Wednesday, September 2

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஓர் தமிழக அரசியல்வாதி . கலசப்பாக்கம்
தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தார்.தமிழ் நாடு வேளான் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட


செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் இதன் காரணமாக கிருஷ்ணமூர்த்தி கைது செய்யபட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்க பட்டார்

வரதராஜன் முதலியார்

வரதராஜன் முனிசுவாமி
முதலியார் அல்லது வரதா பாய் (1926–
1988) என்றழைக்கப்படுமிவர்,
தூத்துக்குடியில் பிறந்து
மும்பையில் தாதாவாக
திகழ்ந்தவராவார். 1970-களில்
மிகப்பிரபலமான மாஃப்பியா
கும்பலில் இருந்த ஹாஜி
மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும்
இணைப்புப் பாலமாக விளங்கினார்.
தொழிவரதராஜன் முனிசுவாமி
முதலியார் அல்லது வரதா பாய் (1926–
1988) என்றழைக்கப்படுமிவர்,
தூத்துக்குடியில் பிறந்து
மும்பையில் தாதாவாக
திகழ்ந்தவராவார். 1970-களில்
மிகப்பிரபலமான மாஃப்பியா
கும்பலில் இருந்த ஹாஜி
மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும்
இணைப்புப் பாலமாக விளங்கினார்.

தொழில்:

1960-களில் மும்பை தொடருந்து
நிலையத்தில் சுமைதூக்குக்
கூலியாக தன்னுடைய ஆரம்ப
காலத்தில் வேலை செய்தார். பின்னர்,
போதை பொருட்கள் கடத்தல்
தொழிலும், மக்தா என்னும்
சூதாட்டத்திலும் ஈடுபட்டார்.
இவ்வாறு படிப்படியாக வளர்ந்த
வரதராஜன் பின்னர் கொலை
செய்தல், கொள்ளை மற்றும் கடத்தல் என
அனைத்திலும் ஈடுபட்டதின்
விளைவாக 1980-களில் மிகப்பெரிய
தாதாவாக உருவானார். இவர் 1980-
களில், கட்டப் பஞ்சாயத்திலும்
ஈடுபட்டார். கரீம் லாலா-விற்கு
பிறகு மிகப்பெரிய
சமூகவிரோதியாக விளங்கினார்.
அச்சமயத்தில், கரீம் லாலா, வரதராஜன்
மற்றும் ஹாஜி மஸ்தான் ஆகிய
மூவரும் மும்பையில் தாதாவாக
திகழ்ந்தனர்.

ஆன்மீகம்

மாத்தூங்கா மற்றும் தாராவி
பகுதிகளில் அதிகமான ஆதிக்கம்
செலுத்தி வந்தார் வரதராஜன். இவர்
மாத்தூங்கா பகுதியில் உள்ள கணபதி
கோயிலில், விநாயக சதூர்த்தி
விழாவை ஆண்டுதோறும் நடத்தி
வந்தார்.

மரணம்

1980-களின் பிற்பாதியில்
மும்பையில் அதிகப்படியான
பஞ்சாலைகள் மூடப்பட்ட பிறகு
இவருடைய செல்வாக்கும்
குறையத்தொடங்கியது. 1980-களின்
இறுதியில், இவர் சென்னைக்குத்
திரும்ப வந்தார். 1988-ம் ஆண்டு
தன்னுடைய 62-ம் அகவையில்
காலமானார்

திரைப்படங்களில்

1987-ம் ஆண்டு, மணி ரத்னம் இயக்கத்தில்
வெளியான நாயகன் திரைப்படத்தில்,
வரதராஜனின் வாழ்க்கையை
அடிப்படையாகக் கொண்டு இருந்தது.
கமல் ஹாசன் அக்கதாப்பாத்திரத்தில்
நடித்திருந்தார்.
தயவான் என்ற பெயரில் வினோத்
கண்ணா நடிப்பில் இந்தியிலும்
இப்படம் 21 அக்டோபர், 1988 அன்று
வெளியானது.
தொலைக்காட்சி ஒன்றில்
பேட்டியளித்த, அமிதாப் பச்சன்
அவருடைய அக்னீபாத்
திரைப்படத்திலுள்ள வசனங்கள் வரதராஜ
முதலியார் பயன்படுத்தியதில்
இருந்து எடுக்கப்பட்டது என்று
கூறினார்.

கலைப்புலி எஸ்.தாணு

எஸ் தாணு , ஓர் இந்திய தமிழ்த்
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும்
வெளியீட்டாளராவார்.
திரைத்துறையில் கலைப்புலி என
அறியப்படும் இவர், கலைப்புலி
பிலிம் இன்டர்நேசனல் மற்றும் வி
கிரியேசன் மூலம் திரைப்படங்களை
தயாரித்து வருகிறார்.தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார்

அங்கமுத்து நாயக்கர்

சேலம் மாவட்ட ஆத்தூர் முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் 1962 காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்ற அங்கமுத்து
நாயக்கர் (அகமுடையார்) காமராசரின்
நெருங்கிய நண்பர்.இருவரும்
இணைபிரியா நண்பர்கள்

டி. ஆர். பாலு

தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு
( டி. ஆர். பாலு , பி ஜூன் 15 , 1941)
இந்தியாவின் நடுவண் அரசில்
அமைச்சராகப் பணியாற்றிய ஓர்
அரசியலாளர். இவர் 1957 ஆம்
ஆண்டிலிருந்தே திராவிட
முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து
அரசியலில் பங்களிப்பவர். இவர் 1996
முதல் நான்குமுறை மக்களவையின்
உறுப்பினராகத் தென் சென்னை
மக்களவைத் தொகுதியிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004-ம்
ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை
இந்திய அரசில் கப்பல்துறை மற்றும்
நெடுஞ்சாலை துறை அமைச்சராகப்
பணியாற்றினார். நாடாளுமன்ற
திராவிட முன்னேற்றக் கழக
தலைவராக பணியாற்றியுள்ளார்.

Tuesday, September 1

எம். எஸ். பாஸ்கர்

எம். எஸ். பாஸ்கர் (மு. சோ. பாசுகர் ) என்பவர் ஒரு தமிழ் நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவரது தந்தை முத்துப்பேட்டை சோமுத் தேவர்,தாயார் சத்தியபாமா. இவரது தந்தை நிலக்கிழார் ஆவார். இவருக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர்.முதலாமவர் ஹேமாமாலினி சென்னையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இரண்டாமவர் தாரா மும்பையில் பின்னணிக் குரல்கொடுப்பவராகவும் உள்ளனர்.இவருக்கு தம்பி ஒருவர் உள்ளார்.இவரது தந்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம்.நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப்பாப்பா, செல்வி , திரைப்படங்கள் சிவகாசி , மொழி போன்றவற்றால் பெரிதும் அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின்
சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.



சூரி


மதுரை மாவட்டம் ராஜாக்கூர் என்ற ஊரில் பிறந்த சூரி 1992க்கு திரையுலகம் வந்து கடும் போராட்டத்துக்கு பின் 2004ல் வென்னிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக பல படங்களில் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...