Thursday, July 13

MJF.லியோமுத்து



சுந்தரராஜன் சேர்வை

அகமுடையாரான தியாகி சுந்தரராஜன் சேர்வை அவர்களால் திறக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முதல் சிலை.இச்சிலை ஆங்கிலேயர் காலத்திலயே திறக்கப்பட்டது.



நேதாஜி அவர்களின் படையில் அகமுடையார்கள் பெருமளவில் இருந்தனர் .

எஸ்.ஆர்.நாதன்

சிங்கப்பூரின் முன்னாள் குடியரசு தலைவர் எஸ்.ஆர்.நாதன் அகமுடையார் இனத்தவர்.வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் துாதர் என பல உயரிய பதவிகளை சிங்கையில் வகித்தவர் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.சிங்கை மற்றும் மலேசிய பகுதிகளில் கோலோச்சிய தமிழர்கள் பெரும்பாலும் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர்கள்.

Sunday, July 2

மணலி கந்தசாமி

தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் கட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பனி ஆற்றியவர் மணலி சி.கந்தசாமி இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறிப்பினராகவும் தேர்ந்துதெடுக்க்ப்பட்டவர்.

Saturday, May 27

மதுரை மாவட்ட அகமுடையார் தொகுதிகள்

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை அகமுடையார் அனைத்து பகுதிகளிலும் பரவலாக வசித்து வருகின்றனர்.மதுரை மாநகராட்சியில் அகமுடையார்கள் மிக அதிகமாக உள்ளனர்.



மதுரை பத்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டது ஐந்து தொகுதிகளில் முதல் பெரும்பாண்மையாக அகமுடையார்கள் உள்ளனர்.

சோழவந்தான்(தனி)

சோழவந்தான் தனி தொகுதியாக உள்ளது.

1 வாடிப்பட்டி ஒன்றியம்
2 அலங்காநல்லூர் ஒன்றியம்
3 வடக்கு தாலுகா (சில பகுதிகள்) உள்ளடக்கியது பேரூராட்சிகள்:
1 சோழவந்தான்
2 வாடிப்பட்டி
3 அலங்காநல்லூர்
4 பாலமேடு
அகமுடையார் அதிகமுள்ள பேரூராட்சிகள்
1சோழவந்தான்
2 வாடிப்பட்டி
கணிசமாக உள்ள பேரூராட்சி
1பாலமேடு
அகமுடையார் அதிகமுள்ள கிராமங்கள்:
1முள்ளிப்பள்ளம்
2 தென்கரை
3 மன்னாடிமங்கலம்
4 இரும்பாடி
5 ரிஷபம்
6 நாச்சிகுளம்
7 மேலநாச்சிகுளம்
8 காடுபட்டி
9 கருப்பட்டி
10 கிருஷ்ணாபுரம்
11 பெருமாள்பட்டி
12 செம்மினிப்பட்டி
13 மேலக்கால்
14 தேனூர்
15 சமயநல்லூர்
16 சத்யமூர்த்தி நகர்
17 கள்ளிக்குடி
18 தோடனேரி
19 மூலக்குறிச்சி
20 தனிச்சியம்
21 வயலூர்
22 அரியூர்
23 பொதும்பு
24 அதலை
25 தண்டலை
26 புதுப்பட்டி
27 எர்ரம்பட்டி
28 வாவிடமருதூர்
29 மேட்டுப்பட்டி
30 அய்யூர்
31 நடுப்பட்டி
2 கணிசமாக உள்ள கிராமம்
1 நீரேத்தான்
2 அய்யங்கோட்டை
3 குருவித்துறை
4 மாத்தூர்
5 திருவேடகம்
6 முடுவார்பட்டி
7 தாதகவுண்டம்பட்டி
வாடிப்பட்டி வட்டாரத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளது


மதுரை வடக்கு தொகுதி:

மதுரை மாநகர பகுதி 8 முதல் 15 வார்டு பகுதிகளை கொண்டது.
இத்தொகுதியின் அனைத்து பகுதிகளிலும்
அகமுடையார்கள் மிக அடர்த்தியாக உள்ளனர்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1 நரிமேடு
2 பி.பி குளம்
3 சின்னசொக்கிகுளம்
4 மருதுபாண்டியர்நகர்
5 மீனாம்பாள்புரம்
6 செல்லூர்
7 அகிம்சாபுரம்
8 கட்டபொம்மன் நகர்
9 ஆழ்வார்புரம்
10 மதிச்சியம்
11 கே.கே நகர்
12 புதூர்
13 தல்லாகுளம்
14 லூர்துநகர்
15 கைலாசபுரம்
இப்பகுதிகள் அனைத்திலும் அகமுடையார்கள் பெரும்பாண்மை எண்ணிக்கையோடு வாழ்கின்றனர்

அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்
1 அண்ணாநகர்
2 சாத்தமங்கலம்
3 கோரிப்பாளையம்
4 செல்லூர்
5 கோமதிபுரம்
7 மேலமடை
8 ரிசர்வ்லைன்
இப்பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்
இத்தொகுதியில் 70000 வாக்காளர்களுக்கு மேல் அகமுடையார்கள் உள்ளனர்அதிகமானோர் சுயதொழில் செய்பவர்கள்.


மதுரை மேற்கு தொகுதி:

1,மதுரை மாநகர பகுதிகள்
2,தெற்கு தாலுகா(சில பகுதிகள்)
3,வடக்கு தாலுகா(சில பகுதிகள்) உள்ளடக்கியது
இத்தொகுதியின் நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்திலும் அகமுடையார்கள் பரவியுள்ளனர்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1 பழங்காநத்தம்
2 ஜெய்ஹிந்த்புரம்
3 பைக்காரா
4 சுப்ரமண்யபுரம்
5 நேரு நகர்
6 சோலையழகுபுரம்
7 வசந்தநகர்
8 ஆண்டாள்புரம்
9 முத்துப்பட்டி
10 கோச்சடை
11 துவரிமான்
12 விராட்டிப்பத்து
13 கொடிமங்கலம்
14 அச்சம்பத்து
15 ஜீவாநகர்
16 விளாங்குடி(பேரூர்)
17 பரவை (பேரூர்)
18 பெத்தானியாபுரம்
19 கோயில்பாப்பாங்குடி
20 கீழமாத்தூர்
21 எம்.கே புரம்
அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்
1 பொன்மேனி
2 காளவாசல்
3 கரிசகுளம்
4 பிபி சாவடி
5 அழகப்பன்நகர்
6 கூடல்நகர்
7 மாடக்குளம்
இத்தொகுதியில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்களுக்கு மேல் அகமுடையார்கள் உள்ளனர்.

திருமங்கலம் தொகுதி:



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
1 கள்ளிக்குடி ஒன்றியம்
2 திருமங்கலம் ஒன்றியம்
3 டி.கல்லுப்பட்டி ஒன்றியம்
4 திருமங்கலம் நகர்
5 பேரையூர் பேரூர்
திருமங்கலம் தொகுதியில் சுற்றியுள்ள அனைத்து கிராமத்திலும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 90 சதவீத கிராமங்களில் அகமுடையார் மிகப்பெரும்பான்மையான எண்ணிக்கையோடு உள்ளனர்
திருமங்கலம் நகராட்சியிலும் அகமுடையார் சமூகம் பெரும்பான்மை
இது தவிர திருமங்கலம் ஒன்றியம் கல்லுப்பட்டி ஒன்றியம் மற்றும் பேரையூர் பகுதியிலும் பரவலாக உள்ளனர்
இத்தொகுதியில் அகமுடையார்கள் 95000 வாக்காளர்களைக் கொண்டு வெற்றியை நிர்ணயிக்கும் சமூகமாக உள்ளனர்.


திருப்பரங்குன்றம் தொகுதி:



திருப்பரங்குன்றம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார்கள் அடர்த்தியாகவும் கணிசமாகவும் உள்ளனர்.
தொகுதியில் முக்கிய பகுதிகளான அவனியாபுரம் , நாகமலை , திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் அகமுடையார் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட பகுதிகளும் இவைகள் தான்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1, அவனியாபுரம்
2, நாகமலை
3, சிலைமான்
4, ஒ.ஆலங்குளம்
5, பெரிய ஆலங்குளம்
6, பனையூர்
7, அய்யனார்புரம்
8, சாமநத்தம்
9, சின்னஅனுப்பானடி
10, பெரியகூடக்கோயில்
11, நிலையூர்
12, பெருங்குடி
13, வில்லாபுரம்
14, சின்னஉடப்பு
15, நெடுங்குளம்
16, விராதனூர்
அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்..
1 திருப்பரங்குன்றம்
2 விரகனூர்
3 கீழக்குயில்குடி
4 தோப்பூர்
5 திருநகர்
6 வடிவேல்கரை
7 ஐராவதநல்லூர்
8 சிந்தாமணி
9 பசுமலை
10 புளியங்குளம்
11 ஹார்விபட்டி
12 கொம்பாடி
இத்தொகுதியில் 55000 அகமுடையார் வாக்காளர்கள் உள்ளனர்.இது தவிற மற்ற தொகுதிகளில் பரவலாக உள்ளனர்.

நன்றி: சகோதரர் ராகவன் அகமுடையார்

Saturday, April 15

திருமால் தேவர்

திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் சாப்டூர் ஜமீனில் மதயானை ஒன்று அப்பகுதியை நாசம் செய்து  கொண்டிருந்தது ஒருநாள் அரண்மனைக்கு உள் நுளைய முயன்றது உடனே திருமால் தேவர் தன் வாள் கொண்டு யானையின் துதிக்கையை வெட்டி அந்த யானையை அடக்கினார்.



இதனை கண்ட திருமலை நாயக்கர் உங்களுக்குக்கு என்ன வேண்டும் என கேட்க அதற்கு திருமால் தேவர் மேலமன்று (திருமங்கலம் மேற்கு) பகுதியின் வரிவசூல் செய்யும் உரிமை கேட்க அவர் விருப்படியே அந்த பகுதியின் தலைவராகவும் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றார் திருமால் தேவர்.
33 கிராமங்களை கொண்ட மேல மன்று இராஜ குல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர் இன்று வரை மேல மன்று தலைவர் திருமால் தேவர் வாரிசுகளே.





தகவல் உதவி:சிவா அகமுடையார்

Friday, March 17

கவிஞர் முத்துலிங்கம்

சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் சுப்பையா சேர்வை - குஞ்சரம் தம்பதிக்கு மகனாகப் மார்ச் 20, 1942-ல் பிறந்தவர் முத்துலிங்கம்.



சிவகங்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்தார்.
1966 முதல் 1972 வரை முரசொலியில் துணையாசிரியராகவும், 1972 முதல் 1975 வரை அலை ஓசை யில் துணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் அவர் எழுதிய முதல் பாடல் பொண்ணுக்குத் தங்க மனசு படத்துக்காக. படத்தின் இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷ். இதில் வெங்கடேஷுக்கு உதவியாளராக இருந்தவர்தான் இளையராஜா.இசைஞானி இளையராஜாவுக்கு முதன் முதலில் பாட்டெழுதிய கவிஞர் என்ற பெருமையும் முத்துலிங்கத்துக்கு உண்டு.
1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெரும்பாலும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
அமரர் எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்ற, நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கவிஞர் முத்துலிங்கம். எம்ஜிஆர் மீது இன்றுவரை மாறாத விசுவாசம், பாசத்துடன் இருப்பவர் முத்துலிங்கம்.
முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர், அரசவைக் கவிஞர் என கவிஞரை உயரிய இடத்தில் வைத்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர்.

விருதுகள்:

தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கானவிருது (1978-79), கலைமாமணி விருது (1981), பாவேந்தர் பாரதிதாசன் விருது (1981), கலைத்துறை வித்தகர் விருது (1991), கபிலர் விருது (2013) பெற்றுள்ளார்.
2006-ல் தினத்தந்தி ஆதித்தனார் விருது பெற்றார். 2013-ல் கண்ணதாசன் விருது, 2008-ல் வாலி விருது, சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் கவுரவ டாக்டர் படம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

எழுதிய நூல்கள்:

1. வெண்ணிலா (பாரதிதாசன் முன்னுரையுடன் வெளிவந்த முதல் கவிதைத் தொகுதி) வெளிவந்த ஆண்டு 1961.
2. எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்
3. எம்.ஜி.ஆர். உலா
4. எம்.ஜி.ஆர். அந்தாதி
5. முத்துலிங்கம் கவிதைகள்
6. என் பாடல்கள் சில பார்வைகள் (கட்டுரை)
7. காற்றில் விதைத்த கருத்து (கட்டுரை - இதற்குத்தான் தினத்தந்தி ஆதித்தனார் விருது கிடைத்தது)
8. பாடல் பிறந்த கதை (கட்டுரை)
9. உலாப் போகும் ஓடங்கள் (கவியரங்கக் கவிதைகள்)
10. திரை இசைப் பாடல்கள் (இரண்டு தொகுதி)
11. முத்துலிங்கம் திரைப்பாடல் முத்துக்கள்
12. பூகம்ப விதைகள் (கவிதைகள்)


Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...