Saturday, February 23

மருது பாண்டியர் பற்றி பாண்டித்துரை தேவரின் கவிதை

மருது பாண்டியர் காலத்தில் சாந்து புலவரால் இயற்றபட்ட மயூரகிரி புராணம் பின்னர் 1908ஆம் வருடம் பதிப்பித்து வெளியிட்டனர் இதற்கு நான்காம் தமிழ்சங்கம் அமைத்த பாண்டித்துரை தேவர் அவர்களின் சாற்றுக்கவி 


தமிழ்கூத்தன்

சிலம்பு வாத்தியார் ஓடாத்தூர் முருகேசன் - தன்டம்மாள் தம்பதியினருக்கு மகனாக ஓர் குக்கிராமத்தில் பிறந்து, மதுரை கோர்ட்ஸ் பஞ்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்தார். தமிழ் மீதுள்ள பற்றால் தொலைநிலைக்கல்வியாக பி.லிட் புலவர் பட்டம்பெற்று முனைவர் படிப்பை முடித்தார். இவர் கூடப்பிறந்த 4சகோதரர்களுக்கும் பொறுப்புள் அண்ணனாக நடந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். தமிழ்நாடு முற்போக்கு கவிஞர் பேரவை தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு பாராட்டு விழாநடத்தினார். தமிழகத்தில் இவரைத் தெரியாத கவிஞர்களே இல்லையென்னும் அளவிற்கு பிரபலமானவர்.



தேசிய விருதுபெற்ற கவிஞர்.வைரமுத்துவை அழைத்து திருப்பரங்குன்றத்தில்  பாராட்டு விழா நடத்தியவர்.1983 ஜுலை இனக்கலவரத்தின்போது ஈழத்தமிழர் மீதான இனக்கொலையை கண்டித்து திபகுவில் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். தீப்பந்த ஊர்வலம் நடத்தியவர்.திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பூட்டு போட்டு போராட்டம் நடத்தியவர். கவிஞர்.காசிஆனந்தன்,ஈழவேந்தன், மாவீரன்.மதுரை S.முத்து அவர்களை எங்கள் ஊருக்கு அழைத்து 83 காலகட்டத்தில் பட்டினிப்போராட்டம் நடத்தியவர்.



தமிழீழத்தேசியதலைவரின் ஆரம்பகால நண்பர். நம்பிக்கைக்குரிய தகவலாளியாக செயல்பட்டவர்.புலிகளின் திருநகர் முகாமுக்கு பொறுப்பாளாராக செயப்பிரகாஷ் அவர்களோடு செயல்பட்டவர். எங்கள் ஊரில் சாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களோடும் பழகிய பண்பாளர். தீவீர புலிகளின் ரசிகர்." சாகுறதுக்குள்ள ஈழத்த பார்க்கனும்"ன்னு என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.வாழ்க்கையில் பலருக்கு ஏணியாகவும்,முன்னத்தி ஏர் போல செயல்பட்டவர். கவிஞர்.மீரா அவர்களின் நெருங்கிய நண்பர். "காவல்கோட்டம்" நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற முன்னனி படைப்பாளி அண்ணன் சு.வெங்கடேசன் அவர்களை உருவாக்கிய,செதுக்கிய சிற்பியும் இவரே!

நன்றி: திலீபன் செந்தில் 

Thursday, February 21

பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்


இன்றைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள மேலைப்பெருமழை ஊரில் வசித்த வேலுத்தேவர் மற்றும் சிவகாமியம்மாள் ஆகியோருக்கு பிறந்த சோமசுந்தரனார் தமிழ் மொழியில் பெரும் புலமை உள்ளவராய் விளங்கினார். 




முதன் முதலில் உரை எழுதிய நூல் திருவாசகம் பின்னர் சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் சார்பில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பெருங்கதை உள்ளிட்ட ஏராளமான நூல்களுக்கு உரை எழுதினார். அவர் ஊரின் பெயரால் பெருமழைப்புலவர் என்றே அழைக்கப்பட்டார்.  சென்ற நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராய் விளங்கினார்.

Tuesday, June 5

சாத்தையா சேர்வை



இராமநாதபுரம் அகமுடையார் சங்க முன்னோடி சாத்தையா சேர்வை. பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை அவர்களின் தலைமையில் அகமுடையார் சங்கத்தின் துணைத்தலைவராக விழங்கியவர். இவரது வழித்தோன்றல்களே MSK சத்தியேந்திரன்(Ex MP Ex MLA) ராஜேந்திரன்(Ex MLA)


Friday, April 13

தேவன்

இலங்கையை சேர்ந்த தமிழ் அறிஞர் கதிர்வேல்பிள்ளை அகராதியில் தேவன் என்பதற்கு குறித்துள்ள பொருள்



அகம்படியன் அரசன் அருகன் ஈட்டிக்காரன் கடவுள் கொழுந்தன் பரிசைகாரன் மடையன்

சோழர் படை

சோழர்களின் முதன்மைப் படைப்பிரிவு அகம்படி நியாயம் எனும் படைப்பிரிவு.



இப்படையில் அங்கம் வகித்தவர்கள்

1.தெரிந்த வில்லிகள் (முறையாக பயிற்சி பெற்ற திறமையான வில் விடும் வீரர்கள்)

2.அகம்படி அணுக்க வில்லிகள் (அரசனை அணுக்கத்தில்  சூழ்ந்து கொண்டு பாதுகாக்கும் விற்படையினர்)

3.வேளைக்காரர் (போர்கலத்தில் பல்வேறு கருவிகளை கையாளும்  உதவி படைப்பிரிவினர்)

4.குதிரைச்சேவகர் (குதிரையில் சென்று போர்புரியும் வீரர்)

5.சேனாதிபதிகள் (படைப்பிரிவின் தளபதிகள்)

6.தண்டநாயகம் (முழுப்படைக்கும் முதன்மையான தளபதிகள்)

அகம்படி சேனை

இலங்கையில் அகம்படியர்கள் சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு இலங்கை அரசர்களின் படைப்பிரிவில் சேர்ந்து படையில் முக்கிய அங்கம் வகித்தனர்.மத்திய கால கல்வெட்டுகள் பல இதை உறுதிபடுத்துகின்றன மேலும் சோழர்களுக்கு எதிராக போர் புரியாமல் கலகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.12ஆம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் பராக்கிரம பாகு என்பவரின் காலத்திலிருந்து அகம்படியர் பற்றிய கல்வெட்டுகள் இலங்கையில் கிடைக்கிறது.



மகாவம்சத்தில் பராக்கிரபாகுவின் அப்பந்த மண்டலிக என்ற பாலி மொழி சொல் அகம்படி மண்டலிகர் (அகம்படி இனத்தின் முதல்வன் தமிழ்கல்வெட்டுகளில் வரும் அகம்படி முதலி) என்பதே.தம்பதெனியா, கம்பளை, கோட்டை ஆகிய இராசதானிகளின் அரசபடையில் அகம்படியர் இருந்தனர். நெட்டி மற்றும் மூலக என இரண்டு பிரிவாக அகம்படியர் இருந்துள்ளனர். இலங்கையின் தற்காப்பு கலையாக உள்ள அங்கம்போறா(தமிழில் அங்கவெட்டு) எனும் தற்காப்புக்கலை அகம்படியர்களின் தற்காப்புக்கலையே. மலையாள அகம்படியர்களான நாயர்கள் இன்றும் களரியாபட்டு என்னும் தற்காப்பு கலையை பயின்று வருகின்றன்ர.நாம் சிலம்பம் மட்டுமே பயின்று வருகிறோம்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...