Saturday, April 15

திருமால் தேவர்

திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் சாப்டூர் ஜமீனில் மதயானை ஒன்று அப்பகுதியை நாசம் செய்து  கொண்டிருந்தது ஒருநாள் அரண்மனைக்கு உள் நுளைய முயன்றது உடனே திருமால் தேவர் தன் வாள் கொண்டு யானையின் துதிக்கையை வெட்டி அந்த யானையை அடக்கினார்.



இதனை கண்ட திருமலை நாயக்கர் உங்களுக்குக்கு என்ன வேண்டும் என கேட்க அதற்கு திருமால் தேவர் மேலமன்று (திருமங்கலம் மேற்கு) பகுதியின் வரிவசூல் செய்யும் உரிமை கேட்க அவர் விருப்படியே அந்த பகுதியின் தலைவராகவும் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றார் திருமால் தேவர்.
33 கிராமங்களை கொண்ட மேல மன்று இராஜ குல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர் இன்று வரை மேல மன்று தலைவர் திருமால் தேவர் வாரிசுகளே.





தகவல் உதவி:சிவா அகமுடையார்

Friday, March 17

கவிஞர் முத்துலிங்கம்

சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் சுப்பையா சேர்வை - குஞ்சரம் தம்பதிக்கு மகனாகப் மார்ச் 20, 1942-ல் பிறந்தவர் முத்துலிங்கம்.



சிவகங்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்தார்.
1966 முதல் 1972 வரை முரசொலியில் துணையாசிரியராகவும், 1972 முதல் 1975 வரை அலை ஓசை யில் துணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் அவர் எழுதிய முதல் பாடல் பொண்ணுக்குத் தங்க மனசு படத்துக்காக. படத்தின் இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷ். இதில் வெங்கடேஷுக்கு உதவியாளராக இருந்தவர்தான் இளையராஜா.இசைஞானி இளையராஜாவுக்கு முதன் முதலில் பாட்டெழுதிய கவிஞர் என்ற பெருமையும் முத்துலிங்கத்துக்கு உண்டு.
1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெரும்பாலும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
அமரர் எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்ற, நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கவிஞர் முத்துலிங்கம். எம்ஜிஆர் மீது இன்றுவரை மாறாத விசுவாசம், பாசத்துடன் இருப்பவர் முத்துலிங்கம்.
முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர், அரசவைக் கவிஞர் என கவிஞரை உயரிய இடத்தில் வைத்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர்.

விருதுகள்:

தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கானவிருது (1978-79), கலைமாமணி விருது (1981), பாவேந்தர் பாரதிதாசன் விருது (1981), கலைத்துறை வித்தகர் விருது (1991), கபிலர் விருது (2013) பெற்றுள்ளார்.
2006-ல் தினத்தந்தி ஆதித்தனார் விருது பெற்றார். 2013-ல் கண்ணதாசன் விருது, 2008-ல் வாலி விருது, சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் கவுரவ டாக்டர் படம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

எழுதிய நூல்கள்:

1. வெண்ணிலா (பாரதிதாசன் முன்னுரையுடன் வெளிவந்த முதல் கவிதைத் தொகுதி) வெளிவந்த ஆண்டு 1961.
2. எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்
3. எம்.ஜி.ஆர். உலா
4. எம்.ஜி.ஆர். அந்தாதி
5. முத்துலிங்கம் கவிதைகள்
6. என் பாடல்கள் சில பார்வைகள் (கட்டுரை)
7. காற்றில் விதைத்த கருத்து (கட்டுரை - இதற்குத்தான் தினத்தந்தி ஆதித்தனார் விருது கிடைத்தது)
8. பாடல் பிறந்த கதை (கட்டுரை)
9. உலாப் போகும் ஓடங்கள் (கவியரங்கக் கவிதைகள்)
10. திரை இசைப் பாடல்கள் (இரண்டு தொகுதி)
11. முத்துலிங்கம் திரைப்பாடல் முத்துக்கள்
12. பூகம்ப விதைகள் (கவிதைகள்)


Saturday, March 11

மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர்


ரெத்தினசாமி தேவர் அவர்கள் 1971ஆம் ஆண்டு பார்வர்டு ப்ளாக் சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏவாக  வெற்றி பெற்றார். இவருடைய மகள் இராமநாதபுரம் முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன் ஆவார்.

படங்கள்: www.agamudayarotrumai.com

S.S.சந்திரன்


S.S.சந்திரன் அவர்கள்1956ஆம் ஆண்டு பிறந்தார் 15வயதில் இருந்தே நடிக்க தொடங்கி 700க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார்.


நகைச்சுவை நடிகர்,தயாரிப்பாளர்,அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர்.அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தவர்.அக்டோபர் 9, 2010 அன்று மாரடைப்பில் காலமானார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...