Sunday, July 17

அகமுடையார்?

அகமுடையார்கள் பற்றி அகமுடையார் அரண் நிறுவனரும் அகமுடையர்களை ஒருங்கிணைத்த பெருமைக்குரிய பாலமுருகன் அகமுடையார் அவர்களின் கருத்து

Thursday, July 14

முக்குலத்தோர் மற்றும் முதலியார் அரசியல் செய்யும் அகமுடையார்கள்

முக்குலத்தோர் அரசியல் செய்யும் அகமுடையார்கள்:

சேதுராமன் - அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர்
 


கருணாஸ் - முக்குலத்தோர் புலி படை தலைவர் 



முதலியார் அரசியல் செய்யும் அகமுடையார்:

 ஏ.சி.சண்முகம் - புதிய நீதி கட்சி நிறுவனர்

 

 

இராமநாதபுரமும் அகமுடையார்களும்

 

ராமநாதபுரம் மாவட்டம்  வாலாந்தரவையில் இருக்கும் மருதிருவர் சிலை

தமிழகம் முழுவதும் அகமுடையார் இனத்தினர் வசித்து வருகின்றனர் பெரும்பாண்மையாக வசித்து வரும் இடங்களில் ராமநாதபுரமும் ஒன்று.ராமநாதபுரம்பாண்டியர்கள்,பல்லவர்கள்,சோழர்கள்,வாணதிராயர்கள்,நாயக்கர்கள்,சேதுபதிகள்,நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் என பலரது ஆளுகைக்குட்பட்டிருந்தது.அகமுடையார்கள் இப்பகுதியில் பூர்விகமாக பன்நெடுங்காலமாக வாழந்து வருகின்றனர்.கி.பி. 1628இல் கூத்தன் சேதுபதி கோயில் யானை மீதுஅமர்ந்து நகர்வலம் வந்தபோது தமது வலிமையை நிருபித்துக் காட்ட மன்னர் அமர்ந்து இருந்த யானையின் வாலைப் பிடித்து யானை மேலும் நகரவிடாமல் நிறுத்திவிட்டார் முத்து விஜயன் சேர்வை அன்பளிப்புகள் வழங்கி அவரைப் பாராட்டிய சேது மன்னர் அவருக்கு நாள்தோறும் கோயிலில் இருந்து உணவு வழங்க உத்திரவிட்டார்.இந்த வீரச்செயல் சிற்பமாக ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ளது.சேதுபதிகளின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாகவும் அமைச்சர்களாகவும் அகமுடையார்கள் விளங்கினர்.சேதுபதிகளுக்கும் அகமுடையர்களுக்கும் மோதல்களும் நிகழ்ந்துள்ளன இதனால் அகமுடையார்கள் வேறு இடங்களுக்குகுடிபெயர்ந்துள்ளனர்.படைவீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக குடிபெயரும் போது ராமநாதபுரம் என தங்கள் ஊரின் பெயரை புதிதாக வந்த இடத்திற்கு சூட்டி உள்ளனர்.தமிழகத்தில் கோவை,தஞ்சை போன்ற பகுதிகளில் ராமநாதபுரம் உள்ளது மேலும் மலையாவிலும் உள்ளது.சொக்கப்பன் சேர்வைக்காரர்,கங்கையாடி பிள்ளை,பாண்டியூர் பெருமாள் சேர்வைக்காரர்,வைரவன் சேர்வைக்காரர்,ரெகுநாத காங்கேய சேர்வைக்காரர்,வெள்ளையன் சேர்வைக்காரர்,வணங்காமுடி பழனியப்பன் சேர்வை,மருது பாண்டியர்கள் மற்றும் முத்துஇருளப்ப பிள்ளை என அகமுடையார் குலத்திலே ராமநாதபுரத்தில் உதித்த சிறப்புவாய்ந்தவர்கள் பலர்.பாம்பன் ஸ்வாமிகளும் இம்மண்ணிலே அவதரித்தவரே.வைரவன் சேர்வை ரணபலி முருகன் கோயில் பெருவயலில் எழுப்பியுள்ளார்.வெள்ளையன் சேர்வை மிகுந்த போர் திறன் பெற்றிருந்தார் நாயக்கர்களும் மறவர்களும் அஞ்சும் அளவிற்கு வலிமையானவராக இருந்தார்.மதுரை கோட்டையை கைப்பற்ற மைசூர் அரசரின் பிரதிநிதியாக வந்த தளபதி கோப்புடன் சண்டையிட்டு வெற்றி பெற்று நாயக்க மன்னருக்கு சேதுபதியின் வேண்டுதலுக்கு இணங்க முடிசூட்டி வைத்தார்.வாணதிராயர்,பல்லவராயர்களுக்கு பிறகு அகமுடையார் இனத்தில் தோன்றிய ராஜதந்திரி என கூறலாம்.திருநெல்வேலி பாளையக்காரர்கள் மீது படையெடுத்து பலரை கைது செய்தார் இதனை விரும்பாத சேதுபதி சேர்வையை ராமநாதபுரத்திற்கு திரும்புமாறு கட்டளையிட்டார்.இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி சேதுபதியை மாற்றிவிட்டு வேறொரு சேதுபதிக்கு முடி சூட்டி வைத்தார்.தென் தமிழ்நாட்டு மக்களின் பஞ்சத்தைப் போக்க முல்லைப் பெரியார் அணைத் திட்டத்தை முதலில் வடிவமைத்தவர் பிரதானி முத்துஇருளப்ப பிள்ளையே.இவர் காலத்தில் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டது சொக்கத்தான் மண்டபம் இவர் கட்டியதே.இவருடைய திருஉருவ சிலையும் கோயிலில் உள்ளது.இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.இவர்மீது புலவர்கள் பலர் செய்யுட்கள் இயற்றியுள்ளனர்.பெரிய சரவணக் கவிராயர் என்பவர் இவர்மீது ‘காதல்’ பிரபந்தம் இயற்றியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள மருதராசர் சிலை


ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை(2காங்கிரஸ் 1சுயேட்சை) சண்முக ராஜேஸ்வர சேதுபதி வெற்றி பெற்றுள்ளார்.இதற்கு பின் தங்கப்பன்(திமுக),சத்தியேந்திரன்(திமுக),T.இராமசாமி(தொடர்ச்சியாக 3 முறை அதிமுக),M.S.K.இராஜேந்திரன்(திமுக) என 6 முறை அகமுடையர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.பின்னர் தென்னவன்(அதிமுக, இசை வேளாளர்)நான்கு முறை இஸ்லாமியர்களும் தற்போது மணிகண்டன்(அதிமுக, மறவர்) வெற்றிபெற்றுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியை பொறுத்த வரை ஒரு முறை தவிர அனைத்து முறையும் அகமுடையர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் மருது பாண்டியர்களும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பெரிய மருது சிலை


மதுரை மீனாட்சி அம்மனின் மீது அளவில்லா பக்தி கொண்டவர்களாக மருது பாண்டியர்கள் திகழ்ந்தனர்.மதுரை மீனாட்சி திருக்கோயிலில் சேர்வைக்காரர் மண்டபம் கட்டினார்கள்.திருகல்யாண மண்டபத்தையும் பழுது நீக்கி கட்டினார்.மருது குடும்பத்தினரின் சிலைகள் இம்மண்டபத்தில் உள்ளது.அன்னை மீனாட்சியின் சன்னதியில் 1008 திருவிளக்குகளை கொண்ட இரு திருவாட்சி விளக்குகளை அமைத்து என்றென்றும் ஒளியூட்டி நிற்குமாறு செய்தனர்.இந்த தீபங்களுக்கு நெய் வார்க்க ஆவியூர் என்ற கிராமத்தை மானியமாக விட்டனர்.அன்னையின் பூசைக்காக உப்பிலிக்குண்டு,கடம்பங்குளம்,சீகனேந்தல்,மாங்குளம்,மங்கையேந்தல்,புவனேந்தல் முதலிய கிராமங்களை மானியமாக விட்டனர்.

Wednesday, December 16

பாண்டிய நாட்டு ராஜகுல அகமுடையார்

பாண்டிய நாட்டின் தலை நகரம் மதுரை , மதுரை மாவட்டத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.அவர்கள்,
• கீழமண்டு அகமுடையார் 
• மேலமண்டு அகமுடையார்

மேல மண்டு 33 கிராமங்கள் அடங்கியதாகும்

1. வெயிலாம்பட்டி
2. மங்கல்ரேவ்
3. வீரப்பட்டி
4. வீராளம்பட்டி
5. சின்ன பூலாம்பட்டி
6. கோட்டைப்பட்டி
7. சேடப்பட்டி
8. சல்லுப்பபட்டி
9. தொட்டணம் பட்டி
10. அப்பக்கரை
11. தொட்டிய பட்டி
12. அலப்பலச்சேரி
13. கரிகாலம் பட்டி
14. கண்டுகுளம்
15. திருமாணிக்கம்
16. செம்பட்டி
17. பாப்பு நாயக்கன் பட்டி
18. சங்கரலிபுரம்
19. பழையூர்
20. அல்லிகுண்டம்
21. சின்ன கட்டளை
22. பூலாங்குளம்
23. பெரிய மீனாட்சி புரம்
24. துள்ளுக்குட்டி நாயக்கனூர்
25. வாக்குளம்
26. வண்ணாங்குளம்
27. வண்டாடுபட்டி
28. வண்ணம்பட்டி
29. குருவப்பன் நாயகன்பட்டி
30. நல்லமரம்
31. நாட்டணி பட்டி
32. கன்பம்
33. சாத்தங்குடி
ஆகிய 33 கிராமங்கள் மேலமண்டு அகமுடையார் கிராமங்கள் ஆகும்

கீழமண்டு  :

மதுரை-லிருந்து விருதுநகர் செல்லும் இருப்பு பாதைகளுக்கு இடையே உள்ளது திருமங்கலம் இதன் கிழக்கே உள்ள 48 கிராமங்களும் கீழமண்டு என்று அழைக்கபடுகின்றது.

1. மருதங்குடி
2. மாந்தோப்பு
3. அழகிய நல்லூர்
4. ஆவல் சூரம்பட்டி
5. அரசம்பட்டி
6. சென்னம் பட்டி
7. குராயூர்
8. கொக்குளம்
9. திருமால்
10. கூடக்கோவில்
11. கொம்பாடி
12. உப்பிலிக்குண்டு
13. உலகாணி
14. மொச்சிக்குளம்
15. மைக்குடி
16. எட்நாளி
17. விருசங்குளம்
18. ஆலங்குளம்
19. கல்லுபட்டி
20. வெப்பன்ங்குளம்
21. கல்லணை
22. பாறைக்குளம்
23. வலையங்குளம்
24. வீரப்பெருமாள் கோவில்
25. கிருஷ்ணாபுரம்
26. புதூர்
27. தும்பக்குளம்
28. கடமாங்குளம்
29. சீகனேந்தல்
30. மாங்களம்
31. மங்கை ஏந்தல்
32. பூவனேந்தல்
33. இலுப்பகுளம்
34. ஆவீயூர்
சில கிராமங்கள் விடுபட்டுள்ளது உட்பட மொத்தம் 48 கிராமங்களும் கீழமன்டாகும்.

நன்றி ஜெ.பாலசந்தர் 

Tuesday, December 15

கோவில் திருப்பணித் தென்றல் கம்பரன்பர் வே.இராஜீ சேர்வை


கம்பரன்பர்  வே.இராஜீ சேர்வை அவர்கள் தன் வாழ்நாளை இறைத் தொண்டிலேயே கழித்தவர்.இதனால் இவர் திருமங்கலத்தின் கோவில் திருப்பணித் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.
இன்று திருமங்கலத்தில்  வைணவத்தின் சிறப்பு மிக்க அடையாளமாக இராஜாஜி தெருவில் கம்பீரமாக அமைந்திருக்கும் பெருமாள் கோவில் இவரின் பெரு முயற்சியால் உருவானதே ஆகும். இன்று கோவில் இருக்கும் இடமும் ,கோவிலின் முன்பு(கோவிலின் எதிரே) பேருந்து நிலையம் செல்லும் பாதையில் இருக்கும் பரந்த இடமும் இவர் காலத்தில் கோவிலுக்காகப் பெறப்பட்டதே.
இதே போல் சைவ நெறி தழைக்க திருமங்கலம் அரசு மருத்துமனை எதிரில் ஈசனின் வடிவமான “மூனீஸ்வரர்” ஆலயத்தை எழுப்பினார்.இன்று சிறிய இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் அந்நாட்களில் விரிவான இடத்தில் 20க்கும் மேற்பட்ட சிலைகளுடன் வெகு பிரசித்தமாக அமைந்திருந்தது.
அதுமட்டுமல்ல திருமங்கலம் புளியங்குளம் கிராமத்தில் (பி.கே.என் கல்லூரி செல்லும் பாதையில்) “செந்திலாண்டவர் ஆசிரமம்” ஒன்றை நிறுவி அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.மேலும் ஆறுபடை முருகனுக்கு தனி சன்னதி அமைக்க முயன்றார்(  இவர் இறந்ததால் கோவில் கட்டிடங்கள் பாதியில் இருப்பதும்,ஆறுபடை முருகன் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெறாது இருப்பதும் இன்றைய நிலை)
ஓவ்வொரு திருப்பணிக்குப் பின்பும் கடுமையான உழைப்பு அடங்கியிருந்தது. திருப்பணிக்காக  ஒருவரை ஒருமுறை அல்ல ,பலமுறை சந்தித்து ,இந்து தர்மங்களை எடுத்துக்கூறி  சம்மதிக்க வைத்து  பின்னர் தொடர்ந்த முயற்சியினால் இந்தக் கோவில்கள் உருப்பெற்றன.
இறைப்பணி மட்டுமின்றி,இலக்கிய பணியிலும் ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.இலக்கியப் பேரவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் இறைவணக்கத்தோடு ஆரம்பிப்பார்.இவர் இலக்கியப்பணியை பாராட்டி 1981ம் வருடம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்ட கம்பன் கழகத்தார் இவருக்கு “கம்பரன்பர்” என்ற பட்டத்தை வழங்கினர்
மேலும் பல ஆலயங்கள் திருமங்கலத்தில் பின்னாளில்  இவரைப் பின்பற்றி உருவாக எடுத்துக்காட்டாகவும், பல தர்மப் பணிகளுக்கு  ஊக்கமூட்டுபவராகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு இறைவனின் திருப்பணிகளில் திலைத்த இவர்  2006ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

நன்றி திருமங்கலம் இணையதளம்

Friday, December 11

மதுரை சித்திரை திருவிழாவும் அகமுடையார்கள் அறிந்து கொள்ளவேண்டிய செய்தியும்!

கங்கையிலும்  புனிதமானது நூபுர கங்கை என ஆழ்வார்களால் பாடப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகருக்கு நடத்தப்படும்  விழாக்களில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது; மதுரையின் பாரம்பரியத் திருவிழாவாகவும் போற்றப்படுகிறது. முன்னொரு காலத்தில் சுதபஸ் மகரிஷி நூபுர கங்கையில் தீர்த்தமாடி, அழகர் சுந்தரராஜ பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தார். அந்த சம யம் அங்கு வந்த துர்வாச முனிவரை அவர் கவனிக்க வில்லை. அதனால் துர்வாசர் கோபம் கொண்டு, ‘மண்டூக பவ’ என்று சாபமிட்டு விடுகிறார்.
ஒரு  தவளையாகப் போகும்படி தன்னை சபித்த துர்வாசரிடம், சுதபஸ் மகரிஷி சாப விமோசனம் கோரினார். துர்வாசர் அறிவுறுத்தியபடி மதுரை வைகை  நதிக் கரையில் சுதபஸ் தவம் இயற்றினார். சித்திரை மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து, சுதபஸ் மகரி ஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இவ்விழா துவக்கப்பட்டது.
சித்திரைத் திருவிழாவின் ஆறாம்  நாளான ஏப்ரல் 26 அன்று பெருமாள் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வருகிறார். அன்று பகல் 1  மணி அளவில் தங்கக் கருட வாகனத்தில் அலங்கார பூஷிதராக, சுதபஸ் மகரிஷிக்கு (மண்டூக முனிவர்) சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். இந்நிகழ்ச்சியில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். அதன் பின்னர், கருட வாகனத்தில் வண்டியூர் அனுமார் கோயிலுக்குச் சென்று பக்தர் களின் காணிக்கைகளை ஏற்பார், பெருமாள். இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால்வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.இத் தேனூர் கிராமமானது அகமுடையார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக ,பாரம்பரியமாக வசித்து வரும் கிராமம் ஆகும்.
திருமலை நாயக்கர் ம துரையை ஆண்டபோது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை  மாதத்திற்கு மாற்றினார். இவ்வாறு காலம் காலமாக தேனூர் கிராமத்தில் நடந்து வந்த இந்த  வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை மதுரைக்கு மாற்றிய போது,அதற்க்கு பிரதிபலனாக மதுரையில் தேனூர் மண்டபத்தை எழுப்பி,தேனூர் கிராம மக்களுக்கு மரியாதையும் செய்யும் உரிமையை செப்புப் பட்டயமாக எழுதித் தந்தார்.
மேலும் சிறப்பாக மற்ற மண்டபங்களில் அழகர் பெருமாள் எழுந்தருளும் போது,மண்டபத்தின் உரிமை உடையவர்களால் கோவிலுக்கு குறிப்பிட்ட பணம் செழுத்த வேண்டும்,ஆனால் தேனூர் மண்டபத்தில் ஸ்வாமி இறங்குவதற்க்கு இறைவனே பணத்தை தேனூர் கிராம மக்களுக்கு அளித்து வருவது நடைமுறையாகி அது இன்று வரை தொடர்கிறது.

Thenur Mandapam
Thenur Mandapam
கூடுதல் செய்தி: 
மாவலி வானதிராயர் இவரே மதுரைப் பாண்டியர்களை வென்றவர். இன்றைய அழகர்கோவிலை நவினப்படுத்திக் கட்டியவர்,கோட்டையை எழுப்பியவர். இவர் தம் கல்வெட்டுகளில் தம்மை மாவலி அகம்படிய வானாதிராயன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...