Sunday, August 2

இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு

 இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு 2014ம்  ஆண்டு கண்டுபிடிக்கபட்டது..!


சிதம்பரம் நடராஜர் கோவிலில், துவார ஸ்கந்தர் சன்னிதிக்கு வடதுபுறம் உள்ள நிலை வாயில், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் மன்னரால் அமைக்கப்பட்டது என, கல்வெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் அடுத்த, துவார ஸ்கந்தர் சன்னிதிக்கு வடதுபுறம் நிலை வாயிலும், இடதுபுறம்,காடவர் குல சிற்றரசன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி 1243 –1279) காலத்து கல்வெட்டும் காணப்படுகிறது. இதில்,வடதுபுற, நிலை வாயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இதை, திராவிட வரலாற்று ஆய்வகத்தைச் சேர்ந்த,அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர்கள்,கணபதி முருகன், முத்துக்குட்டி,மணிமாறன் கூட்டாக ஆய்வு செய்துள்ளனர்.


அதன் விவரம்:

ஸ்வஸ்த ஸ்ரீ அவணி ஆளப் பிறந்த;கோப்பெருஞ்சிங்கருக்காக;திருநிலைக்கால செய்வித்தார்;வர முதலிகளில் பெருமாளப்பிள்ளை யான சோழக்கோனார்


என்ற வரிகள் கல்வெட்டில்
காணப்படுகிறது.கோப்பெருஞ்சிங்கன் காடவர் குல குறுநில மன்னன் ஆவான் என,கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு,அவணி ஆளப் பிறந்தான் என்ற பட்டப்பெயர் இருந்தது; இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனைப் பற்றிய குறிப்பு எனஉறுதிப்படுத்தப்படுகிறது.                         இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிர்வாக ஆலோசனைகள் கூற,அகம்படி முதலி என்ற நிர்வாகக் குழு உதவி வந்துள்ளது. வரமுதலி என, குறிப்பிட்டுள்ள பெருமாள் பிள்ளையாகிய சோழக்கோனார் அந்த நிர்வாகக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவர். கோப்பெருஞ்சிங்கன் மன்னர் ஆணைப்படி நிர்வாகக் குழுவில் இருந்த வர முதலி, துவார ஸ்கந்தர் சன்னிதிக்கு வடதுபுறம் உள்ள நுழைவாயில் நிலைக்கல்(நிலை வாயில்) அமைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது கோப்பெருஞ்சிங்கன் மன்னர் காலத்தில், இந்த நிலை வாயில் தான் அதிக புழக்கத்தில் இருந்துள்ளது. மேலும், இந்த நிலை வாயில் தான் ஆதிமூலவர் எனப்படும், மூலட்டானேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பிரதான வழியாக இருந்திருக்க வேண்டும் என, கருதப்படுகிறது. இந்த கல்வெட்டு குறித்து, இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கைகள், தென் இந்திய கல்வெட்டு தொகுதிகளில் குறிப்பிடவில்லை. இதனால், இந்த கல்வெட்டு, இதுவரை, கண்டறியப்படாத கல்வெட்டாகக் கருதப்படுகிறது.மேலும்,கோவில் நடைபாதை படிக்கட்டுகளில் உள்ள கல்வெட்டுகள் ,ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறித்து, திராவிட வரலாற்று ஆய்வக உதவிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.




Saturday, August 1

பண்டைய படைப்பிரிவு

பண்டைய  படைப்பிரிவு


பண்டைய தமிழகத்தில் குடும்ப வழி,குல வழியாக மக்கள் பல தொழில்களை செய்து வந்தார்கள் பின்னர் தொழிலே ஜாதியாக திரிபுற்று ஜாதி ரீதியாக இனக்குழுக்கள் உருவானது  தமிழ் சமூக வரலாறு என்பதை அனைவரும் அறிவோம்.படைத்தொழில் சார்ந்தும் அப்படி சில ஜாதிய இனக்குழுக்கள் உருவானது.அப்படி உருவான இனக்குழுவை மறவர்கள் என்றார்கள்,அதிலும் அவர்களின் சேவைக்கு ஏற்ப பிரிவுகள் உண்டு.

அமரம் சேவகம்:

இப்பிரிவினர் மன்னருக்கு மிகவும் விசுவாசமானவர்கள். இவர்கள் செய்யும் படை சேவைக்கு பணமாக அல்லாமல் அவர்களுக்கு என நிர்வகிக்கவும் வரி வசூலிக்கவும் நிலம் ஒதுக்கிவிடுவார்கள். அதில் கிடைக்கும் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கினை மன்னருக்கு  கொடுத்துவிட்டு 2 பங்கினை வைத்துக்கொள்வார்கள்.மேலும் ஒரு சிறு படையை  உருவாக்கி பயிற்சிபராமரிப்பு செலவுகள் எல்லாம் இவர்கள் பொறுப்பே நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.இவர்களுக்கு தளபதி அல்லது குறுநில மன்னர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும்.இப்பிரிவினரே பெரும்பாலும் தளபதிகளாகவும் ,முக்கியமான படைப்பொறுப்பிலும் இருப்பார்கள்.போர்க்காலங்களில் ஆயுதங்கள், படை என திரட்டிக்கொண்டு மன்னருக்கு உதவ செல்ல வேண்டும். இவர்களில் கோட்டை காவலை பெற்ற குடும்பம் அகமுடையார் எனப்படும்.அகம் என்பது கோட்டை உள் இருப்பவர்கள் எனப்பொருள்.போர்க்காலத்தில் பெரும்படை களத்துக்கு சென்றாலும் கோட்டையை காவல் காக்க இவர்கள் கோட்டையை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும்,அதனையே அகமுடையார்கள் என்று சொல்லப்பட்டு பின்னர்.ஜாதிப்பெயராகவும் மாறியது.கோட்டை முழுவதும் இவர்கள் பாதுகாப்பில் இருக்கும் ,கோட்டைக்குள்,வெளியே இவர்கள் அனுமதி இன்றி யாரும் செல்ல முடியாது. மன்னர் திக்விஜயமாக தூர தேசங்களுக்கு படையுடன் சென்றிருக்கும் வேளையிலும் கவனமாக பாதுகாப்பார்கள். மன்னர் இல்லாத நேரத்தில் எதிரிகள் படை எடுத்து வந்தாலும் கோட்டைக்கதவை மூடிவிட்டு உள் இருந்தே ,கோட்டைக்குள் புக முயலும் முயற்சிகளை முறியடிப்பார்கள்.இது போன்ற பல முற்றுகைகளை முறியடித்த வரலாறு தமிழ் இலக்கியங்களிலும் இருக்கிறது.இப்பொழுது கோச்சடையான் என்ற பெயர் ரஜினி படம் புண்ணியத்தால் மிக பிரபலமாகிவிட்டது. அவர் காலத்தைய முற்றுகை ஒன்றைப்பார்ப்போம்,பாண்டிய மன்னன் கோச்சடையான் 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்,வீரத்திற்கு பெயர் பெற்றவர். அப்போது சேர நாடும்
கோச்சடையான் ஆளுகை கீழ் இருந்தது ,சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க படையுடன் கோச்சடையான் சென்றிருந்த வேளையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாத்தன் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்திருந்தார்,வரும் வழியில் பல்லவர்களை ஒரு கை பார்த்து விட்டு, அப்படியே மதுரைக்கும் வந்தார்.மன்னரும், பெரும் படையும் சேர நாட்டில்
எனவே மதுரைக்கோட்டை வாசலை அடைத்து விட்டு உள்ளிருந்து கோட்டையைப்பாதுகாக்க துவங்கினார்கள்.அப்பொழுது பாண்டிய அரசி கோட்டையில் இருந்தார் அவரே களம் இறங்கி வீரர்களை ஊக்கப்படுத்தி வழி நடத்தி கோட்டையை காவல் காக்க செய்தார் எனவும் தகவல் உண்டு.பெரும் படையுடன் வந்திருந்த விக்கிரமாதித்தன் பல நாட்கள் முற்றுகையிட்டு உள் நுழைய போராடியும் கோட்டைக்காவலர்கள் சுற்று சுவரில் அரணாக நின்று உள் நுழையும் முயற்சிகளை எல்லாம் முறியடித்தார்கள். நாட்கள் செல்லவே விரக்தியடைந்த விக்கிரமாதித்தன் மதுரை வீழ்ந்தது என அவராகவே வெற்றியை அறிவித்துக்கொண்டு மதுரைக்கு அந்த பக்கம் இருக்கும் குறு நில மன்னர்களையும் அடக்கி மொத்த
தமிழகத்தையும் கைப்பற்ற மேற்கொண்டு முன்னேறி திருநெல்வேலி வரை முன்னேறி சென்று முகாமிட்டார். இதற்கிடையே தகவல் கிடைத்த கோச்சடையான் கடுங்கோவத்துடன் பெரும்படையுடன் பாண்டிய நாடு திரும்பி,நேராக நெல்லைக்கு சென்று அங்கே வைத்தே விக்கிரமாதித்தனுடன் மோதினார் கடும் போரில் கோச்சடையானுக்கே வெற்றி கிட்டியது. தப்பித்தால் போதும் என பின் வாங்கி ஓடி வந்த விக்கிரமாதித்தனை காவிரி கரை வரைக்கும் கோச்சடையான் விரட்டி வந்தார்.விக்கிரமாதித்தன் போரில் கிடைக்கும் விழுப்புண்களை பெருமையாக நினைப்பவர் என்பதால் அவருக்கு ரணரசிகா என்று பட்டப்பெயர் உண்டு.எனவே விக்கிரமாதித்தனை வென்றதால் ரணதீரன் கோச்சடையான் என பாண்டிய மன்னன் பெயர்ப்பெற்றான்.அகமுடையார்கள் கோட்டைக்காவல்ப்பணியில் பெரும் வல்லமைக்கொண்டவர்கள் என்பதை விளக்கவே இந்நிகழ்வை சொன்னேன். அமரம் சேவகம் என சொல்வது ஏன் எனில் இது பரம்பரையாக கொடுக்கப்படும் வேலை.அப்பா கோட்டை தலைவராக சமஸ்தான தலைவராக இருந்து இறந்தால் அப்பணி அவரது மகனுக்கு செல்லும.

இதற்கு அடுத்த படை சேவகம்

கட்டுப்பிடி சேவகம்:

அதாவது கட்டுப்படியாக கூடிய ஒரு ஊதியத்துக்கு படை சேவகம்செய்வது,பெரும்பாலும் மறவர் எனப்படும் இனக்குழுக்களுக்கு கொடுக்கப்படும். செலவினை சமாளிக்க நிலத்தில் கிடைக்கும் வருவாய் பயன்படும்,ஆனால் இந்த பணி பரம்பரையாக சேராது.ஒரு சிறு படைப்பிரிவுக்கு தலைவராக இருந்து ஒருவர் இறந்தால்
அவரது வாரிசு தலைவராக முடியாது. அடுத்த திறமையானவருக்கு பொறுப்பினை மன்னரே பார்த்து வழங்குவார்.வாரிசும் திறமையான வீரர் எனில்வாய்ப்பு கிடைக்கலாம் ஆனால் கட்டாயமில்லை. இவர்களுக்கும் உபதளபதி அல்லது சமஸ்தான தலைவர் அந்தஸ்தும் கொடுக்கப்படும்.போர்க்காலங்களில் ஆயுதம் ,படை என திரட்டிக்கொண்டு சென்று மன்னருக்கு உதவ வேண்டும். 

மூன்றாவது படைச்சேவகம் ,
கூலிப்படை சேவகம்:

போர் நடக்கும் காலத்தில் உடல் வலிமையான, போர்திறன் உள்ளவர்களை தினக்கூலி அடிப்படையில் படையில் சேர்த்துக்கொள்வார்கள். இப்படை சேவகம் செய்பவர்கள் பெரும்பாளும் கள்ளர் இனக்குழு மக்களே. இவர்களின் நிரந்தர தொழில் களவாடுதல்.ஒவ்வொரு சமஸ்தான படைத்தலைவர் அவர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த கள்ளர் இனக்குழு மக்களை திரட்டிக்கொண்டு வருவார்.போர்க்காலத்தில் சேவை செய்ய முன் வரும் மக்கள் என்பதால் சமஸ்தான தலைவர் இவர்களுக்கு ஒரு சலுகை அளிப்பார்,சொந்த சமஸ்தானத்தில் திருடக்கூடாது, அப்போதைய பொது வழிகள் என அறியப்பட்ட சாலைகளில் மட்டும் களவாடலாம் என்பதாகும்.எனவே ஒரு குறு நில மன்னர்/சமஸ்தானத்தை சேர்ந்த கள்ளர்கள் அங்கே களவாட மாட்டார்கள்,பக்கத்து சமஸ்தானங்களிலும்,பொது வழிகளிலும் யாத்ரிகர்கள்,வியாபாரிகளை தாக்கி கொள்ளையடிப்பார்கள்.போர்க்காலத்தில் உதவி செய்ததற்கு அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமை இது.இம்மூன்று இனக்குழுக்களையும் பெரும்பிரிவாக கொண்டு முக்குலத்தோர் என பொதுவாக அழைக்கப்படுகிறது.இப்படித்தான் பழம் தமிழகத்தில் படைச்சேவகம் செய்த இனக்குழுக்களைப்பற்றி வரலாற்று ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சில இனக்குழுக்களும் படை சேவகம் செய்துள்ளார்கள் ஆனால்
அவர்களும் இம்முறையின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் உப பிரிவாக செயல்ப்பட்டவர்களே.



Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...