Wednesday, December 9

"கச்சத் தீவு” தமிழருக்குச் சொந்தம்!


அன்னைத் தமிழகத்தின் இராமேசுவரத்தில் இருந்து 17 கி.மீ. வடக்கில் ஆள் அரவம் இல்லாத உயரம் குறைவான குட்டித்தீவு கச்சத்தீவு.

முகம்மது அப்துல்காதர் மரைக்காயர் மற்றும் முத்து
சாமி பிள்ளை (அகமுடையார்) :

இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த எட்டு கிராமங்களையும், கச்சத்தீவு
உள்ளிட்ட 4 தீவுகளையும் சாயவேர் சேகரிக்க இராமநாதபுரம் கலெக்டர் எட்
வர்டு டர்னர் அவர்களிடம் இருந்து குத்தகைக்கு வாங்கினர். கீழக்கரையைச் சேர்ந்த சாயுபு மாப்பிள்ளை மரைக்காயர் மகன் முகம்மது அப் துல்காதர்
மரைக்காயரும், இராமநாதபுரம் இராமசாமிபிள்ளை மகன் முத்து சாமி பிள்ளையும் சேர்ந்து கூட்டாக வருடம் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு
குத்த கைக்கு 23.06.1880 இல் எடுத்து உள்ளனர்.கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளை
குத்தகைக்கு எடுத்த ஆவணம் இராமநாதபுரம் பதிவு அலுவலகத்தில் 02.07.1880 இல் பதிவாகியுள்ளது.

பின்னர் 1885ல் இராமநாதபுரம் சேதுபதி அரசரின் எஸ்டேட் மானேஜர் டி.ராஜாராமராயர் அவர்களிடமிருந்து இராமநாதபுரம் இராமசாமிபிள்ளை
மகன் முத்துசாமிபிள்ளை சாயவேர் சேகரிக்க கச்சத்தீவு அடங்கிய பகுதியை ஆண்டுக் குத்தகை 215 ரூபாய்க்கு பெற்றார்.

குத்தகைக்குட்பட்ட கிராமாந்தரங்களின் விபரம்:

இராமேஸ்வரம் உள்கடை உட்பட்ட கிராமம் - 1
பாம்பன் தங்கச்சி மடம் கிராமம் - 1
மண்டபம் கிராமம் - 1
மரைக்கான்பட்டினம் கிராமம் - 1
குஞ்சியா வலசை கிராமம் - 1
அருப்புக்காடு கிராமம் - 1
வேதாளை கிராமம் - 1
சாத்தன்கோன் வலசை கிராமம் - 1
ஆகக்கிராமங்கள் - 8

குத்துக்கால் தீவு - 1
முயல் தீவு - 1
மன்னாளித் தீவு - 1
கச்சத் தீவு - 1
ஆக தீவு - 4

கச்சத்தீவு தமிழர் தம் சொத்து என்பதற்கு யாரும் மறைக்க முடியாத, மறுக்க
முடியாத வரலாற்றுச் சான்றுகள் பத்திரப்பதிவுகள் தெள்ளத்தெளிவாக இராமநாதபுரம் பதிவு அலுவலகத்தில் காணக் கிடைக்கிறது.

நன்றிகள் கட்டுரையாளர் :- செ.திவான்
வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...