Saturday, August 15

கணத்ததோர் அகமுடையார்


இக்கட்டுரையானது அகமுடையார்என்பதன் தோற்றுவாய் மற்றும் அகமுடையார்களுக்கு கனத்ததோர்என்ற பட்டம் கிடைத்த காரணத்தை ஆராய்கிறது.மேலும் இக்கட்டுரை பழந்தமிழ்நாட்டில் காவல் முறை தோன்றிய காரணத்தையும் கூறுகிறது. தொடக்ககாலத்திலே மனிதன் தன் உணவுத் தேவைக்காக மலைகளையும்(குறிஞ்சி) பின் காடுகளையும்(முல்லை) சார்ந்து இருந்தான்.நாளடைவில் அறிவு வளர்ச்சி ஏற்பட்டு,நாகரீகம் தோன்ற ஓரு சாரார் நீர்மிகுந்த இடங்களில் தங்கு பயிர் தொழில் ஈடுபட்டனர்.அவ்வாறு வேளாண்மைத் தொழிலை மேற்கொண்ட கூட்டத்தினர் அகவாழ்க்கையினர் (அகக்குடி-நாகரீகமடைந்த சமுதாயத்திற்குள் வாழ்ந்த குடியினர்) என்றும் தொடர்ந்து வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் புறவாழ்க்கையினர் (புறக்குடி ) என்று இரு பிரிவாக இருந்தனர்.நாளடைவில் புறவாழ்க்கையிலிர்ந்த வேடுவர் கூட்டத்தினருக்கு போதிய உணவுகள் கிடைக்காமல் போக அவர்கள் அகவாழ்க்கை வாழ்ந்த கூட்டத்தார் சேகரித்த வேளாண் பொருட்களை கவர்ந்து செல்ல ஆரம்பித்தனர். புறவாழ்க்கையினரின் கவர்தலில் இருந்து தாம் சேகரித்த தானியப்
பொருட்களையும் மற்றும் தம்முடன் உணவுக்காகவும்,துணைக்காகவும் வைத்திருந்த விலங்குகளை பாதுகாப்பதற்காக அகவாழ்வினர் தக்க காவல் முறையை ஏற்படுத்தினர். அந்தக் காவல் தொழிலாளர்களுக்கு அகவாழ்வினர் தமது தானியத்திலிருந்து சன்மானம் கொடுத்து வந்தனர்.நாளடைவில் வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக காவல் தொழிலாளர்கள் தமக்கு கப்பம் வசூலிக்கத் தலைப்பட்டனர், இவர்களை மேலாண்மை புரிந்தவர்களே முறையே அரசன், தளபதி ஆகினர்! இவர்களின் மேலாண்மையின் கீழே மக்கள் முதலில் பாதுகாவலை பெற்றனர்.இதுவே பிற்காலத்தில் நீதி/சட்டம் ஒழுங்கு மேலும் பல அரசின் செயல்பாடுகள் போன்றவை தோன்ற அடிப்படைஆயிற்று.இதுவே அரசியலின் ஆரம்பம் ஆகும்.அந்தக் காவல் தொழில் புரிந்து வந்த முறை கணஆட்சிமுறை என்றும் கூறப்பட்டது.கணஆட்சி ஏற்பட்ட பின் காவலர்கள் கணத்தார்கள் என்றும்,கணநாதர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

நன்றி www.agamudayarotrumai.com

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...