் வே.இராஜீ சேர்வை
கம்பரன்பர் வே.இராஜீ சேர்வை அவர்கள் தன் வாழ்நாளை இறைத் தொண்டிலேயே கழித்தவர்.இதனால் இவர் திருமங்கலத்தின் கோவில் திருப்பணித் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.
இன்று திருமங்கலத்தில் வைணவத்தின் சிறப்பு மிக்க அடையாளமாக இராஜாஜி தெருவில் கம்பீரமாக அமைந்திருக்கும் பெருமாள் கோவில் இவரின் பெரு முயற்சியால் உருவானதே ஆகும். இன்று கோவில் இருக்கும் இடமும் ,கோவிலின் முன்பு(கோவிலின் எதிரே) பேருந்து நிலையம் செல்லும் பாதையில் இருக்கும் பரந்த இடமும் இவர் காலத்தில் கோவிலுக்காகப் பெறப்பட்டதே.
இதே போல் சைவ நெறி தழைக்க திருமங்கலம் அரசு மருத்துமனை எதிரில் ஈசனின் வடிவமான “மூனீஸ்வரர்” ஆலயத்தை எழுப்பினார்.இன்று சிறிய இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் அந்நாட்களில் விரிவான இடத்தில் 20க்கும் மேற்பட்ட சிலைகளுடன் வெகு பிரசித்தமாக அமைந்திருந்தது.
அதுமட்டுமல்ல திருமங்கலம் புளியங்குளம் கிராமத்தில் (பி.கே.என் கல்லூரி செல்லும் பாதையில்) “செந்திலாண்டவர் ஆசிரமம்” ஒன்றை நிறுவி அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.மேலும் ஆறுபடை முருகனுக்கு தனி சன்னதி அமைக்க முயன்றார்( இவர் இறந்ததால் கோவில் கட்டிடங்கள் பாதியில் இருப்பதும்,ஆறுபடை முருகன் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெறாது இருப்பதும் இன்றைய நிலை)
ஓவ்வொரு திருப்பணிக்குப் பின்பும் கடுமையான உழைப்பு அடங்கியிருந்தது. திருப்பணிக்காக ஒருவரை ஒருமுறை அல்ல ,பலமுறை சந்தித்து ,இந்து தர்மங்களை எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்து பின்னர் தொடர்ந்த முயற்சியினால் இந்தக் கோவில்கள் உருப்பெற்றன.
இறைப்பணி மட்டுமின்றி,இலக்கிய பணியிலும் ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.இலக்கியப் பேரவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் இறைவணக்கத்தோடு ஆரம்பிப்பார்.இவர் இலக்கியப்பணியை பாராட்டி 1981ம் வருடம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்ட கம்பன் கழகத்தார் இவருக்கு “கம்பரன்பர்” என்ற பட்டத்தை வழங்கினர்
மேலும் பல ஆலயங்கள் திருமங்கலத்தில் பின்னாளில் இவரைப் பின்பற்றி உருவாக எடுத்துக்காட்டாகவும், பல தர்மப் பணிகளுக்கு ஊக்கமூட்டுபவராகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு இறைவனின் திருப்பணிகளில் திலைத்த இவர் 2006ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
நன்றி திருமங்கலம் இணையதளம்
நன்றி திருமங்கலம் இணையதளம்
Friday, December 11
மதுரை சித்திரை திருவிழாவும் அகமுடையார்கள் அறிந்து கொள்ளவேண்டிய செய்தியும்!
கங்கையிலும் புனிதமானது நூபுர கங்கை என ஆழ்வார்களால் பாடப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகருக்கு நடத்தப்படும் விழாக்களில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது; மதுரையின் பாரம்பரியத் திருவிழாவாகவும் போற்றப்படுகிறது. முன்னொரு காலத்தில் சுதபஸ் மகரிஷி நூபுர கங்கையில் தீர்த்தமாடி, அழகர் சுந்தரராஜ பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தார். அந்த சம யம் அங்கு வந்த துர்வாச முனிவரை அவர் கவனிக்க வில்லை. அதனால் துர்வாசர் கோபம் கொண்டு, ‘மண்டூக பவ’ என்று சாபமிட்டு விடுகிறார்.
ஒரு தவளையாகப் போகும்படி தன்னை சபித்த துர்வாசரிடம், சுதபஸ் மகரிஷி சாப விமோசனம் கோரினார். துர்வாசர் அறிவுறுத்தியபடி மதுரை வைகை நதிக் கரையில் சுதபஸ் தவம் இயற்றினார். சித்திரை மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து, சுதபஸ் மகரி ஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இவ்விழா துவக்கப்பட்டது.
சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாளான ஏப்ரல் 26 அன்று பெருமாள் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வருகிறார். அன்று பகல் 1 மணி அளவில் தங்கக் கருட வாகனத்தில் அலங்கார பூஷிதராக, சுதபஸ் மகரிஷிக்கு (மண்டூக முனிவர்) சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். அதன் பின்னர், கருட வாகனத்தில் வண்டியூர் அனுமார் கோயிலுக்குச் சென்று பக்தர் களின் காணிக்கைகளை ஏற்பார், பெருமாள். இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால்வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.இத் தேனூர் கிராமமானது அகமுடையார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக ,பாரம்பரியமாக வசித்து வரும் கிராமம் ஆகும்.
திருமலை நாயக்கர் ம துரையை ஆண்டபோது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினார். இவ்வாறு காலம் காலமாக தேனூர் கிராமத்தில் நடந்து வந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை மதுரைக்கு மாற்றிய போது,அதற்க்கு பிரதிபலனாக மதுரையில் தேனூர் மண்டபத்தை எழுப்பி,தேனூர் கிராம மக்களுக்கு மரியாதையும் செய்யும் உரிமையை செப்புப் பட்டயமாக எழுதித் தந்தார்.
மேலும் சிறப்பாக மற்ற மண்டபங்களில் அழகர் பெருமாள் எழுந்தருளும் போது,மண்டபத்தின் உரிமை உடையவர்களால் கோவிலுக்கு குறிப்பிட்ட பணம் செழுத்த வேண்டும்,ஆனால் தேனூர் மண்டபத்தில் ஸ்வாமி இறங்குவதற்க்கு இறைவனே பணத்தை தேனூர் கிராம மக்களுக்கு அளித்து வருவது நடைமுறையாகி அது இன்று வரை தொடர்கிறது.
கூடுதல் செய்தி:
மாவலி வானதிராயர் இவரே மதுரைப் பாண்டியர்களை வென்றவர். இன்றைய அழகர்கோவிலை நவினப்படுத்திக் கட்டியவர்,கோட்டையை எழுப்பியவர். இவர் தம் கல்வெட்டுகளில் தம்மை மாவலி அகம்படிய வானாதிராயன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
மாவலி வானதிராயர் இவரே மதுரைப் பாண்டியர்களை வென்றவர். இன்றைய அழகர்கோவிலை நவினப்படுத்திக் கட்டியவர்,கோட்டையை எழுப்பியவர். இவர் தம் கல்வெட்டுகளில் தம்மை மாவலி அகம்படிய வானாதிராயன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.
Subscribe to:
Posts (Atom)
Featured post
மலயா கணபதி
மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...
-
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அ...
-
கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் ...
-
பாண்டிய நாட்டின் தலை நகரம் மதுரை , மதுரை மாவட்டத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.அவர்கள், • கீழமண்டு அகமுடையார் • மேலமண்டு அகமுடையார்...